India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை சார் பதிவாளர் அலுவலகம் 1-ல் பணி புரியும் சார்பதிவாளர் ஈஸ்வரன் கோலாந்தி கிராமத்தைச் சேர்ந்த அற்புதம் என்பவரிடம் பத்திரப்பதிவு பிழை திருத்தம் செய்ய ரூபாய் 18000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மறுத்த அற்புதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவியுடன் ரசாயனம் தடவிய நோட்டை சார் பதிவாளர் ஈஸ்வரன், புரோக்கர் கண்ணன் ஆகியோரிடம் ஒப்படைக்கும் போது அதிரடியாக கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்ட அரங்கில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) சார்பில் தொழிற்கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், தொழில் முனைவோர்களுக்கு கடன் அனுமதிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் இன்று (ஆக-29) வழங்கினார். உடன் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் நிதி ஆலோசகர் பாண்டா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
மானாமதுரை காவல் நிலையத்தில் ஃபிளக்ஸ் பிரிண்டிங் செயல்பாடுகளை முறைப்படுத்துவது தொடர்பாக ஃப்ளெக்ஸ் மற்றும் பேனர் பிரிண்டர்கள் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் டிஎஸ்பி நிரேஷ் தலைமையில் இன்று(ஆக-29) நடைபெற்றது. இதில், வருகின்ற விநாயகர் சதுர்த்தி அரசியல் தலைவர்களின் நினைவஞ்சலி மற்றும் குருபூஜை விழாவில் சட்டத்திற்கு புறம்பாக பிளக்ஸ் பேனர்கள் அடிக்க கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் மீன் விரலிகளை வாங்க விரும்பும்
மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள், கண்மாய்களில் மீன்பாசி
குத்தகை எடுப்போர் மற்றும் மீன் விரலிகள் உற்பத்தி செய்வோர், பிரவலூர் அரசு மீன் விதை வளர்ப்பு பண்ணையினை
தொடர்பு கொள்ளலாம். மேலும், 04575 – 240848 என்ற தொலைபேசி எண் அல்லது மீன்வள ஆய்வாளரை 9384824553 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், இன்று(ஆக.29) காலை 11 மணி அளவில் கொடி மரம் அருகே உற்சவ விநாயகர் அங்குசத்தேவர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை(ஆக. 30) காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தின் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். மேலும், இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள 12 ஏ.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி துணை எஸ்.பி.யாக அங்கிட் அசோக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு காரைக்குடி துணை எஸ்.பி.யாக பிராகாஷ் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை கீழடி அருகே பசியாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மஹாலில் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி வைகை உழவர் குழு சார்பில் விதை நீர் திருவிழா நடைபெற இருக்கிறது. இதில் 20 வகையான நெல் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அது மட்டுமல்லாமல் ராமநாதபுரத்தை மாவட்டத்தைச் சேர்ந்த தில்லைநாயகம் நெல்லில் வரும் விவசாயிகளுக்கு உணவு சமைத்து வழங்கப்படும் என்று வைகை உழவர் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள், “SEED” திட்டத்தின் கீழ் நிலம் வீடு மற்றும் வீட்டுமனைப்பட்டா வீடுகள் கட்ட நிதியுதவி வழங்குதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் www. dwbdnc. dosje. gov. in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
கட்டுக்குடிபட்டி கிராமத்திற்கு திருச்சியில் இருந்து வந்து சென்ற தனியார் பேருந்து தற்போது இயக்கப்படாததால் நாளை சாலை மறியல் போராட்டம் என மதியம் வேடூ செய்தியில் வெளியானது. உடனே இது குறித்து தனியார் பேருந்து மேனேஜர்(ம)பொதுமக்கள் உலகம்பட்டி காவல்நிலையத்தில் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு வார காலத்திற்குள் பஸ் கட்டுக்குடிப்பட்டி வரும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.