India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் தலைமை நீரேற்று நிலையத்தில் மின் வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதில் பிரதான குழாய்களில் உள்ள கசிவுகள் சரி செய்யப்படவுள்ளதால் இன்று (ஆக.20) மற்றும் நாளை (ஆக.21) ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட வருவாய் அலுவலர்களாக பணியாற்றி வந்த அதிகாரிகள் வெவ்வேறு பதவிகளுக்கு இட மாற்றம் செய்யப்பட்டனர். அதில் சிவகங்கை மாவட்டத்தில் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக செல்வ சுரபி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய்த் துறை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு பணியாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்காக டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பிண்டல் இன்று (ஆக.19) வருகை தந்தார். அவரை திருப்புவனம் நீதிமன்ற நீதிபதி சந்தான குமார் வரவேற்றார். தொடர்ந்து கீழடி அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பார்வையிட்டார். அகழாய்வு குறித்து தொல்லியல் துறையினர் நீதிபதிக்கு எடுத்துரைத்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (ஆக.19) இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 29 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரை மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கீழடிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தையும் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றியுள்ளனர். டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அப்துல் குத்தூஸ், சுந்தர்மோகன் உள்ளிட்டோர் நேற்று கீழடியில் அகழாய்வு நடந்த இடம், அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். இளையான்குடி நீதிபதி ஹரிராமகிருஷ்ணன் உடன் சென்றார்.
சிவகங்கை காரைக்குடி சேர்ந்தவர் முகமது சுகைல் 22. இவர் சென்னையில் விடுதி ஒன்றில் தங்கி அதே பகுதியில் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சென்னையில் பப் ஒன்றில் தோழியருடன் நடனமாடிய போது அதே இடத்தில் மயங்கி விழுந்தார். பின் ஆம்புலன்ஸ்மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தேவகோட்டை வட்டத்தில் வரும்21ஆம் தேதியன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 4.30 மணி முதல் 6 மணி வரை பொதுமக்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் தேவகோட்டை வட்டம் ராம் நகரில் அமைந்துள்ள எஸ்.எம்.ஜி மஹாலில் நடைபெற உள்ளது. பொது மக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இரணியல்பட்டி பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் இரணியல்பட்டியில் அப்துல்காதர் என்பவருக்குச் சொந்தமான 2000 செவ்வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமாகின. கடன் வாங்கி வைத்த வாழை மரங்கள் சேதமடைந்ததால் 15 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.
நிதி நிறுவனம் நடத்தி ரூ500 கோடி மோசடி செய்த வழக்கில், சிவகங்கை பாஜக எம்பி வேட்பாளர் தேவநாதன் அண்மையில் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு (WIN TV) சீல் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய வீடு, அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று சோதனை செய்யப்பட்டு, ரூ.4 லட்சம், 2 கார்கள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு பின்வருமாறு: சிவகங்கை 11.00 மி.மீ, இளையான்குடி 28.00 மி.மீ, திருப்பத்தூர் 44.50 மி.மீ, காரைக்குடி 48.00 மி.மீ, காளையார்கோவில் 47.60 மி.மீ, சிங்கம்புணரி 8.00 மி.மீ லேசான மழையும். மொத்த மழையின் அளவு 187.10 மி.மீ. சராசரி மழை அளவு 20.79 மி.மீ. மானாமதுரை, திருபுவனம், தேவகோட்டை போன்ற பகுதிகளில் மழை பதிவாகவில்லை.
Sorry, no posts matched your criteria.