Salem

News August 8, 2025

துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் மன்னன் வேட்புமனு

image

சேலம்: மேட்டூர் அருகே குஞ்சாண்டியூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்த பத்மராஜன்(65) துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இது இவரது 250ஆவது வேட்பு மனுத்தாக்கல் ஆகும். இதற்கு முன்பு 249 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 8, 2025

சேலம்: ZOHO-வில் வேலை வேண்டுமா? உடனே APPLY

image

சேலம் மக்களே.., நமது மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ZOHO ஐடி நிறுவனத்தில் Software developers பணிகளுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு சிறந்த சம்பளம் வழங்கப்படும். முன் அனுபவம் அவசியமில்லை. இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் பண்ணுங்க.<<>> உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 8, 2025

சேலத்தில் இலவசம்! உடனே CLICK

image

சேலம் மக்களே…,தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் சேலத்தில் இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 71 காலியிடங்கள் உள்ளன. இதற்கு கல்வித் தகுதியும் அவசியம் இல்லை. அரசின் பல்வேறு திட்டத்தில் பயனடைவோர் இதில் பயனடையலாம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்ப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்த சூப்பர் திட்டத்தை உடனே SHARE பண்ணுங்க!

News August 7, 2025

சுதந்திர தின விழா குறித்த ஆலோசனைக் கூட்டம்

image

சுதந்திர தின விழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, தலைமையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) விவேக் யாதவ், காவல்துறை துணை ஆணையர் (சேலம் தெற்கு) கேல்கர் சுப்ரமணிய பாலசந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News August 7, 2025

சேலம்: டிகிரி போதும்.. புலனாய்வுத் துறையில் வேலை!

image

சேலம் மக்களே, இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு(Intelligence Bureau) அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். ஏதெனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஆக., 10-ம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். மத்திய அரசில் வேலை கிடைக்க அரிய வாய்ப்பு. டிகிரி முடித்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 7, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 7) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். அவசர உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

News August 7, 2025

மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு!

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் மக்கள் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வுப் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. “DON’T DRINK AND DRIVE” என்ற எச்சரிக்கையுடன், வாகன விபத்துகளைத் தடுக்கும் வகையில், குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதை தவிர்க்குமாறு, பொதுமக்களை மாவட்ட காவல்துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். உயிர்கள் பாதுகாக்க சேலம் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

News August 7, 2025

சேலம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்கள்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ரயில் பயணிகளின் வசதிக்காக வரும் ஆக.14- ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கும், மறுமார்க்கத்தில், வரும் ஆக.17- ஆம் தேதி போத்தனூரில் இருந்து சென்னை சென்டரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும், என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 7, 2025

சேலம்: 10-ம் வகுப்பு போதும்.. ரயில்வேயில் வேலை!

image

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான (Sports Quota) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 50 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர், முதுநிலை எழுத்தர் (கிளார்க்), இளநிலை எழுத்தராக பணியமர்த்தப்படுவர். இதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 10.8.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News August 7, 2025

வடசென்னை பட பாணியில் கஞ்சா கடத்தல்

image

சேலத்தில் சிறை கைதி மணிகண்டனை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பின்பு சிறையின் நுழைவாயிலில் மணிகண்டன் மீது மெட்டல்டிடெக்டர் கருவி கொண்டு சோதித்தனர். அப்போது அவர் ஆசன வாயில் மூலம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது பின்னர் இனிமா கொடுத்து வெளியே எடுத்தனர். மேலும், அஸ்தம்பட்டி காவல் துறையின் விசாரணை நடத்தினர்

error: Content is protected !!