India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம், நாமக்கல், மாவட்டங்களில் கடந்த எட்டு மாதங்களில் விபத்து மற்றும் நாய் கடி, பாம்பு கடி, பிரசவ வலி, உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளுக்கும் 108 ஆம்புலன்ஸ் மூலம் எட்டு மாதத்தில் 73 ஆயிரத்து 716 பேர் பயனடைந்துள்ளனர். என சேலம் 108 ஆம்புலன்ஸ் நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

சேலம் போக்குவரத்து கழகம் சார்பில், நாள்தோறும் 1900 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் வருகின்ற புரட்டாசி அமாவாசை முன்னிட்டு 21ஆம் தேதி முதல் சேலம், மேச்சேரி, மற்றும் தர்மபுரியில், இருந்து மாதேஸ்வரன் மலைக்கு 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சேலம் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. SHARE பண்ணுங்க.

தமிழ்நாடு அரசு சார்பில் உதவித்தொகையுடன் சேலத்தில் குறுகிய கால இலவச திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்புடன் ரூ.6,000 முதல் ரூ.12,000 வரை உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 98940-68340, 96988-39000 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். பயிற்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். மக்களே, SHARE பண்ணுங்க!

சேலம் மக்களே, வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம், தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள, Office Assistant, உள்ளிட்ட 13,217 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் இரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (செப்.21) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

சேலத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

சேலம் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

சேலம்: மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செப்.20) ஆத்தூர் நகரம், முல்லைவாடி, அம்மம்பாளையம், காட்டுக்கோட்டை, துலுக்கநூர், கல்லாநத்தம், முட்டல், தவளப்பட்டி, நரசிங்கபுரம், புங்கவாடி, மஞ்சினி, வளையமாதேவி, ஏரி புதூர், நீர்முள்ளிக்குட்டை, ஜலகண்டாபுரம், பூசாரிப்பட்டி, குள்ளம்பட்டி, காட்டூர், வலசையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் டிசம்பர் 13ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், வரும் செப்.27- ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. சேலத்தில் 2 இடங்களில் விஜய் மக்களைச் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சேலம், தாரமங்கலம் அருகே உள்ள மானத்தாள் ஏரி இயற்கை அழகுடன் கூடிய ஒரு நீர்நிலையாகும். இதைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தி, பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தினால், அது சேலம் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என பொதுமக்கள் பலர் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.