India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மக்களே.., வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE IT
சேலம் மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள்:
▶️எடப்பாடி, நடராஜ திருமண மண்டபம்
▶️இளம்பிள்ளை,சந்தைப்பேட்டை, மாரியம்மன் திருக்கோயில் திருமண மண்டபம்
▶️நெய்காரப்பட்டி ஸ்ரீ கிருஷ்ண மஹால்
▶️மின்னாம்பள்ளி வைஷ்ணவி திருமண மண்டபம்
▶️முத்துநாயக்கன்பட்டி, அருள் மஹால் திருமண மண்டபம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்டத்திற்கு 25 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து இன்னும் ஓரிரு வாரத்தில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தாழ்தள பேருந்துகள் இயக்கப்படும் சாலையில் ஸ்பீடு பிரேக் இல்லாமல் இருக்க வேண்டும். அதுபோன்ற இடத்தை தேர்வு செய்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சேலம்: ரயில்வே கோட்டப் பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் ரயில்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் டிக்கெட்டின்றி பயணித்த 23,286 பயணிகளிடம் இருந்து ரூ.1.59 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, சேலம்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று(ஆக.5) கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம், பொதுக்கூட்டங்கள் நடத்தும் முன் அனுமதி பெற வேண்டும். இதற்கு 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலலிக்கப்படாது. வருகிற 19-ந்தேதி நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சேலம்: கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், தள்ளு வண்டியில் கூல்ட்ரிங்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சுரேஷ் என்பவர் ஆன்லைன் MLM-யில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து, அவரது வங்கி கணக்கிற்கு தவணை முறையில் 11,65,000 முதலீடு செய்தார். மீதி பணத்தை வழங்காத நிலையில் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில் சுரேஷை கைது செய்தனர்.
சேலம் மக்களே.., 10ஆவது முடித்தால் எல்லை பாதுகாப்புப் படையில் Constable(Tradesman), carpenter, plumber, painter, electrician,cook, Tailor உள்ளிட்ட பல பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவதி, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆக.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க இங்கே <
சேலம் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனத்திற்கான அறிவிப்பு முன்மாதிரியான சேவை விருது பெற விண்ணப்பிப்பதற்கு இன்று(ஆக.5) மாலையுடன் கால அவகாசம் நிறைவு பெறுகிறது. தகுதி வாய்ந்த நிறுவனங்கள் விருதுகள் பெற விரும்பினால் உடனடியாக தங்களுடைய அனைத்து ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
♦️ காலை 9 மணி அம்மாபேட்டை, ராஜசேகர் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ♦️நிலவாரப்பட்டி சமுதாயக்கூடத்தில் முகாம் ♦️காலை 10:15 பெரியார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் ♦️காலை 10.30 மணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் கட்சி அலுவலகம் ♦️காலை 6 மணி முதல் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைபவம்.
Sorry, no posts matched your criteria.