India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கருவுற்ற தாய்மார்கள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று முன்கூட்டியே அறிவதற்கு முயற்சி செய்வதும் அல்லது மருத்துவரால் தெரிவிக்கப்படுவதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது குண்ட சட்டம் பாயும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது பற்றி புகார்களை தெரிவிக்க 7358122042 அறிவிப்பு.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.26 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
தமிழகத்தில் சிமெண்ட் நகரான அரியலூரில் இருந்து தஞ்சாவூருக்கும், பெரம்பலுார் வழியாக சேலம் வரை புதிய ரயில் பாதை அமைக்க, மத்திய அரசிடம் எம்.பி.,க்கள் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனால் பலர் பயனடைவார்கள் என்பதால் தஞ்சாவூர், பெரம்பலூர், சிதம்பரம், திருச்சி, சேலம் எம்.பி. க்கள் இணைந்து மத்திய ரயில்வே அமைச்சரை வலியுறுத்தி,வேண்டும் என கோரிக்கை.
சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் Watch and Clock Repair 3 மாத கால இலவச பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது.
இப்பயிற்சிக்கு நேரடியாகவோ அல்லது https://forms.gle/8Zf9r5Ne61x7CERW9 என்ற Google Form மூலமாகவோ ஏப்.18- க்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம், தனது தொகுதிக்குட்பட்ட கோயில்களின் திருப்பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார். பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, “மேச்சேரி பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ரூ.4 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகள் 90% நிறைவடைந்துள்ளது;வரும் ஜூலையில் குடமுழுக்கு நடத்தப்படும்” என்றார்.
சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வுகள் தினந்தோறும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சேலம் போலீசார் நேற்று ஒரு விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் குழந்தை தொழிலாளர் முறையை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர். மேலும், குழந்தைகளுக்குத் தேவையான கல்வியை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
ஜோலார்பேட்டை-திருப்பத்தூர் மார்க்கத்தில் தண்டவாளம் மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக இம்மார்க்கத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில், குறிப்பிட்ட நாட்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் (56108), வரும் 29, 30ம் தேதிகளில் ஈரோட்டில் இருந்து சேலம் வழியே திருப்பத்தூர் வரை மட்டும் இயக்கப்படுகிறது.
சேலத்தில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா? என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் மாா்ச் 28 ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 41,398 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். 320 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளை சோ்ந்த 913 மாற்றுத் திறனாளிகள் உள்பட 41 ஆயிரத்து 398 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 183 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம்-7 அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 16 மணி நேரம் கொண்ட கார் பராமரிப்பு அடிப்படை பணிமனை குறுகிய கால பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது.மேலும் விவரங்களுக்கு, துணை இயக்குநர் / முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஏற்காடு மெயின் ரோடு, சேலம்- 636007 என்ற முகவரியிலும், 99769 54196, 99651 03597 கைப்பேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்-உடனே SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.