India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வார இறுதி நாட்கள், முகூர்த்தத் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் நாளை (ஜன.31) முதல் பிப்.03 வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலத்தில் இருந்து பெங்களூரு, சென்னை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் சேலத்துக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் 26 பி.டி.ஓ.க்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கெங்கவல்லி தாமரைச்செல்வி (கி.ஊ.) தலைவாசல்; இடைப்பாடி ஆரோக்கியநாதன் கென்னடி (வ.ஊ.) கொளத்தூர்; ஏற்காடு வாசுதேவ பிரபு (வ.ஊ.) மேச்சேரி (கி.ஊ.) ; கொங்கணாபுரம் பழனிசாமி (கி.ஊ.) ஓமலூருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தின் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில், 8, 10, 12, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். https://salem.nic.in/ என்ற முகவரியில் விண்ணபத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், 636001 என்ற முகவரிக்கு அனுப்பவும். நாளை கடைசி: 31.1.25.
சேலம் கலெக்டர் பிருந்தா தேவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினருக்காக, சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில், சிறு தொழில், தனிநபர், கறவை மாடு, ஆட்டோ உள்ளிட்ட கடன் வழங்கும் முகாம் வரும் 10ம் தேதி முதல் அப்பகுதியில் நடைபெற உள்ளதாகவும் சம்பந்தப்பட்டவங்கிகளை அணுகி தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பித்து பெற்று பயனடையுமாறு வலியுறுத்தியுள்ளார்.
சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 10 மணிக்கு தொழுநோய் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் துவக்கிவைப்பு. 2)காலை 10:30 மணிக்கு சங்கமம் விழா நல உதவிகள் வழங்கல் தொங்கும் பூங்கா. 3)காலை 11 மணிக்கு இயல்பு கூட்டம் மாநகராட்சி அலுவலகம். 4) காலை11 மணி இந்து முன்னணி அமைப்பினர் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம்.
ஆத்தூர், கல்பகனூரை சேர்ந்தவர் அறிவுமணி. இவர் கார்த்திகா என்பரை 3 மாதம் முன் திருமணம் செய்து கொண்டார். வாழப்பாடியில் உள்ள மருத்துவமனைக்கு வந்துவிட்டு பின் கல்பகனூரை நோக்கி புறப்பட்டனர். சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் தம்பதியினர் பலத்த காயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்ததில், கார்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவர்கள் தங்களது பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தினை எடுக்கும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘ஹெல்மெட் இல்லையெனில், சாவி இல்லை’ (No Helmet, No Key)என்ற பிரச்சார இயக்கத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, மாநகர காவல் ஆணையாளர் பிரவீன்குமார் அபினபு ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி,ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஜனவரி 29 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்
ஓசூரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சஞ்சய், தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பதக்கம் வென்ற இளைஞருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
“தந்தை ராமதாஸோடு மல்லுக்கட்டி கொண்டிருக்கும் அன்புமணிக்கு வன்னியர்களுக்கு திமுக செய்தது என்ன என்பதெல்லாம் தெரியப்போவதில்லை. அதற்காக வரலாற்றை யாரும் மாற்றி எழுதி விட முடியாது” என அமைச்சர் ராஜேந்திரன், பாமக தலைவர் அன்புமணிக்கு பதிலடி கொடுத்துள்ளார். வீரபாண்டி ஆறுமுகம் இருந்திருந்தால் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவந்திருப்பார் என அன்புமணி பேசியது நினைவுகூரத்தக்கது.
Sorry, no posts matched your criteria.