India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செப்டம்பர் மாதத்திற்கான காஸ் சிலிண்டர் விலை பட்டியலை இன்று (செப்.01) எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சேலத்தில் 19 கிலோ எடைக் கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.51 குறைந்து ரூ.1,687 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், 5-வது மாதமாக வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.886.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், 2025-26ஆம் ஆண்டுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வரும் அக்டோபர் மாதம் 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெற உள்ளது. அரசுத் துறை, வாரியம், கழகம் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோர் இந்தப் பயிலரங்கில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்த்துள்ளார்.
இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக சேலம் வழியாகச் செல்லும் கோவை-தன்பாத் சிறப்பு ரயில் (03680) நாளை (செப்.02) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் சுமார் 08.25 மணி நேரம் தாமதமாக மாலை 04.15 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
சேலம் மாநகரில் இன்று ( செப்டம்பர் 1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
மேட்டூர் அணையில் இருந்து எந்நேரமும் உபரிநீர் திறக்கப்பட உள்ளதால், 6-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பும் நிலையில், எந்நேரமும் 16 கண் மதகு வழியாக உபரி நீர் திறக்கப்பட உள்ளது. அணையின் இடது கரையில் உள்ள தங்கமாபுரி பட்டினம், பெரியார் நகர், அண்ணா நகர், வ.உ.சி நகர், சேலம் கேம்ப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்துக்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையை சுற்றியும், பாதிக்கப்பட்ட தோல் பகுதியையும் சுற்றி, இந்த காந்த குளத்தில் போட்டால், தோல் வியாதி குணமாகும் என்பது ஐதீகம். தோல் வியாதிகளால் அவதிப்படுவோருக்கு SHARE பண்ணுங்க!
சேலம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <
சேலம் மாநகராட்சியின் மாநகர பொறியாளர் ஆத்தூர் செந்தில் (எ) செந்தில்குமார் கடந்த ஆக-30ம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில், முன்கூட்டியே அவரை சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை. அவர் மீது குற்றச்சாட்டு ஒன்று நிலுவையில் உள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் நாளை (செப்டம்பர் 2) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: ▶️சூரமங்கலம் மண்டலம் – கந்தசாமி கவுண்டர் திருமண மண்டபம் சிவதாபுரம் ▶️கருக்கல்வாடி – கேகேஎம் திருமண மண்டபம் கிருஷ்ணம் புதூர்
▶️ சங்ககிரி – சமுதாயக்கூடம் சந்தைப்பேட்டை
▶️ நங்கவள்ளி – எம்என்வி திருமண மண்டபம் நங்கவள்ளி ▶️வீரபாண்டி – ஏவிஎம் திருமண மண்டபம் வேம்படிதாளம் ▶️தலைவாசல் – சமுதாயக்கூடம் ராமானுஜபுரம்.
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை வழங்கி வந்தனர். அதன் அடிப்படையில் தமிழக அரசின் நலத்திட்டங்களையும், சலுகைகளையும் பெற மாற்று திறனாளிகள் வந்திருந்தனர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி இருந்த இடத்திற்கு நேரடியாக சென்று மனுக்களை பெற்றார்.
Sorry, no posts matched your criteria.