Salem

News March 25, 2025

சேலம் மாவட்டத்தில் 3 அறிவுசார் மையங்கள் அமைகிறது!

image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 25) நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகளை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ளார். அதன்படி, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயிற்சி பெற ஏதுவாக நடப்பாண்டில் வாழப்பாடி, கருப்பூர், ஜலகண்டாபுரம் உள்பட தமிழகத்தில் 20 பேரூராட்சிகளில் ரூ.33 கோடியில் அறிவுசார் மையங்கள் அமைகிறது.

News March 25, 2025

சேலத்திற்கு மெட்ரோ ரயில் வருமா? 

image

சேலத்திற்கு மெட்ரோ ரயில் வருமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மீண்டும் குழு அமைத்து ஆய்வுச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கோவை, மதுரை, திருச்சியில் மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மெட்ரோ ரயில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சேலத்திலும் மெட்ரோ ரயில் விடுவது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் மீண்டும் குழு அமைத்து ஆய்வுச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News March 25, 2025

ஜோலார்பேட்டை-ஈரோடு தாமதமாகும் நிர்வாகம் அறிவிப்பு

image

ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ரயில் மார்க்கத்தில் தண்டவாளம் மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. இதனால் இந்த மார்க்கத்தின் வழியாக இயங்கும் ஜோலார்பேட்டை ஈரோடு ரயில் 25ஆம் தேதி முதல் ஒன்றாம் தேதி வரை 45 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் அதாவது ஜோலார்பேட்டையில் பிற்பகல் 2:45 மணிக்கு புறப்பட்டு குறிப்பிட்ட பகுதியில் 45 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News March 25, 2025

230 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம்!

image

தமிழகத்தில் வரும் மார்ச் 28- ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில் 41,398 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வைக் கண்காணிக்க 230 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

News March 25, 2025

ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் ஏப்.3-இல் பொது ஏலம்

image

ரயில்வேக்கு நிலம் கொடுத்த சேலம் அமானி கொண்டலாம்பட்டி உள்ளிட்ட 15 குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை ரூபாய் 30 லட்சம் இதுவரை கிடைக்கவில்லை. அதனால் ஜப்தி பொருட்கள் ஏலத்துக்கு வருகிறது. வாதி, பிரதிவாதி தவிர யார் வேண்டுமானாலும் ஏலத்தில் கலந்து கொண்டு பொருட்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். ஏப்.03- ம் தேதி காலை 10 முதல் மாலை 05.45 மணிக்குள் சேலம் அஸ்தம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் ஏலம் நடக்கிறது

News March 25, 2025

போஸ்ட் ஆபீஸ் வேலை: நீங்க பாஸா

image

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் நிரப்பப்படும் போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. <>இங்கு கிளிக் <<>>செய்க. இதில் ஊதியம் ரூ.12,000 முதல் ரூ.29,000 வரை வழங்கப்படும். ( SHARE பண்ணுங்க)

News March 24, 2025

சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (24.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News March 24, 2025

சிறந்த கிராமமாக வீராணம் தேர்வு

image

சேலம் மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் மதநல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக 2024- 2025 ஆம் ஆண்டிற்கான அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியம் வீராணம் கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. அதை அடுத்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 10 லட்சத்திற்கான காசோலை இன்று சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் பிருந்தா தேவி அதிகாரிகளிடம் வழங்கினார். இதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

News March 24, 2025

இரண்டு ஆண்டு சிறை அபராதம் ஆட்சியர் எச்சரிக்கை

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் குழந்தை திருமணச் சட்டம் 2006ன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணும் 21 வயது நிறைவடையாத ஆணும் திருமணம் செய்து கொண்டால் இதில் தொடர்புடையவர்களுக்கு சட்டப்படி குற்றம் என்றும் இதற்காக இரண்டு வருடம் சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News March 24, 2025

சிறந்த கிராமமாக வீராணம் தேர்வு

image

சேலம் மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் மதநல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக 2024- 2025 ஆம் ஆண்டிற்கான அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியம் வீராணம் கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. அதை அடுத்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 10 லட்சத்திற்கான காசோலை இன்று சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் பிருந்தா தேவி அதிகாரிகளிடம் வழங்கினார். இதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

error: Content is protected !!