India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக வரும் ஆக.30- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கண்ணூருக்கு சிறப்பு ரயில் (06125) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில், போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் செயல்படும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் சமூகப்பணியாளர் உடன் இணைந்த ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 10.09.2025க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண். 415, நான்காவது தளம் மாவட்ட ஆட்சியரகத்தில் விண்ணபிக்கலாம் அல்லது 0427 2416966 என்ற என்னுக்கு அழைக்கலாம் என கலெக்டர் பிருந்த தேவி அறிவிப்பு!(SHARE பண்ணுங்க)
சேலம், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள148 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 29 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணபிக்க <
சேலம் மாவட்ட தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான வீடியோ ஒளிப்பதிவு மற்றும் ஆடியோ வடிவமைப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 18 வயது முதல் 30 வயது வரை உள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் (www.tahdco.com) இணையதளத்தில் விண்ணப்பங்களை விண்ணப்பித்து பயனடையுமாறு, சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார்.
சேலம் வழியாக வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆக.27, செப்.01, 06 தேதிகளில் வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கண்ணிக்கும், மறுமார்க்கத்தில், ஆக.29, செப்.03, 08 தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து வாஸ்கோடகாமாவிற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்று செல்லும்.
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் சேலம் அரசு கூர்நோக்கு இல்லத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் சமூகப் பணியுடன் கூடிய ஆற்றுப்படுத்தினர். பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 0427-2415966 விவரங்கள் கேட்டறிந்து 10.09.2025 தேதிக்குள் விண்ணப்பத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஜூலை 15- ஆம் தேதி முதல் ஆக.23- ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் 70,363 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக் கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம் 80,277 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலம் வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து கண்ணூருக்கு ஓணம் சிறப்பு ரயிலை (06009) அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆக.28-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கண்ணூர் சென்றடையும். சேலம் ரயில் நிலையத்தில் மட்டும் சுமார் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் வழியாக வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆக.27, செப்.01, 06 தேதிகளில் வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கண்ணிக்கும், மறுமார்க்கத்தில், ஆக.29, செப்.03, 08 தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து வாஸ்கோடகாமாவிற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்று செல்லும்.
சேலம் மாநகரத்தில் 26.08.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்; J.ஜெய்சல்குமார் (94981-78821) , P.குமார் (94981-74170), R.பால்ராஜ் (94436-21083), D.காந்திமதி (94981-75610), ஆகியோர் இன்று இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.