India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின இஸ்லாமிய மாணவ மாணவிகள் வெளிநாடுகளில் மேல்படிப்பு பயில தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 மாணவர்களுக்கு தலா ரூபாய் 36 லட்சம் விகிதம் ரூபாய் 3.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கடன் பெற விரும்பும் மாணவ மாணவிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் சுகாதாரமற்ற உணவு, தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட உணவு பொருட்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு இனி இருந்த இடத்திலேயே புகார் அளிக்கலாம். தமிழக அரசின் Tn Food Safety Consumer App என்ற செயலியிலோ அல்லது இந்த <

சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து அதே பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் திருமணம் செய்த நிலையில், தற்போது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

சேலம் மக்களே.. தொடர்ந்து வேலை தேடுபவரா நீங்கள்? வங்கியில் பணி புரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <

ஆர்கானிக் ஆயுர்வேத பொருட்கள் குறித்து அறிந்துக் கொள்ளும் வகையில் பெண்களுக்கான இலவச பயிற்சி, சேலம் ஃபேர்லண்ட்ஸில் நடைபெறவுள்ளது. சான்றிதழுடன் கூடிய ஒருநாள் பயிற்சியில் ஆயுர்வேத பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்தும் வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்கப்படுகிறது. சான்றிதழுடன் தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 90805-02268 எண்ணை அழைக்கலாம். SHARE பண்ணுங்க!

சேலம் மக்களே, மத்திய பணியாளர் தேர்வாணயம் (SSC), காலியாக உள்ள 7565 கான்ஸ்டபிள் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 12வது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.21,700 – ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <

சேலம் மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்க சிறப்பு முகாம் நடந்து வருகிறது. பி.எம்.ஸ்வாநிதி லோக் கல்யாண் மேளாஸ் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000, ரூ.25,000, ரூ.50,000 வரை வங்கிக்கடன் பெறலாம். சூரமங்கலம், அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி ஆகிய மண்டல அலுவலகங்களில் அக்.02 வரை முகாம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு வியாபாரிகள் பயன்பெறலாம். SHARE பண்ணுங்க!

சேலம் மக்களே பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள் என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

சேலம் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

சேலம்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். பருவமழையினால் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால், பொதுமக்கள் “1077” என்ற எண்ணிலோ, கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் அறை எண்.120-ல் செயல்பட்டுவரும் கட்டுப் பாட்டு அறையை 0427-2452202 என்ற எண்ணிலோ 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார். மக்களே, SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.