India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் 2024-25-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணாக்கர்களுக்கான ‘உயர்வுக்கு படி’ நிகழ்ச்சியில் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். பிருந்தாதேவி சேலம் புனிதபால் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஆக.29) பார்வையிட்டார்.
சேலம் மாவட்ட மக்களே..வாகனம் ஓட்டும் போது மொபைலில் செய்தி அனுப்புவது, உயிருக்கு ஆபத்தானது என சேலம் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. ஒரே நேரத்தில் வாகனம் ஓட்டவும், மொபைல் பயன்படுத்தவும் முடியாது என்பதால், செல்பேசி பயன்படுத்துவதைத் தவிர்த்து பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உயிரைக் காக்கும் பொறுப்பு உங்கள் கைகளில் உள்ளது.
ரயில்வே மேம்பாலத்தில் தொழில்நுட்ப பணிகள் காரணமாக, ஆக.30, செப்.01, செப்.02 ஆகிய தேதிகளில் சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் (56108) ஈரோட்டில் இருந்து மொரப்பூர் வரையிலும், ஜோலார்பேட்டை- ஈரோடு பயணிகள் ரயில் (56107) மொரப்பூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு செல்லும் என்று சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.29) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
சேலம் மக்களே.. மழை காலங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987-94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
சேலம் மாவட்டத்தில் சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, கரிசல்பட்டியில் அருண் மஹால் திருமண மண்டபம், ஏத்தாப்பூர் தந்தை பெரியார் வாரச்சந்தை திடல், சித்தர்கோவில் சமுதாய கூடம், எடப்பாடியில் உள்ள ஸ்ரீ நடராஜ திருமண மண்டபம், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள நேரு கலையரங்கம் ஆகிய இடங்களில் நாளை (ஆக.30) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
சேலம் மாநகராட்சியில் 29.08.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளனர். சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.
சேலம் மக்களே, Oil India Limited காலியாக உள்ள 100 Senior Officer, Superintending Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.80,000 முதல் 2,20,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
சேலம் அண்ணா பூங்கா அருகில் உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் முதன் முறையாக மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நீச்சல் குளத்தில் இன்று (ஆக.29) பல்வேறு பிரிவுகளில் நீச்சல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் தலைமைச் செயலாளரின் உத்தரவின் படி, சேலம் மாவட்டத்திற்கு பெங்களூர் பெல் நிறுவனத்திலிருந்து 200 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 600 விவிபேட் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை மாவட்ட ஆட்சித்தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அனைத்து கட்சியினர் முன்பு வாக்குப்பதிவு பாதுகாப்பு கட்டிடத்தில் பாதுகாப்பாக வைத்தார்.
Sorry, no posts matched your criteria.