India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலா தொழில் முனைவோர்கள், தமிழக அரசின் சுற்றுலா விருதுகளுக்கு https://www.tntourismawards.com/ என்ற இணையதளத்தின் வாயிலாக, வருகின்ற 26.08.2024 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு 20.08.2024 க்குள் விண்ணப்பிக்கலாம் என்ற நிலையில் தமிழக அரசு தற்போது நாட்களை நீட்டித்துள்ளது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் கடனுதவி வழங்குவது மட்டுமின்றி தொழில் முனைவோருக்கு மூலப்பொருள் கொள்முதல், சந்தைபடுத்துதல், தொழில் திட்ட ஆலோசனை, சுற்றுச்சூழல் மேலாண்மை தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் முகாம் காரைக்குடியில் உள்ள தொழில் முதலீட்டு கிளை அலுவலகத்தில் செப்.6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு பயன்பெருமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று (ஆக.20) இரவு ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் மாவடடத்தில் பெய்த மழை அளவு வெளியாகி உள்ளது. அதன்படி சிங்கம்புணரி 38.20 மி.மீட்டர், திருப்புவனம் 8.40மி.மீ, திருப்பத்தூர் 72.20 மி.மீ, சிவகங்கை 29.00 மி.மீ, மாவட்டத்தில் சராசரியாக 24.42 மி.மீ மாவட்டத்தில் மொத்தமாக 219.80 மி.மீ மழை இன்று காலை 6 மணி நிலவரப்படி பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சாலைகிராமம் பேருந்து நிலையம் அருகே சிவகங்கை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சார்பு ஆய்வாளர் சிவப்பிரகாசம் தலைமையில் காவலர்கள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த வாகனத்தினை நிறுத்தி சோதனை செய்ததில் 1250 கிலோ ரேஷன் புழுங்கல் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சாலைகிராமத்தை சேர்ந்த மணிமுத்து என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்
மானாமதுரை சிப்காட் அருகே உள்ள ராஜேந்திரன் நகரில் வசித்து வருபவர் அர்ச்சுனன்(24). இவரிடம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே உள்ள அண்ணாநகரில் வசித்து வரும் சேத்ரோ என்ற இளைஞர் தான் போலீஸ் என்று கூறி போலி அடையாள அட்டையை காட்டி ரூபாய் 28 ஆயிரத்தை ஏமாற்றியுள்ளார். இவரை மானாமதுரை சிப்காட் காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை அருகே நாட்டாகுடி கால்வாயில் கோழி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாக கிராமத்தினர் புகார் தெரிவித்தனர். கால்வாயில் கோழிக்கழிவுகளை கொட்டுவதால் கிராமத்தில் தூர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றன. இதனால் ஊரை விட்டே செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் திருமண வரனே கிடைப்பதில்லை என்றும் அக்கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் வருகின்ற 22ஆம் தேதியன்று எஸ்.புதூர் வட்டாரத்திற்குட்பட்ட 7 கிராமங்களுக்கும்,
மானாமதுரை வட்டாரத்திற்குட்பட்ட 13 கிராமங்களுக்கும், திருப்பத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட 6 கிராமங்களுக்குமான முகாம்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பெய்த மழையில் அளவு வெளியாகியுள்ளது. அதன்படி, இளையான்குடியில் 5.00 மி.மீ, திருப்புவனம் 15.20 மி.மீட்டரும்
திருப்பத்தூரில் 52.80 மில்லி மீ, சிங்கம்புணரி 94.0மி.மீ, காரைக்குடியில் 2.00 மி.மீ மாவட்டத்தில் மொத்தமாக 169.0 மி.மீ மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
சிவகங்கை தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் MERIT பட்டியல் வெளியாகியிருக்கிறது. சிவகங்கை தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளாமானோர் விண்ணப்பித்திருந்தனர். <
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் பெண் காவலரிடம் இதே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் அலாவுதீன் என்பவர் தவறாக நடந்து கொண்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர் தனது காவல் நிலைய உயர் அதிகாரியிடம் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். காவலர் அலாவுதீனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.