India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
“விருதுநகர் சின்னவாடியூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும்,7 பேர் படுகாயம் அடைந்ததாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். இனியாவது பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை முறையான ஆய்வு மேற்கொள்ளுமாறும் மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்”- இ.பி.எஸ்.!
சேலம் மாநகரத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சேலம் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட சேலம் டவுன் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம் பட்டி, சூரமங்கலம்சரகம் பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (பிப்.5) இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம்
சேலம் ஸ்ரீராம் பைனான்ஸ் மண்டல மேலாளர் நரேந்திர குமார், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், கொளத்தூர் தனியார் வங்கி கிளை மேலாளர் சம்பத், வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் ரூ.1,11,20,000 கையாடல் செய்ததாக தெரிவித்ததை அடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், உண்மையை கண்டறிந்து சம்பத்தை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை ரயில்வே யார்டில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதால்,மேட்டுப்பாளையம்-போத்தனூர்மேட்டுப்பாளையம் மெமு ரயில்கள் (66611/66612), மேட்டுப்பாளையம்-கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரயில்கள்(66613/66614),சேலம் வழியாக இயக்கப்படும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ்(13352), எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ்(12678) ஆகிய ரயில்கள் நாளை (பிப்.06) வழக்கமான பாதையில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்ட காவல்துறை உட்கோட்டத்திற்க்குட்பட்டசேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (பிப்.5) இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் அம்மாப்பேட்டையில் சிவகாமி திருமண மண்டபத்தில், புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில், அதிக வட்டி தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட 216 பேர் புகார் தந்துள்ளதாகவும், தாங்கள் செலுத்திய ரூ.4.31 கோடியை திரும்பப் பெற்றுத் தருமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் தந்துள்ளனர்.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் Deputy Chief Financial Officer, Agricultural Officer, Global NRI Center Head பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க் <
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இன்று (பிப்.05) வரை ஏரோ விமான சாகச நிகழ்ச்சி நடக்கிறது.இதனால் ஞாயிறுக்கிழமை, திங்கள்கிழமை,புதன்கிழமை, வெள்ளிக்கிழமையில் பெங்களூருவில் இருந்து சேலம் இயக்கப்படும் இண்டிகோ விமானம், அந்நிகழ்ச்சிக்கேற்ப தாமதமாக இயக்கப்படும்;அதேபோல், ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை,புதன்கிழமை, வியாழக்கிழமை,வெள்ளிக்கிழமை சேலத்துக்கு இயக்கப்படும் அலையன்ஸ்ஏர் விமானமும் தாமதமாக இயக்கப்படும்
சேலம்,காட்டுவளவை சேர்ந்தவர் குமரவேல் (29),அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாக இருந்துள்ளார். அப்பெண்ணுக்கு பிரகாஷ் (38) என்பவருடனும் பழக்கம் இருந்துள்ளது.இதனால் ஏற்பட்ட மோதலில் மோதலில் குமரவேல் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் ஈடுபட்ட பிரகாஷ்,உள்ளிட்ட 3 பேர் கைது. சேலத்தில் ஒரே பெண்ணுக்காக நடந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.