Salem

News October 11, 2024

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைவு

image

மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 7,226 கன அடியிலிருந்து 5,317 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 90.280 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 52.972 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

News October 11, 2024

ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களின்கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் (ம) கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அவ்வகையில், சேலத்தில் 162 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க https://drbslm.in/இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

News October 10, 2024

நீட் ரகசியம் எப்போது வெளிவரும்..? எடப்பாடி பழனிசாமி

image

“நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை உதயநிதி இதுவரை வெளியிடவில்லை; நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் குரல் கொடுக்கவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?, மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது. நிறைய படிப்புகள் இருக்கின்றன”- சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

News October 10, 2024

விமானத்தில் செல்வோர் கவனத்திற்கு

image

வரும் அக்.27 முதல் குளிர்கால அட்டவணைபடி, சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத்துக்கு இயக்கப்படும் விமானங்களின் பயண நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. புதிய அட்டவணைப்படி, தினமும் சேலத்தில் இருந்து ஒருமுறை மட்டுமே சென்னைக்கு விமானம் இயக்கப்படவுள்ளது.

News October 10, 2024

சேலத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்

image

சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு கனமழை பெய்த நிலையில், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 23-வது வார்டு திருவாக்கவுண்டனூர் முல்லை நகர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததை நேரில் பார்வையிட்ட பாமக எம்எல்ஏ அருள், மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்து மழைநீரை வெளியேற்றுமாறு அறிவுறுத்தினார். அத்துடன், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

News October 10, 2024

சுரங்கப்பாலத்தை சூழ்ந்த மழைநீர்

image

சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, கந்தம்பட்டி ரயில்வே சுரங்கப்பாலத்தில் வெள்ளம் சூழந்தது. கந்தம்பட்டி சுரங்கப்பாலத்தில் மழைநீர் தேங்கியதால் இளம்பிள்ளை செல்லும் சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து இளம்பிள்ளை செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர். பேருந்துகளும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

News October 10, 2024

“நீட் தேர்வு ரத்துக்கு அரசு எதுவும் செய்யவில்லை”

image

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “நீட் தேர்வை ரத்துச் செய்ய திமுக அரசு எதையும் செய்யவில்லை, நீட் தேர்வைக் கொண்டு வந்த திமுக-வே அதை ரத்துச் செய்வதாக இரட்டை வேடம் போடுகிறது. திமுக அரசின் போலி வாக்குறுதிகளால் விலை மதிப்பற்ற உயிர்களை இழந்து வருகிறோம் என பேசினார்.

News October 10, 2024

மாணவி தற்கொலை: இ.பி.எஸ் நேரில் ஆறுதல்

image

எடப்பாடியைச் சேர்ந்தவர் புனிதா. இவருக்கு மருத்துவ கலந்தாய்வில் மதிப்பெண் குறைந்ததால் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்கவில்லை. இதில் மனம் உடைந்த புனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்ற அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தியதுடன், மாணவியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.2 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.

News October 10, 2024

பள்ளி மாணவி தற்கொலை: உதயநிதி இரங்கல்

image

எடப்பாடியைச் சேர்ந்தவர் புனிதா. இவருக்கு மருத்துவ கலந்தாய்வில் மதிப்பெண் குறைந்ததால் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்கவில்லை. இதில் மனம் உடைந்த புனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதற்கு துணை முதல்வர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து Xதளத்தில், 7 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் பதிவிட்டுள்ளார்.

News October 9, 2024

சேலம்: சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்

image

கெங்கவல்லி மலைப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்த நிலையில் இன்று காலை மணக்காடு பகுதியில் சிறுத்தை கால்தடம் உள்ளதை பார்த்து பொதுமக்கள் அச்சம் உடனடியாக வனத்துறை அதிகாரிகள் பிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். குட்டியுடன் சிறுத்தை உலா வருவதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

error: Content is protected !!