Salem

News October 4, 2025

சேலம்: பெண்களுக்கு செம்ம வாய்ப்பு – வங்கி கடன் திட்டம்!

image

சேலம் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 லட்சம் முதல் கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 4, 2025

சேலத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

image

வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்ததை அடுத்து சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News October 4, 2025

சேலத்தில் ரூ.10.57 கோடிக்கு மது விற்பனை!

image

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 200 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் தினசரி சராசரியாக ரூ.6 கோடி முதல் ரூ.7 கோடி வரை மது விற்பனை நடைபெறுவது வழக்கம்.திருவிழா மற்றும் பண்டிகைக் காலங்களில் இந்த விற்பனை இருமடங்கு அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில், ஆயுத பூஜை அன்று மட்டும் ரூ.10 கோடியே 57 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News October 4, 2025

சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

சேலம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 4, 2025

சேலம்: வாகனம் ஓட்டும் போது கைபேசியை பயன்படுத்தாதீர்!

image

சேலம் மாநகர காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்டோபர்.04) “வாகனம் ஓட்டும் போது கைபேசியை பயன்படுத்தாதீர்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்!

News October 4, 2025

சேலம்: பயன்பாட்டுக்கு வந்த பிஎஸ்என்எல் 4ஜி டவர்கள்!

image

சேலம் சரகத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மொத்த 3,170 செல்போன் டவர்களில் 898 4ஜி டவர்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக பிஎஸ்என்எல் பொது மேலாளர் ரவீந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்துள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் எனத் தெரிவித்துள்ளார்.

News October 4, 2025

ரூ.9,000 உதவிதொகை – சேலத்தில் இலவச பயிற்சி!

image

சேலம் இளைஞர்களே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், நடப்பாண் டிற்கான தொழிற்பழகுநர் (அப்ரன்டீஸ்) பயிற்சியில் சேருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி,பொறியியல் மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு https://nats.education.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்

News October 4, 2025

சேலத்தில் காரை விற்பதுபோல் விற்று திருட்டு!

image

சேலம்: மகுடஞ்சாவடி அருகே நடுவனேரியைச் சேர்ந்தவர் பாஸ்கரன், கடந்த மாதம் அரியாகவுண்டம்பட்டி சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் 10 லட்சம் மதிப்புள்ள காரை வாங்கி உள்ளார்.இதன் பின் விக்னேஷ், முரளிகண்ணன், சுப்பிரமணி, ஆகியோருடன் சேர்ந்து பாஸ்கரன் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காரை திருடிக் கொண்டு சென்று விட்டனர். இது குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து மூன்று பேரையும் கைது செய்தனர்.

News October 4, 2025

சேலம்: டூவீலர், ஆட்டோ வாங்க ரூ.50,000 வரை மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள்<> இந்த லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News October 4, 2025

புண்ணியத்தை தரும் சனி பிரதோஷ வழிபாடு!

image

ட்டாசி மாதத்தில் பிரதோஷ தினத்துடன் சனிக்கிழமை இணைவது ‘சனி மகா பிரதோஷம்’ என்று ஆன்மீக ரீதியாக மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது. இந்நாளில் 4:30 முதல் 6:00 மணிக்குள் சிவபெருமானை வழிபடுவது மிகவும் விசேஷமானது.வீட்டில் தீபமேற்றி வழிபடலாம்.அல்லது சிவாலயங்களுக்குச் சென்று சிவபெருமான் மற்றும் நந்தியின் முன் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் கடன்கள் குறைந்து செல்வம் அதிகரிக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை

error: Content is protected !!