Salem

News February 19, 2025

சேலம்: வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

image

சேலம் மாநகர காவல் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மதுவிலக்கு வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட, 24 இருசக்கர வாகனங்கள்  ஏலம், வரும் 24-ஆம் தேதி, அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள மாநகர காவல் காவல் மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும், விருப்பமுள்ளவர்கள் அன்று காலை 10 மணிக்குள் முன்வைப்பு தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

News February 18, 2025

சேலம் மெட்ரோ ரயில்- திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

image

சேலம் மாவட்டத்தில் மெட்ரோ ரயில் தொடர்பான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம் சமர்ப்பித்தது மெட்ரோ ரயில் நிர்வாகம். கரபுநாதர் கோயில் முதல் அம்மாப்பேட்டை வழியாக அயோத்தியாப்பட்டணத்திற்கும், கருப்பூர் முதல் சேலம் ரயில் நிலையம் வழியாக நாழிக்கல்பட்டி வரையிலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிப்பு!

News February 18, 2025

சேலம்: பாலியல் தொழில் நடத்தியவர் கைது!

image

சேலம் சூரமங்கலம் தர்மநகர் முதல் தெரு பகுதியில், வீடு வாடகைக்கு எடுத்து, பாலியல் தொழில் நடப்பதாக, சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்று, போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில் சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 34) என்பவர், வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில்நடத்தியது தெரியவந்தது. விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 பெண்களை போலீசார் மீட்டனர்.

News February 18, 2025

சேலம் மாநகர காவல் துறை சார்பில் இரவு நேர ரோந்து பணி

image

சேலம் மாநகரத்தின் முக்கிய பிரதான பகுதிகளில் இரவு நேரங்களில் ரோந்து பணி நடைபெறுகிறது. இரவு நேரங்களில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், பொது மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், காவலர்கள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர், அந்த வகையில் இன்று மாநகர பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. 

News February 18, 2025

கைதிகளுக்கு செல்போன் விற்ற காவலர் பணியிடை நீக்கம்!

image

சேலம் மத்திய சிறைக் கைதிகளுக்கு செல்போன் விற்றதாக சிறையின் முதல்நிலைக் காவலர் சண்முக குமாரைப் பணியிடை நீக்கம் செய்து சிறைக் கண்காணிப்பாளர் வினோத் நடவடிக்கை எடுத்துள்ளார். சிறையில் 10-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு, ரூபாய் 15,000 முதல் ரூபாய் 20,000 வரை செல்போன்கள் விற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அவ்வப்போது சேலம் மத்திய சிறையில் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News February 18, 2025

சேலத்தில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற பால் 

image

சேலம் ஆவின் பால் பண்ணையில் இருந்து சிங்கப்பூருக்கு சுமார் 80,000 லிட்டர் நிலைப்படுத்தப்பட்ட பால், 2 கண்டெய்னர் மூலம் அனுப்பி வைக்கும் பணியில் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் ஆவின் மூலம் சிங்கப்பூருக்கு பால் அனுப்பப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

News February 18, 2025

பழங்களைப் பழுக்க வைக்க ரசாயனம் தெளித்தால் ரூ.2 லட்சம் அபராதம்

image

சேலம் மாவட்டத்தில் 20- க்கும் மேற்பட்ட பழ குடோன்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். செயற்கையான முறையில் மா, வாழைப் பழங்களை பழுக்க வைத்தால் அந்த வியாபாரிகளுக்கு ரூபாய் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். பழ குடோன்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

News February 18, 2025

நடத்தையில் சந்தேகம்: தாயை அடித்து கொன்ற மகன்கள்

image

மேட்டுடையார் பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பொண்ணுவேல் மனைவி வசந்தி (38). இவர் செல்போனில் அடிக்கடி பேசியதால் சந்தேகமடைந்த மகன்கள் இருவரும் தாக்கி உள்ளனர். இதில் மயங்கிய வசந்தியை மீட்ட உறவினர்கள், வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இரு மகன்களையும் பிடித்து, ஏத்தாப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 18, 2025

தொழில் முனைவோர்களுக்கான பயிற்சிப் பட்டறை!

image

சேலம் மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அறிவுசார் சொத்துரிமை பயிற்சிப் பட்டறை 19.02.2025 அன்று சேலம், ஐந்து ரோடு, சிட்கோ தொழில்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தின் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News February 17, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவாரம் 

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி,ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும்,இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காப்பாற்றவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று பிப்ரவரி 17 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம்.

error: Content is protected !!