India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலத்தில் நேற்று வைரமுத்து பேசுகையில், “சேலத்தில் தான் தமிழ்நாட்டு முதலமைச்சர்களுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது என்பதை தமிழ்நாட்டு வரலாறு மறந்து விடக்கூடாது. கலைஞரும், எம்.ஜி.ஆரும் சேலத்தின் காற்றை சுவாசித்து, சேலத்தின் தண்ணீரை குடித்து, சேலத்தின் சோற்றை உண்டு தான் தங்கள் கனவுகளையும், தகுதிகளையும், ஆற்றலையும், லட்சியங்களையும் வளர்த்துக் கொண்டார்கள். இது லட்சிய பூமி என்றார்.
சேலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, “எங்கள் காதலுக்குரிய பூமி சேலம், உழைப்பாளிகளின் பூமி, சேலம் உருக்காலையின் பூமி; ஒரு பக்கம் கனி, இன்னொரு பக்கம் கனிமம், கனி கொண்ட ஊரும், சேலம் தான். மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற கலைக்கூடத்தை நிறுவி கலை கொண்ட ஊரும் சேலம் தான்” என பேசினார்.
ஹசேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஜன. 26 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
குரூப் டி பிரிவில் சேலத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணியும், சண்டீகர் அணியும் பலப் பரீட்சை நடத்தியது. இதில் சண்டீகர் அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபாரமாக வீழ்த்தி அசத்தியிருக்கிறது. சேலத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான தேசிய வருவாய் வழி, திறன் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுவோருக்கு 9 முதல் 12 வரை மாதம் 1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்தேர்வு வரும் பிப்.22- ல் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க ஜன.29 வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்யூங்கள்.
சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று (ஜன.26) நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பிருந்தாதேவி தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை வழங்கினார். விழாவில் காவல்துறை அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இன்று (ஜன.26) நடைபெற்ற 76வது குடியரசுத் தின விழாவில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். விழாவில், மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப., துணை மேயர் சாரதாதேவி, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சேலம் மாவட்ட வெற்றித் தமிழர் பேரவை தொடக்க விழா, இன்று (ஜன.26) மாலை 04.30 மணிக்கு சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
தமிழக காவல்துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து 23 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டது. இதில் மேச்சேரி அழகா கவுண்டனூரைச் சேர்ந்த சென்னை லஞ்ச ஒழிப்புமற்றும்ஊழல் ஒழிப்புதடுப்புதுறை ஐ.ஜியாக சென்னையில் பணிபுரிந்து வரும்துரை குமார்குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் (ஜன.26) இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 8 மணி குடியரசு தினம் ஆட்சியர் கொடியேற்றம் காந்தி ஸ்டேடியம். 2) காலை 8 மணி மேயர் கொடியேற்றம் மாநகராட்சி அலுவலகம். 3) காலை 9 மணி தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலை வாய்ப்பு முகாம் கருப்பூர். 4) காலை 9:30 மணி காங்கிரஸ் கொடியேற்றம். 5) காலை 10 மணி கம்பன் கழக விழா இரண்டாம் நாள் ஏவிஆர் மண்டபம்.
Sorry, no posts matched your criteria.