India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெசவுத் தொழிலுக்கான இயந்திர மானிய விலையில் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கைத்தறி துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 04272414745 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு இன்று காலை தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தெரிய வருகிறது. இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் கால்நடை ஆராய்ச்சி பூங்காவில் உள்ள கட்டிடங்கள் அனைத்து பகுதிகளும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் ரூ.26.13 கோடியில் 3,944 வீடுகள் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு 1,458 வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,486 வீடுகள் சீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2024-25 ஆம் நிதியாண்டிற்கு 20 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 3,500 வீடுகள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஒதுக்கீடு பெறப்பட்டு வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 1,737 ரேஷன் கடைகளிலும் இதுவரை 9 லட்சத்து 50 ஆயிரத்து 963 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 88.16% ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,27,563 கார்டுகளுக்கு வரும் ஜன.25 வரை பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையில் ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர் படைப்பிரிவில் 24 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப, தகுதியான நபர்கள் வரும் ஜன.25-ல் சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் தேர்வில் பங்கேற்கலாம்.10-ம் வகுப்பு கல்வி தகுதி,18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்த குற்ற வழக்கிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அரசின் உத்தரவுப்படி அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அரசின் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்து நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
குப்பம் ரயில் நிலையத்தில் பணிகள் காரணமாக, ஜன.24, பிப்.08 ஆகிய தேதிகளில் சேலம் வழியாக செல்லும் கன்னியாகுமரி- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், திருவனந்தபுரம் வடக்கு- மைசூரு ஜங்சன் எக்ஸ்பிரஸ் ரயில், ஜன.27, பிப்.03 ஆகிய தேதிகளில் மங்களூரு சென்ட்ரல்- யஷ்வந்த்பூர் ஜங்சன் ஆகிய ரயில்கள், மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால் குப்பம் ரயில் நிலையம் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், தும்பல், வேம்படிதாளம், கே.ஆர்.தோப்பூர், அஸ்தம்பட்டி, தேவூர், ஆடையூர், சன்னியாசிப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அந்தந்த மின்நிலையங்களுக்கு உட்பட்டப் பகுதிகளில் நாளை (ஜன.23) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, சமூக நலத்துறை மூலம் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த 2023- 24-ம் ஆண்டில் ‘புதுமைப்பெண்’ திட்டம் மூலம் 8 ஆயிரத்து 87 பேர் பயன்பெற்றுள்ளனர். திருமண நிதியுதவி திட்டத்தில் 1,204 பேர் பயனடைந்துள்ளதாக சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ரதன்கர்- மோலிசர் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே இரு வழிப்பாதை அமைக்கும் பணி நடப்பதால் வரும் ஜன.25 மதியம் 02.55 மணிக்கு கோவையில் புறப்படும் கோவை- ஹிசார் எக்ஸ்பிரஸ் ரயில் பிகனேர் ஸ்டேஷன் வரை மட்டும் இயக்கப்படும். பிகனேர் ஸ்டேஷன் முதல் ஹிசார் வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.