India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம், தனது தொகுதிக்குட்பட்ட கோயில்களின் திருப்பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார். பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, “மேச்சேரி பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ரூ.4 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகள் 90% நிறைவடைந்துள்ளது;வரும் ஜூலையில் குடமுழுக்கு நடத்தப்படும்” என்றார்.
சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வுகள் தினந்தோறும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சேலம் போலீசார் நேற்று ஒரு விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் குழந்தை தொழிலாளர் முறையை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர். மேலும், குழந்தைகளுக்குத் தேவையான கல்வியை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
ஜோலார்பேட்டை-திருப்பத்தூர் மார்க்கத்தில் தண்டவாளம் மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக இம்மார்க்கத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில், குறிப்பிட்ட நாட்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் (56108), வரும் 29, 30ம் தேதிகளில் ஈரோட்டில் இருந்து சேலம் வழியே திருப்பத்தூர் வரை மட்டும் இயக்கப்படுகிறது.
சேலத்தில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா? என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் மாா்ச் 28 ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 41,398 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். 320 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளை சோ்ந்த 913 மாற்றுத் திறனாளிகள் உள்பட 41 ஆயிரத்து 398 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 183 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம்-7 அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 16 மணி நேரம் கொண்ட கார் பராமரிப்பு அடிப்படை பணிமனை குறுகிய கால பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது.மேலும் விவரங்களுக்கு, துணை இயக்குநர் / முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஏற்காடு மெயின் ரோடு, சேலம்- 636007 என்ற முகவரியிலும், 99769 54196, 99651 03597 கைப்பேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்-உடனே SHARE பண்ணுங்க.
சேலம் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீடு கழகம் இணைந்து சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள அத்வைத ஆசிரமம் சாலையில் உள்ள விநாயக வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ஒருங்கிணைந்த மக்கள் குறைதீர் கூட்டம் நாளை மறுநாள் (மார்ச் 27) காலை 9 மணி முதல் 1 மணி வரையிலும், இரண்டாம் பாகம் கூட்டம் மதியம் 2 மணி முதல் மாலை 5:45 வரை நடைபெறும் என்று அறிவிப்பு.
சேலம் அடுத்த வீராணம் சுக்கம்பட்டியைச் சேர்ந்த அமுதா (36) சாக்கடை கால்வாயில் குப்பைகளைக் கொட்டியுள்ளார். இது தொடர்பான தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் சிவக்குமார் அமுதாவை தாக்கியுள்ளார். இது படுகாயமடைந்த அமுதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் எலெக்ட்ரீசியனுக்கு ரூபாய் 2,000 அபராதமும், 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ? அல்லது ரவுடிகள் தொல்லை இருந்தாலும் கீழ்கண்ட எண்ணில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாநகர காவல் துறை சார்ந்த அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் வரும் ஏப்ரல் 01 முதல் நீச்சல் கற்றல் பயிற்சி முகாம் துவங்கவுள்ளது. 12 வேலை நாட்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணமாக மொத்தம் ரூ.1770 ஆகும். கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி கட்டணத்தொகை www.sdat.tn.gov.in வாயிலாகவும், G Pay, Phone Pay மூலமாக மட்டும் செலுத்த வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.