India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நாட்டுக் கோழி வளர்க்க இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மேலும், நாட்டுக்கோழி பண்ணை வைக்கவும் அரசு சார்பாக பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய இங்கே <

சேலம் மக்களே, உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே <

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அக்டோபர் 2, (காந்தி ஜெயந்தி தினத்தில்) நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம், நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்கள் அனைத்தும் அக்டோபர் 11 அன்று நடத்தப்பட உள்ளன.

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அணில்குமார் கிரி தெரிவித்துள்ளதாவது; குற்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும், காவல்துறையின் மதிப்பை கெடுக்கும் வகையில் யாரும் செயல்படக் கூடாது, என தெரிவித்துள்ளார். போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர்களுக்கு துணை போகும் செயல் கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

சேலம்: (அக்.10) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்; 1)அஸ்தம்பட்டி- புனித பால் மேல்நிலைப்பள்ளி சேலம். 2)உடையாபட்டி -சேக்கிழார் திருமண மண்டபம் 3)இடைப்பாடி- மான் மார்க் மண்டபம் ஏரி ரோடு. 4) பேளூர் -ஜெயமுருகன் திருமண மஹால் பேளூர். 5)மேச்சேரி -எம்.எஸ்.எஸ் மஹால் மல்லிகுந்தம். 6)ஓமலூர்- குமரவேல் திருமண மண்டபம் தட்டாஞ்சாவடி. 7)வீரபாண்டி – செங்குந்தர் மண்டபம் கை புதூர்.

சேலம் மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி; சேலம் வனக்கோட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்க, கள்ளத்துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் வருகிற அக்.30-ந் தேதிக்குள் வனத்துறை, போலீசார் அல்லது ஊர் முக்கியஸ்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைப்பவர்கள் மீது வழக்குகள் பதியப்படாது என தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை அகற்ற வேண்டும் மா, பலா, கொய்யா, எலுமிச்சை, போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுப் போன கிளைகளை அகற்ற வேண்டும். மழையின் பொழுது விவசாய பயிர்கள் சேதம் ஏற்படாத வகையில் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும், என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

சேலம் மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு இணையவழி நிதி பரிவர்த்தனை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை முடிந்தவுடன் “Logout” செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இது இணைய மோசடிகளைத் தவிர்க்க முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். நிதி மோசடிகள் ஏற்பட்டால் உடனே 1930 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.

சேலத்தில் இன்று (அக்.09) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: 1)அதிகாரப்பட்டி சமுதாயக்கூடம் செங்காடு 2)நிலவாரப்பட்டி ஸ்ரீ விஜய மஹால் கெஜல்நாயக்கன்பட்டி 3) ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை 4) கெங்கவல்லி ஸ்ரீ குமரன் மஹால் கெங்கவல்லி 5)நங்கவள்ளி எஸ்விபி நர்சரி பிரைமரி பள்ளி காட்டம்பட்டி 6)தாரமங்கலம் கேஜி திருமண மண்டபம் அமரகுந்தி 7)மகுடஞ்சாவடி கள்ளர் சமுதாயக்கூடம் வைகுந்தம்.
Sorry, no posts matched your criteria.