India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
சேலம் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; விவசாயிகள் விதையின் முளைப்புத்திறன், ஈரப்பதம் அறிந்து கொள்ள 2 மாதங்களுக்கு ஒருமுறை விதை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் முடிவுகளின் படி, சில பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ளலாம். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் விதைப் பரிசோதனை நிலையத்தில் ரூ.80 கட்டணத்துடன் விதை பரிசோதனை செய்யலாம்.
சேலம் வீரபாண்டி, ரெட்டிப்பட்டியை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்-சிவகாமி தம்பதியினருக்கு கடந்த 9 நாள்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை தேவராஜ் என்ற புரோக்கர் மூலமாக, ரஞ்சித் என்பவருக்கு ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் நவ.10 வரை அரசு விருதுகள் இணையதளத்தில் http://awards.tn.gov.in விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மாவட்ட சமூகநல அலுவலகம்,முதல் தளம் அறை எண்.126,மாவட்ட ஆட்சியர் வளாகம்,சேலம் 636001 முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 23) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஆக.27- ஆம் தேதி முதல் செப்.02- ஆம் தேதி வரை சேலம் வழியாக செல்லும் சென்னை சென்ட்ரல்-மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (12671) கோவை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே பதிவு பெற்ற தொழிற்சாலைகள், புதியதாகப் பதிவு செய்யும் தொழிற்சாலைகள் https://dish.tn.gov.in என்ற மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் வரும் ஆக.30ஆம் தேதிக்குள் தொழிற்சாலைகளின் முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். தொழிற்சாலைகள் முறையாகப் பதிவு செய்து பயன்பெறலாம்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.23) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், சேலத்தில் பிரசித்தி பெற்ற அழகிரிநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு, திருமண தோஷம் உள்ளவர்கள் ஆண்டாள் திருக்கல்யாணத்தை கண்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. புத்திர பாக்கியம் வேண்டி பொன்ன மரத்தின் அடியிலுள்ள சந்தான கோபாலகிருஷ்ணரை பிரார்த்தனை செய்கின்றனர். இத்தல இறைவனை வேண்டிக்கொள்ள நரம்புத்தளர்ச்சி நோய்கள் நீங்குமாம். SHARE பண்ணுங்க!
சேலம் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Sorry, no posts matched your criteria.