Salem

News April 8, 2025

கோடை காலத்தில் ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?

image

கோடை காலத்தில் பிரிட்ஜில் வைத்த ஐஸ் வாட்டர் குடிப்பதால் தலைவலி, சளி, இருமல், தொண்டை வலி, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதிலிருந்து விடுபட மண் பானையில் வைக்கப்பட்ட நீரை அருந்தலாம். இதன் மூலம் வளர்ச்சிதை மாற்றம் ஏற்படும். மேலும் இதில் உள்ள தாது சத்துக்கள் ஜீரண சக்தியை உருவாக்கும் என சேலம் மருத்துவர் தனபால் அறிவுறித்தியுள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.

News April 8, 2025

ஓமலூர் அருகே சாலை விபத்தில் முதியவர் பலி

image

ஓமலூர் பல்பாக்கியை சேர்ந்தவர் நல்லதம்பி (60). இவர் தனது உறவினரான சித்தையன், 73. என்பருடன் தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் நோக்கி டூவீலரில் நேற்று முன்தினம் சென்றார். அப்போது முன்னாள் சென்ற டிப்பர் லாரி திடீரென திரும்பியதால், டூவீலர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த நல்லதம்பி உயிரிழந்தார். இது குறித்து ஓமலூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை.

News April 8, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு

image

ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் ரயில் நிலையங்களுக்குட்பட்ட ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு காரணமாக, ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (56107) ஏப்ரல் 08, 15 ஆகிய நாட்களில் மதியம் 02.45 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் 55 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 03.40 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும்.

News April 7, 2025

சேலத்திற்கான புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

image

“சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம் ஆகிய மண்டலங்களிலுள்ள 8 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் நகைக்கடன் வழங்கப்படும். அங்கு பாதுகாப்பு அறையுடன் கூடிய இரும்பு பெட்டகங்கள் நிறுவப்படும்” என்று சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பிறகு அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார். 

News April 7, 2025

மேட்டூரில் பாலியல் தொழில்: தம்பதி கைது

image

எடப்பாடியை சேர்ந்த பாக்கியம், அவரது கணவர் பழனிச்சாமி ஆகியோர், மேட்டூரில் ‘திருமண தகவல் மையம்’ என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற மேட்டூர் போலீசார், தம்பதியினரை கைது செய்து, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 பெண்களை மீட்டனர். மேலும், ஓமலூர் பெண்கள் காப்பகத்தில் அந்த பெண்களை ஒப்படைத்தனர்.

News April 7, 2025

சேலம் வழியாக ராமேஸ்வரத்திற்கு மீண்டும் ரயில்கள்

image

பாம்பன் பாலம் பயன்பாட்டிற்கு வந்ததால் சேலம் வழியாக கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயிலும், ஓஹா- ராமேஸ்வரம் ரயிலும் பழையபடி ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. கோவை-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (16618) நாளை (ஏப்ரல் 08) இயக்கத்தில் பாம்பன் பாலம் வழியே ராமேஸ்வரம் செல்கிறது.

News April 7, 2025

கோடைக்கால இலவச கால்பந்து பயிற்சி!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால இலவச கால்பந்து பயிற்சியை வழங்குகிறது GMFC சேலம். ஏப்.01 முதல் மே 31 வரை GMFC கால்பந்து மைதானத்தில் மாலை 04.00 முதல் மாலை 06.00 மணி வரை இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியைப் பெற்று பயனடையுமாறு மாணவர்களுக்கு அழைப்பு!

News April 7, 2025

சேலம் அங்கன்வாடியில் 417 வேலைவாய்ப்பு

image

சேலம் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 417 பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை<> www.icds.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கலாம். ஊதியமாக ரூ.7700 முதல் 24200 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.23ஆகும். (SHARE பண்ணுங்க.)

News April 7, 2025

சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் ஏப்ரல்.7 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 10 மணி வாராந்திர குறைதீர் கூட்டம் (மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்)▶️காலை 10 மணி மாவட்ட இசை பள்ளி ஆண்டு விழா (ஐயப்பன் கோவில் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகில்) ▶️காலை 9 மணி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு (அயோத்தியபட்டினம்) ▶️காலை 11 மணி இந்திய குடியரசு கட்சி செய்தியாளர் சந்திப்பு கூட்டம் (ஹோட்டல் சென்னிஸ்)

News April 6, 2025

மாணாக்கர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

image

“மாணாக்கர்கள் சமூக வலைதளங்களை தங்களது ஆக்கப்பூர்மான முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் பொழுது மாணாக்கர்கள் தங்களுக்கான விருப்பமுள்ள படிப்புகள் குறித்து தெரிந்து வைத்துக்கொண்டு அதற்குரிய கல்லூரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்” என மாணவ, மாணவிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவுறுத்தல்!

error: Content is protected !!