India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிய www.sancharsaathi.gov.in இணையதளத்திற்குச் செல்லுங்கள். அங்கு, உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்து, வரும் OTP-ஐ உள்ளிடவும். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிம் கார்டுகளின் விவரங்களும் உடனடியாகத் தெரியும். உங்களுக்குத் தெரியாத சிம் கார்டுகள் இருந்தால், உடனே புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக சேலம் வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் வடக்கு – பெங்களூரு சிறப்பு ரயில் (06524) இன்று (அக்.07) பிற்பகல் 03.15 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் மாலை 06.05 மணிக்கு புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் இவரது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு செல்லாமல், செல்போனை பார்த்திருந்த அவரை தந்தை கண்டித்துள்ளார். இதனால் நேற்று இரவு மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த எடப்பாடி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

சேலம் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 1.88 லட்சம் பேருக்கு ரூபாய் 281 கோடி மதிப்பீட்டில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் சரகத்தில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 504 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய 207 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட 1,001 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசி கடத்தலில் ஈடுபட்ட 12 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் தேர்வுக்கான பயிற்சி இன்று (அக்.07) காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது. பயிற்சி வகுப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகர காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்டோபர்.07) “DON’T LET CHILDREN PLAY IN THE DRIVEWAY” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

சேலம் மக்களே எதிர் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவரவர் சொந்த ஊருக்குச் செல்ல தமிழ்நாடு அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், அரசு பேருந்து மற்றும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் மோசடி போன்ற சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க அரசு சார்பாக புகார் எண்கள் அறிவிப்பு. 044-24749002, 044-26280445 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.