India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது; வாகனங்களில் பக்கவாட்டு கண்ணாடிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சாலை வீதிகளை முறையாக பரிசீலனை செய்து பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். விபத்துகளை தவிர்க்க பக்கவாட்டு கண்ணாடிகள் சரியாக பயன்படுத்தப்படுவது அத்தியாவசியம் எனவும், அனைவரும் பாதுகாப்புடன் சாலையில் பயணிக்க வேண்டுமெனவும் காவல்துறை கேட்டுக்கொண்டது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 38 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு தாட்கோ மூலம் இலவசமாக தங்குமிடம் உணவுடன் போர்க் லிப்ட் ஆப்ரேட்டர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ள சமுதாயத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (www.tahdco.com) இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.26) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
சேலம் மாவட்டத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு ஆக.28ம் தேதி ஈரோடு மாவட்டம். வ.உ.சி பூங்கா, விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. அக்னி வீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர்/ஸ்டோர் கீப்பர். உட்பட பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். தகுதியுள்ளவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே <
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நாளை (ஆக.27) நடக்கவிருந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும், என்ற சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ.க.வின் கோரிக்கையை ஏற்று நாளை நடக்கவிருந்த விளையாட்டு போட்டிகள் வரும் ஆக.30-ஆம் தேதி நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.
சேலம் மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்களுடைய நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களில் டேஷ் கேம் பொருத்தி அதனுடன் செல்பி போட்டோ எடுத்து, மாநகர காவல் துறையின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பதிவிடுமாறும், முதலில் பதிவிடும் ஐந்து நபர்களுக்கு காவல் ஆணையரின் கைகளால் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு சேலம் மாவட்டத்தில் பள்ளி பிரிவில் 35,996 பேரும்,கல்லூரி பிரிவில் 7,633 பேரும்,மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 2,165 பேரும்,அரசு ஊழியர்கள் பிரிவில் 1,625 பேரும், பொதுப்பிரிவில் 6,738 பேரும் என மொத்தம் 54,157 பேர் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர்.
சேலம் மக்களே மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு அலுவலக எண்கள்;
☎️ஆத்தூர் – 04282-240801
☎️எடப்பாடி – 04283-222922
☎️மேட்டூர் – 04298-225001
☎️மேட்டூர் தெர்மல் – 04298-240397
☎️ஓமலூர் – 04290-220101
☎️சேலம் – 04272-211603
☎️சங்ககிரி – 04283-240555
☎️நங்கவள்ளி – 04298-266101
☎️கெங்கவல்லி – 04282-232101
☎️வாழப்பாடி – 04292-222101
☎️கருமந்துறை – 04292-244801 SHARE பண்ணுங்க மக்களே!
காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புற அரசு உதவிபெறும் 2,429 பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்து இன்று (ஆக.26) தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. சேலத்தில் மொத்தம் 61 பள்ளிகளில் 11,488 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம், காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து கொச்சின், பெங்களூருவுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் இன்று (ஆக.26) இயக்கப்படவிருந்த அனைத்து விமான சேவைகளையும் அலையன்ஸ் ஏர் நிறுவனம் (Alliance Air) ரத்துச் செய்துள்ளது. இந்த தகவலை சேலம் விமான நிலைய நிர்வாகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.