India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (பிப்.20) மதியம் 12 மணி அளவில் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்திற்கு வருகை தர உள்ளார். முன்னதாக மாநில தலைவர் காலை 11.00 மணிக்கு சேலம் மாநகர் மாவட்ட எல்லையான சீலநாயக்கன்பட்டி பைபாஸ் வருகிறார். அதற்காக பாஜக தொண்டர்கள் உற்சாக ஏற்படுத்தி உள்ளனர்.
சேலம், அம்மாபேட்டை அரசு பள்ளியில் அறிவியல் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் குமரேசன் (57). இவர் ஆய்வகத்திற்கு வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் வந்தது. இது குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தி குமரேசனை கைது செய்தனர். இதனையடுத்து கல்வி அதிகாரி அவரை நேற்று சஸ்பென்ட் செய்தார்.
சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப். 19) விபத்தில் சிக்கித் தவிக்காமல் இருக்க, வாகனங்களை இயக்கும் போது, செல்போன் பயன்பாட்டை கட்டாயம் தவிர்ப்பீர் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை, காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு, குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதில் தூய்மை காவலர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி சுகாதாரமான சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும்” என சேலம் ஆட்சியர் வேண்டுகோள்.
சேலம் மாநகரில் இன்றைய (பிப்.19) இரவு காவல் உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய காவல் அதிகாரிகள் விவரம்: சேலம் டவுன் சரகம் பழனியம்மாள், காவல் ஆய்வாளர் B3 PS 94981-67715, செவ்வாய்பேட்டை கா.நி அரசு மருத்துவமனை அன்னதானப்பட்டி சரகம், பழனியம்மாள் – காவல் ஆய்வாளர் B3 PS 94981-67715, கொண்டலாம்பட்டி சரக,ம் தமிழரசி – காவல் ஆய்வாளர் CCB 94981-10740, அம்மாபேட்டை சரகம், மணிவண்ணன் – காவல் ஆய்வாளர் 94981-67695.
சேலம் மாவட்ட எஸ்.பி., கவுதம் கோயல் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட, 24 பார்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. டாஸ்மாக் எதிரே பெட்டிக்கடை வைத்து மது அருந்த அனுமதித்தது, கடை இயங்காத நேரத்தில் மது விற்றது உள்பட 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 4ஆம் தேத முதல் இன்று வரை, மதுபாட்டில் விற்ற 178 பேரை கைது செய்துள்ளோம் என்றார்.
சேலத்தில் இருந்து சுமார் 14 கிமீ தொலைவில் அரியானூரில் அமைந்துள்ள 1008 லிங்கத் திருக்கோயில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரபலமான கோயிலாகும். இதில் 1008 லிங்கங்கள் உள்ளன. சக்தி வாய்ந்த கடவுளான சிவனுக்கு சிவசஹஸ்ரநாமாவலியில் 1000 பெயர்கள் உள்ளன. இதன் அடிப்படையில் இக்கோயிலில் 1008 சிவலிங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு சிவலிங்கமும் சிவபெருமானின் ஒவ்வொரு பெயருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 14 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சில நாட்களுக்கு முன்பு மூன்று மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.இந்நிலையில் அந்த மாணவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆத்தூர் டிஎஸ்பி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை வெட்டியதில், இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை செய்ததில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வெட்டி கொலை செய்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பசூர்- ஊஞ்சலூர் இடையே ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு காரணமாக, பிப்.20, 23, 25, 28 ஆகிய நாட்களில் திருச்சி- ஈரோடு ரயில், கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். கரூர் முதல் ஈரோடு வரை ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாட்களில், செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் கரூர் வரை மட்டும் இயக்கப்படும்; மறுமார்க்கத்தில், ஈரோடு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் கரூரில் இருந்து புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.