Salem

News April 26, 2025

சேலம் வழியாக இயக்கப்படும் முக்கிய ரயில் சேவை நீட்டிப்பு!

image

சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு- சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (08312), சாம்பல்பூர்- ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் (08311) சேவைகள் வரும் மே முதல் வாரத்துடன் முடிவடையவிருந்த நிலையில் மேலும் 2 மாதத்திற்கு அதாவது ஜூன் மாதம் வரை இந்த ரயில் சேவையை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

News April 26, 2025

பெரியார் பல்கலையில் விண்ணப்பிக்க தயாரா!

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பெரியார் பல்கலைக்கழகப் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், தருமபுரி ஆகியவற்றில் 2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான மாணாக்கர்கள் சேர்க்கைக்காக, பெரியார் பல்கலைக்கழக இணையதளமான<> www.periyaruniversity.ac.in<<>> என்ற இணையதளம் வழியாக இன்று (ஏப்.25) முதல் விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பிப்பதற்கான முழு விபரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் உள்ளன.

News April 26, 2025

சேலம் பட்டாசு விபத்து CM இரங்கல்!

image

சேலம்: காடையாம்பட்டி வட்டம் கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் 2 சிறுவர் உள்பட 4 பேர் எதிர்பாராதவிதமாக பட்டாசு தீப்பிடித்து வெடித்ததில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

News April 26, 2025

விவசாயிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

image

“தென்னை மற்றும் பாக்குகளில் ஏற்படும் நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்திட வேளாண்மைத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ள பயிர் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கோடைகாலம் என்பதால் விவசாயிகள் தங்களிடம் உள்ள தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக லாபம் பெறுவதற்கு சொட்டுநீர் பாசனம் திட்டத்தினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என விவசாயிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

News April 26, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், அசம்பா விதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும் காவல்துறையினர் இரவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதன்படி இன்று ஏப்ரல்25 ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்.

News April 25, 2025

சேலம் மதுக்கடைகளை  மூட உத்தரவு 

image

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபான கடைகள், பார்கள், மன மகிழ் மன்றங்கள் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி மே தினத்தை முன்னிட்டு  கண்டிப்பாக மூடவேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி உத்தரவு விடுத்துள்ளார். மீறி திறந்தால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 25, 2025

சேலம் : திருமண தடை நீக்கும் அற்புத கோயில்

image

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக பத்ரகாளியம்மன் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், குடும்ப பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 25, 2025

மாவட்டத்தில் கூடுதலாக மூன்று தீயணைப்பு நிலையங்கள்

image

சேலம் மாவட்டத்தில் 15 இடங்களில் தற்போது தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அயோத்தியாபட்டினம், பெத்தநாயக்கன்பாளையம், மற்றும் தலைவாசல் ஆகிய மூன்று இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதை அரசு பரிசீலித்து அறிவிப்பை வெளியிடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

News April 25, 2025

சேலம்: அனைத்து கிராம ஊராட்சிகளுக்கு ஆட்சியர்  உத்தரவு

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 1 ஆம்  தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கண்டிப்பாக கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் தூய்மை பாரத திட்டம் உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளின் மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

News April 25, 2025

மே 1- ல் கிராம சபைக் கூட்டம்- சேலம் ஆட்சியர் அறிவிப்பு!

image

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, வரும் மே 01-ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் உள்ளிட்ட அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இக்கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அழைப்பு!

error: Content is protected !!