India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சிராப்பள்ளியில் அன்பில் அறக்கட்டளையின் 25ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு கல்விச் சேவையாற்றிய பெருந்தகையாளர்களுக்கும் , கல்வி அலுவலர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் “அன்பில்-25 விருது” இன்று வழங்கப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்டம் பொதுத் தேர்வில் மாநிலம் அளவில் இரண்டாமிடம் பெற்றமைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கரங்களால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து விருது பெற்றார்.
சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தம் 2025 முன்னேற்பாடுகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை பார்வை செய்து முன்மொழிவுகள் அனுப்பிட கோரப்பட்டது. இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தலைமையில் நாளை(29/08/2024) நடைபெற உள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளினால் தடை செய்யப்பட்டுள்ள,
ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்களை வளர்ப்பது மற்றும்
விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக புகார்கள் ஏதேனும் பெறப்படின் அம்மீன்களை முற்றிலும் அழித்திட வேண்டி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்களும் இவ்வகை மீன்களை கொள்முதல் செய்திட வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
திருப்புவனம் பூவந்தி முதியோர் இல்லம் அருகே 17 வயதுடைய சிறுவன் இருசக்கர வாகனத்தில் நேற்று அதிவேகமாக சென்றதால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில், ஓட்டுநர் உரிமம் இல்லாத நபர்களுக்கு வாகனம் கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். அவ்வாறு மீறும் பட்சத்தில் பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்குடியில் சூரக்குடி சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் தங்கியுள்ள நோயாளிகள், பாலூட்டும் தாய்மார்கள் என 5 பேருக்கு நேற்று(ஆக.27) அரசு மருத்துவமனையில் அருகே உள்ள உணவகத்தில் இட்லியும், சாம்பாரும் வாங்கி வந்து கொடுத்துள்ளனர். அவற்றை நோயாளிகள் சாப்பிட்டு கொண்டிருந்த போது, இட்லி சாம்பாரில் பல்லி இருந்ததைப் பார்த்து நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நிழல் காண இயலாத தினம் சிவகங்கை காளையார்கோவில் இளையான்குடி ஒன்றியங்களில் இன்று மதியம் 12:17 மணிக்கும் மானாமதுரை திருப்புவனம் ஒன்றியங்களில் இன்று மதியம் 12:18 மணிக்கும் நிழல் காண இயலாத தினம் நடக்கிறது. வருடத்தில் ஏப்ரல் மாதத்தில் ஒருநாளும் ஆக. மாதத்தில் ஒருநாளும் நிழல் காண இயலாத நிகழ்வை குறித்த நேரத்தில் காண அனைவரும் காண மாவட்ட அறிவியல் செயலாளர் ஆரோக்கியசாமி அழைப்பு.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்த 10ம் கட்ட அகழாய்வில் கிடைத்த சுடுமண் குழாய்களும், 7ம் கட்ட அகழாய்வில் கிடைத்த சுடுமண் குழாய்களும் ஒரே மாதிரியான அமைப்பை கொண்டவையாக உள்ளன. கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 10ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. ஆறு குழாய்கள் இணைக்கப்பட்ட 174 செ.மீ., நீளம் கொண்ட வடிகால் சுடுமண் குழாய் போன்ற அமைப்பு சமீபத்தில் கண்டறியப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி செந்தில்குமார். இவரிடம் கடந்த 2008ஆம் ஆண்டில் வேலங்குடி வி.ஏ.ஓ.,வாக இருந்த காந்தி, இடம் தொடர்பான புல வரைபடம் அடங்கல் சான்று வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கியதாக கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார் காந்தியை கைது செய்தனர். இவ்வழக்கில் நேற்று வி.ஏ.ஓ. காந்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி செந்தில் முரளி உத்தரவிட்டார்.
மீன் வளர்ப்போர், கண்மாய்களில் மீன் பாசி
குத்தகை எடுப்போர் மற்றும் மாவட்ட மீன் வளர்ப்போர் அனைவரும் உறுப்பினராக தங்களது பண்ணை குட்டைகளை பதிவு செய்திடல் வேண்டும் அல்லது முகவரியிலோ, நேரிலோ அல்லது 04575 – 240848 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9384824553 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கமலை என்ற கிராமத்தில் பிறந்து ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டே மருத்துவ கனவை எட்டிப்பிடித்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாவார். அவர் மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டிலும், மற்றொருவர் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிலும் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.