India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.21) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளராக பா.ம.க.வின் இணைப் பொதுச்செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ.வுமான அருளை நியமனம் செய்து அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர்.ராமதாஸ் இன்று (செப்.21) அறிவித்துள்ளார். தைலாபுரத்தில் மருத்துவர்.ராமதாஸ் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது.மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, இங்கே <

சேலம் மக்களே..! தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
2. கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
3. சம்பளம்: ரூ.15,900 – ரூ.62,000
4. விண்ணப்பிக்க இங்கே <
5. கடைசி தேதி: 30.09.2025
அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..

சேலம் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் 93 ஆயிரம் பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த பணிகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா எனவும், முதியோர்களுக்கு சரியான முறையில் பொருட்கள் கிடைக்கிறதா எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

▶️தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)
1)மொத்த பணியிடங்கள்: 3,644
2)பதவிகள்: இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர்.
3)கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி (SSLC Pass)
4)சம்பளம்: ரூ.18,200 – ரூ.67,100 வரை.
5)விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.09.2025 (இன்றே கடைசி நாள்!)
6)ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <

தமிழக மின்வாரியத்தின் கீழ் பழுதடைந்த மின்கம்பங்களை உடனே புகார் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் ஹெல்ப் லைன் எண் 1912-க்கு கால் செய்யலாம். மேலும், “<

சேலம் மக்களே..மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஜலகண்டாபுரம், செலவடை, பூலாம்பட்டி, இடைப்பாடி, எட்டிகுட்டைமேடு, ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செப்.22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கலர்பட்டி, இருப்பாளி, மூலப்பாதை, போடிநாயக்கன்பட்டி, மோட்டூர், பச்சப்பட்டி, முப்பனூர், எடையப்பட்டி, ஆரூர்பட்டி, பூலாம்பட்டி ஒரு பகுதி, ஆவணியூர், கச்சுபள்ளி, கன்னந்தேரி, ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

சேலம்: வாய்க்கால் பட்டறையை சேர்ந்தவர் நிஷாந்த் (23), இவரது தம்பி பிரசாந்த் (19). இருவரும் நண்பர்களுடன் ஆட்டையாம்பட்டி அருகே சொரிமலை கரடு குட்டையில் குளிக்க சென்றனர். இதில் நிஷாந்த் திடீரென தண்ணீரில் மூழ்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தம்பி பிரசாந்த் (19) காப்பற்ற முயன்றபோது அண்ணன், தம்பி இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.