India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம், தாரமங்கலம் அருகே ஆரூர்பட்டி கிராமம் மேட்டுமாரனூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (36), கல் உடைக்கும் தொழிலாளி. இவர் 2010ம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த ஒரு இளம் பெண்ணை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவரை நேற்று கிருஷ்ணகிரி அருகே தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப். 15) வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்த வேண்டாம் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை சேலம் அழகாபுரத்தில் உள்ள பிரபல திரையரங்கில் லைகா நிறுவனம் மற்றும் நடிகை ரெஜினா, நடிகர் ஆரவ் ஆகியோர் ரசிகர்களோடு ரசிகர்களாக படத்தைப் பார்த்ததுடன் ரசிகர்களுடன் கலந்துரையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்தனர்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி,ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று பிப்ரவரி 15 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்
சேலம் கொண்டலாம்பட்டியில், உள்ள ஆர்.ஆர் திருமணமண்டபத்தில் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் நடைபெறும் துரித உணவு பயிற்சி 10 நாட்கள் நடைபெற உள்ளது.இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு தேநீர்,மதிய உணவு, சீருடை மற்றும் பயிற்சி உபகரணங்கள் அனைத்தும் இலவசம். விண்ணப்பிக்க கடைசி தேதி 18.02.25.மேலும் விவரங்களுக்கு 7550369295, 0427-2274478, 9566629044, 9789245248 அழைக்கவும்.
சேலம் மாநகரத்தின் மத்தியில் பழைய பேருந்து நிலையம் அருகே நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள் அன்னை கோட்டை மாரியம்மன். சேலத்தில் அமைந்துள்ள 8 மாரியம்மன்களுக்கு தலைமையாக விளங்குவதால் 8 பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு.இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சேலம் மணியனூர் பகுதியில் பதுங்கி இருந்த மண்ணுளிப் பாம்பை 10 லட்ச ரூபாய்க்கு பேரம் பேசி விற்க முயன்ற போது, வனத்துறையினர் அதிரடியாக செயல்பட்டு 9 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து உயிருடன் ஒரு மண்ணுளிப் பாம்பு, ஆட்டோ மற்றும் 3 இருசக்கர வாகனங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் பிப்ரவரி 15 இன்றைய முக்கிய நிகழ்வுகள்:’1) காலை 9:30 மணி மாநகர காவல் துறையின் சார்பில் பொதுமக்கள் போலீஸ் நல்லிணக்க விளையாட்டு போட்டி ஆணையாளர் துவக்கி வைப்பு.2) காலை 10 மணி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்.3) காலை 10 மணி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பொது மருத்துவ முகாம் அன்னதானப்பட்டி.4) மாலை 6 மணி கோட்டை பெருமாளள் கோவிலில் சிறப்பு பூஜை
சேலத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. அதனால் விலையும் சரிந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூபாய் 15-18 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாளில் விலை மேலும் குறைய வாய்ப்பு. பூண்டு கிலோ ரூ.150-200 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாளில் பூண்டின் விலை மேலும் குறைய வாய்ப்பு. அரிசி நடப்பாண்டு அதிகபட்சமாக 100 கிலோ மூட்டை ரூபாய் 400 வரை விலை சரிந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் மகளிருக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் பிப்.16ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 2000-க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளன. டிகிரி முடித்த அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். இந்த முகாமானது சேலம் மரவனேரி அருகே உள்ள ரோட்டரி ஹால் சகா தேவலாபுரம் விஜயராகவாச்சாரியார் ஹல் பின்புறத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு 9842408459: இதை மற்றவர்களுக்கும் Share பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.