India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் மார்ச் 22 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 10 மணி உலக நீர் தினத்தை முன்னிட்டு கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி▶️ காலை 10 மணி தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கருப்பு கொடி காட்டும் போராட்டம் ▶️ காலை 11 மணி ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம்
சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை இங்கே <
சேலம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான் (எ) சாணக்கியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். போலீசார் விசாரணையில் ரவுடி செல்லத்துரை கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதன் காரணமாக சேலத்தில் ரவுடிகளின் பட்டியலையும் உளவுப்பிரிவு போலீசார் மூலம் மீண்டும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தாரமங்கலம் அணைமேட்டில் கட்டப்பட்ட முருகன் சிலை தமிழ்நாடு மட்டுமல்லாது உலக அளவில் பேசப்பட்டதை நம் எல்லோரும் அறிந்ததே.
முருகன் சிலையின் மறுசீரமைப்பு பணி 80சதவீதம் முடிவுற்ற நிலையில் முன்பு இருந்த உடல் அமைப்பை முழுவதுமாக மாற்றி, முக அமைப்பை மாற்றியும், நெஞ்சுப் பகுதியில் சிறிய சிவன் சிலையும் முருகர் சிலையும் உள்ளது போல வடிவமைத்து உள்ளனர்.விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும்
“முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள், கைம்பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெற முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் மனுவினை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கீரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனியார் பள்ளி ஓட்டுநர் ஜெயவேல்(26) இன்று (மார்ச் 21)பள்ளி வேலை எடுத்துக்கொண்டு பணிக்கு செல்வதற்காக வேனை இயக்கிய போது தந்தையை பார்ப்பதற்காக ஒன்றரை வயது குழந்தை ரோஹித் ராஜ் வேனின் பின்புறம் வந்தது இதனை அறியாமல் வேனை பின்னோக்கி இயக்கியதில் சக்கரத்தில் நசுங்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ? அல்லது ரவுடிகள் தொல்லை இருந்தாலும் கீழ்கண்ட எண்ணில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாநகர காவல் துறை சார்ந்த அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
சேலம் குரங்குசாவடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுப்பிரமணி(74) . இவர் தனது ஆட்டோவின் கூரையில் சோளத் தட்டு மற்றும் வைக்கோல் கட்டி அதன் மீது குளிர்ந்த தண்ணீரை தெளித்து, வலம் வருகிறார். அதேபோல் சிறிய தண்ணீர் டேங்க், மொபைல் சார்ஜிங் பாயிண்ட், ஃபேன் ஆகியவற்றை ஆட்டோவில் இணைத்துள்ளார். சேலத்தை கலக்கும் இந்த ஆட்டோ குறித்து உங்கள் கருத்து என்ன?
சேலம், கருப்பூர் சுங்கச்சாவடியில் நேற்றிரவு அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் ரூ.200 வைத்திருக்க வேண்டும் எனக்கூறி சுங்கச்சாவடி ஊழியர்கள் காரின் உரிமையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்கள் இருக்கைகளைக் கொண்டு தாக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேலம் கோட்டத்தில் 486 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். இதற்கு மார்ச்.21 முதல் ஏப்ரல்.21 வரை விண்ணப்பிக்கலாம். (Share பண்ணுங்க)
Sorry, no posts matched your criteria.