India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். தொகுப்பூதியமாக ரூ.20,000 வழங்கப்படும். ஆர்வமுள்ள தகுதியான நபர்கள் தங்களது சுய விவரங்களை வரும் அக்.06-ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம், அறை எண்-126 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பலாம்.

சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி, சித்தூர், முத்துநாயக்கன்பட்டி, மேச்சேரி, பெத்தநாயக்கன்பாளையம், வலசையூர், உள்ளிட்ட 19 பள்ளிகளில் 25.72 கோடி மதிப்பீட்டில் 14 வகுப்பறைகள் கட்டுவதற்கான நிதி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி தொடங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. விரைவில் 104 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் (20.09.2025)-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

ரயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352), எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (12678) ஆகிய ரயில்கள் நாளை (செப்.21) மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் கோவை செல்லாது. மாறாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சேலம் மக்களே.. மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். <

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பைனான்ஸ் நிறுவனங்களின் அசையா சொத்துக்கள் வரும் செப்.24- ஆம் தேதி காலை 10.30 மணி யளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள மகிழம் கூட்ட அரங்கத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏல நிபந்தனைகள் ஆட்சியர் அலுவலகம் விளம்பர பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 6 மருத்துவ முகாம்களில் 4,325 ஆண்களும், 5,227 பெண்களும் என மொத்தம் 9,552 பேர் கலந்து கொண்டு பயன்பெற்று உள்ளனர். இதில் 7,427 பேருக்கு இரத்தப் பரிசோதனையும். 5,603 பேருக்கு இசிஜி பரிசோதனையும், 1,040 பேருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, 1,143 பேருக்கு எக்கோ பரிசோதனையும், 787 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனையும், மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திரன் தகவல்.

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேற்று நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 33 தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களைத் தேர்வுச் செய்தனர். நேர்முகத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 88 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இரண்டாம் நிலைத்தேர்வுக்காக 44 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இணை இயக்குநர் மணி செய்திருந்தார்.

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம், நாமக்கல், மாவட்டங்களில் கடந்த எட்டு மாதங்களில் விபத்து மற்றும் நாய் கடி, பாம்பு கடி, பிரசவ வலி, உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளுக்கும் 108 ஆம்புலன்ஸ் மூலம் எட்டு மாதத்தில் 73 ஆயிரத்து 716 பேர் பயனடைந்துள்ளனர். என சேலம் 108 ஆம்புலன்ஸ் நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.