India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உ.பி – பீகாரில் இருந்து சேலம் வழியாக கேரளாவிற்கு இயக்கப்படும் 2 ரயில்கள், கான்பூர் பகுதியில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன்படி, கோராக்பூர்-திருவனந்தபுரம் வடக்கு ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் (12511), வரும் 20, 21, 23, 27, 28, 30, ஏப்ரல் 3, 4, 6, 10, 11, 13, 25, 27ம் தேதிகளில் மாற்றுப்பாதையாக அயோத்தி தாம், மாபெல்ஹாதேவி பிரக்யாராஜ், கான்பூர் வழியாக இயக்கப்படுகிறது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது, 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். இக்கோயிலுக்கு அமாவாசையன்று தான் பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்.”அமாவாசை கோயில்’ என்ற பெயர் கூட இதற்கு உண்டு. தீராத நோயுள்ளவர்கள் அன்று சித்தேஸ்வரரை வணங்கி, கோயிலில் உள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்தால் நலம் பெறலாம் என்பது நம்பிக்கை. இதை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 28 வயதுடைய வாலிபர் ஒருவரிடம் ஆன்லைனில் பகுதிநேர வேலை வாங்கி தருவதாக ரூ.21 லட் சத்து 29 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கேரளாவைச் சேர்ந்த அப்துல் வாகீத் (23), முகமது ஷெரீப் (26) ஆகியோரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் மோசடி புகார்களுக்கு அழையுங்கள் 1930. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
சேலம் மாவட்டத்தில் இன்று (15.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
சேலம்: ஓமலூர் அடுத்துள்ள கமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி இங்கு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் ’அலையன்ஸ் ஏர்’ விமான நிறுவனம் குளிர் காலத் திட்டத்தில், சேலம் விமான நிலையத்திலிருந்து செவ்வாய், சனி தவிர்த்து பிற நாட்களில் கொச்சின் – சேலம் – பெங்களூரு மீண்டும் பெங்களூரு -சேலம் – கொச்சின் என வாரம் ஐந்து நாட்களுக்கு விமானங்களை இயக்கவுள்ளது.
சேலத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான தாட்கோ சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளநிலை பொறியாளர்களுக்கு, புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி வழங்கப்படும். தங்கி பயிலும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக்கான கால அளவு 18 வாரம். பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும். இப்பயிற்சியினை பெற தகுதியுள்ளவர்கள் www.tahdco.com இணையத்தில் பதிவுச் செய்துக் கொள்ளலாம்.
யார்டில் தண்டவாளம் மாற்றியமைக்கும் பணி காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் ஆழப்புலா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352), எர்ணாகுளம்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (12678) நாளை (மார்ச் 16) போத்தனூர்- இருகூர் மார்க்கத்தில் இயக்கப்படுவதால் கோவை ரயில் நிலையத்திற்கு பதிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
கோவையில் இருந்து அரியானா மாநிலம், ஹிசார் ரயில் நிலையத்திற்கு இருமார்க்கத்திலும் இயக்கப்படும் வாராந்திர ரயில்கள் (22475/ 22476) இன்று (மார்ச் 15) முதல் சோதனை முயற்சியாக கர்நாடகாவின் கும்டா ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள்.
சேலம், அஞ்சல் அலுவலகளில் செல்வமகள் சேமிப்பு திட்டம்’ செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூ.250 முதல் 1.50 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். உங்களிடம் பணம் இருக்கும் போது டெபாசிட் செய்யலாம். இதற்கு 8% வட்டி வழங்கப்படுகிறது . இது உங்களின் பெண் குழந்தைகளின் கல்வி, திருமனம் போன்றவைகளுக்கு பயனுள்ளதாக அமையும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
சேலம், வாழப்பாடியை சேர்ந்தவர் சின்ராஜ்,இவருடைய மனைவி வனிதா (23). இந்தநிலையில் வனிதாவிற்கு அவருடைய முன்னாள் காதலன் வேடராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டநிலையில், நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த வேடராஜ் , கத்தியால் வனிதா கழுத்தில் அறுத்துள்ளார்.இதன் பின்னர் தனது கையையும் கத்தியால் அறுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை.
Sorry, no posts matched your criteria.