India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை வேளாண்மை இணை இயக்குநர் லட்சுமி பிரபா கூறியதாவது, விவசாய பணிக்காக யூரியா 4490, டி ஏ பி 1001, பொட்டாஸ் 500, காம்ப்ளக்ஸ் 2247, சூப்பர் பாஸ்பேட் 36 டன் வரை உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தனியார் உரக்கடைகளில் இருப்பு உள்ளதாக வேளாண்மை கூட்டுறவு இணை இயக்குநர் அறிவித்துள்ளார். இதன் மூலம் விவசாயிகள் தங்களது ஆதார் கார்டுகளை கொடுத்து உரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட அளவில் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு முடிய பயின்று வரும் மாணவர்கள் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட அளவில்
பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு முடிய
பயின்று வரும் மாணாக்கர்கள்
திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் நெல் நடவுக்கு முன் நிலத்தில் 2,500 ஏக்கரில் விவசாயிகள் தக்கை பூண்டு சாகுபடி செய்துள்ளனர். இதற்காக மானிய விலையில் விவசாயிகளுக்கு அரசு 51.7 டன் தக்கை பூண்டு விதை வழங்கியுள்ளது. இந்த பயிரை மண்ணில் மடக்கி உழுவதன் மூலம் மண்வளம் காக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொண்ட சோதனையில் 2215 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 123 கடைகளுக்கு, மொத்தமாக ரூ.72,15,000 அபாராதம் விதிக்கப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக பொதுமக்கள், 10581 என்ற கட்டணமில்லா அலைபேசி அல்லது 9080255322 என்ற வாட்சப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரு சில பகுதிகளில் பெய்த மழைஅளவு வெளியாகி உள்ளது. அதன்படி அதிகபட்சமாக சிங்கம்புணரி 14.60 மி.மீ, தேவகோட்டை 6.20 மி.மீ, திருப்புவனம் 4.20 மி.மீ திருப்பத்தூர் 2.50 மி.மீ மாவட்டத்தில் சராசரியாக 3.06 மி.மீ மாவட்டத்தில் மொத்தமாக 27.70 மி.மீ மழை இன்று காலை 6 மணி நிலவரப்படி பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித் தலைமையில் நடைபெற்றது. அதில் சிவகங்கை மாவட்ட வங்கி கிளைகள் மூலம் 2024-25 ஆண்டிற்குள் ரூ.17,256 கோடி கடனாக வழங்க நிர்ணயித்துள்ளோம். விவசாய பயிர் கடனாக ரூ.13,376 கோடியும், தொழில் வளர்ச்சிக்கு ரூ.1,437 கோடியும், முன்னுரிமை கடனாக ரூ.207 கோடியும், மொத்தம் ரூ.17,256 கோடி கடனாக வழங்கப்படும்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே மள்ளல் ஊராட்சி குருந்தங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே நேரத்தில் அம்மை நோய் வந்துள்ளது. இதனால் அந்த மாணவர்கள் பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளனர். இது பெற்றோர் இடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் 353 வாக்குச்சாவடிகள், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 346 வாக்குச்சாவடிகள், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 333 வாக்குச்சாவடிகள், மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதியில் 324 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1357 வாக்குச்சாவடிகளின் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை தேசிய & மாநில கட்சியினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் ஆஷா அஜீத் நேற்று வெளியிட்டார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக: 29) மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் வாக்குச்சாவடிகள் வரைவு பட்டியல் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு, வாக்காளர் வரைவு பட்டியலை பெற்று கொண்டனர். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட துணைத் தலைவர் சுகனேஸ்வரி,
மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.