India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகர காவல் இன்று 7-9-25 ஞாயிறு, இரவு ரோந்து அதிகாரிகள் விவரம், சேலம் டவுன் ஆய்வாளர் தேவராஜன், அன்னதானப்பட்டி ஆய்வாளர் பழனி, கொண்டலாம்பட்டி ஆய்வாளர் மோகனா, அம்மாபேட்டை ஆய்வாளர் விஜேந்திரன், அஸ்தம்பட்டி ஆய்வாளர் யுவராஜ், சூரமங்கலம் ஆய்வாளர் மனோன்மணி, மேலும் புகார் தொடர்பான உதவிக்கு 9486094666 என்ற எண்ணை அழைக்கலாம் என மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்துக்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையை சுற்றியும், பாதிக்கப்பட்ட தோல் பகுதியையும் சுற்றி, இந்த காந்த குளத்தில் போட்டால், தோல் வியாதி குணமாகும் என்பது ஐதீகம். தோல் வியாதிகளால் அவதிப்படுவோருக்கு SHARE பண்ணுங்க!
சேலத்தில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள், அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது. https://tamilnilam.tn.gov.in/citizen/ வெப்சைட்டில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்ய வேண்டும். விரைவாக பட்டா ரெடியாகும். SHARE பண்ணுங்க!
சேலம் மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று (செப்.07) மாலை 06.00 மணிக்கு சேலம் கடைவீதியில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் நடை சாத்தப்படுகிறது. அதேபோல், சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் நடை இரவு 07.30 மணிக்கு அடைக்கப்படுகிறது. இக்கோயில்களில் நாளை (செப்.08) சுத்தப்படுத்தி நடை மீண்டும் திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலத்தில் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்கள், ரயில்களில் பீடி, சிகரெட் பிடித்தவர்கள், பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீ மற்றும் பொருட்கள் எடுத்து வந்த நபர்கள் என மொத்தம் 9,124 பேர் சிக்கினர். இவர்கள் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 19,000 அபராதம் விதித்து அதனை ஆர்பிஎப் போலீசார் வசூலித்துள்ளனர்.
சேலத்தில் கடந்த செப்.04-ல் தங்கம் கிராம் ரூ.9,795 ஆகவும், செப்.05-ல் ரூ.9,865 ஆகவும், செப்.06- ல் ரூ.9,950 ஆகவும் உயர்ந்து விற்பனையானது. இதன்படி கடந்த இரு நாட்களில் மட்டும் சேலத்தில் தங்கம் கிராமுக்கு ரூபாய் 155, சவரனுக்கு ரூபாய் 1,240 விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட விழாக்காலங்கள் என்பதால் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்ப்பு!
சேலம் மாவட்டம ஆத்தூர் அருகே நேரு நகர் பகுதியில் அண்ணன் சூர்யா (27) என்பவரை தம்பி சிவசுதன் (21) என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்து சூர்யா ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு. இச்சம்பவம் குறித்து ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் விசாரணை மேலும் ஆத்தூர் டி.எஸ்.பி.,அலுவலகம் பின்புறம் நடைபெற்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம் சார்பில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் செப்டம்பர் 15 முதல் 24 வரை சேலம்,நால்ரோட்டில் உள்ள சாமுண்டி காம்ப்ளக்ஸில் நடைபெற உள்ளது. பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.இதன் மூலம் தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மற்றும் நகை வியாபார நிறுவனங்களில் வேலை பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94437 28438, 98941 96425 அழைக்கவும்!SHARE
சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பதவிக்கு நாளை (செப்.08) காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை இலவச மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ மாதிரி தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் இந்த முழு மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.