India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
சேலம் நாராயண நகரில் 3-வது கிராஸ் பகுதியில் இன்று (ஏப்ரல் 18) பட்டப்பகலில் வீட்டில் புகுந்த மர்மநபர்கள், வீட்டில் இருந்த வயதான தம்பதியை மிரட்டி 7 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓட்டியுள்ளனர். இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற அம்மாப்பேட்டை காவல்துறையினர், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் ஏப்ரல் 18 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 10 மணி புனித வெள்ளி ஒட்டி குழந்தை இயேசு பேராலயத்தில் சிலுவையினால் அனுஷ்டிப்பு▶️ காலை 10 மணி செட்டிச்சாவடி பகுதியில் நீதிமன்றம் சார்பில் மரம் நடும் விழா ▶️மாலை 3 மணி மத்திய அரசை கண்டித்து இந்திய முஸ்லிம் லீக் கட்சி ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️மாலை 6 மணி கோட்டை அழகிரிநாதர் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூசைகள்
▶️வட்டாட்சியர், சேலம்: 9445000547
▶️வட்டாட்சியர், ஏற்காடு:9445000548
▶️வட்டாட்சியர், மேட்டூர்:9445000552
▶️வட்டாட்சியர், ஓமலூர்:9445000553
▶️வட்டாட்சியர், சங்ககிரி:9445000554
▶️வட்டாட்சியர், எடப்பாடி:9445000556
▶️வட்டாட்சியர், ஆத்தூர்:9445000550
▶️வட்டாட்சியர், கெங்கவல்லி: 9445000551
▶️வட்டாட்சியர், வாழப்பாடி:9445000549
▶️வட்டாட்சியர், தலைவாசல்:9655539111
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று(ஏப்.17) வெளியிட்டுள்ள அறிக்கையில், திட்ட மேலாண்மை அலகில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech, M.B.A., M.Sc., படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தற்காலிக பணிக்காக மாதம் ரூ.35,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு 25ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
சேலத்தில் நேற்று, 17 வயது சிறுவன் ஒருவன் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை அணுகி தனக்கு வேலை வாங்கித் தருமாறு கோரியுள்ளான். இதில் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர், சிறுவனை சோதனையிட்டபோது பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் விசாரனையில், பெற்றோருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வந்தது தெரியவந்தது.
சுற்றுலாத் துறையின் மானியக் கோரிக்கையில், ஏற்காடு மற்றும் பூலாம்பட்டி ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்களில் வாகன நிறுத்துமிடம், நடைபாதை, பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் தகவல் மையங்கள் அமைப்பதற்காக ரூபாய் 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு, பயணிகளை ஈர்க்கும் வகையிலும், அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் பயன்படுத்தப்படும்.
சேலம் அரசு ஐடிஐயில், கடிகார பழுதுநீக்கம் தொடர்பான 3 மாத குறுகிய கால இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான சேர்க்கை நடக்கிறது. இதில் சேர விருப்பம் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், நாளை ஏப்ரல் 18-ம் தேதிக்குள் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயிற்சி பெற்று பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம்: தலைவாசல் அரிமா சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து வருகிற ஏப்.27ஆம் தேதி காலை 8:00 மணி முதல் 1:00 மணி வரை தலைவாசல் மும்முடி யூனியன் ஆபீஸ் எதிரில் உள்ள அரிமா அரங்கத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க !
சேலத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினைக் கொண்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலோ (அ) <
Sorry, no posts matched your criteria.