India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை- தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (03680) நாளை (ஏப்.22) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக 08.25 மணி நேரம் அதாவது மாலை 04.15 மணிக்கு புறப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஏப்.22) காலை 09.30 மணிக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான இலவச சிறப்பு மாதிரி தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 2 புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0427- 2401750 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
எர்ணாகுளம்-பாட்னா சிறப்பு ரயில் (06085) வரும் ஏப்ரல் 25, மே 2, 9, 16, 23, 30-ம் தேதிகளில் (வெள்ளிக்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு அடுத்தநாள் அதிகாலை 3.25க்கும், திருப்பூருக்கு அதிகாலை 4.15க்கும், ஈரோட்டிற்கு அதிகாலை 5.05க்கும் வந்து சேலத்திற்கு காலை 6.12மணிக்கு வந்தடைகிறது என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரில் அமைந்துள்ளது காமநாதீஸ்வரர் கோயில். மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
தமிழகத்தில் ‘உத்யம்’ இணையதளத்தில் பதிவுச் செய்துள்ள சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் சென்னை, 3.75 லட்சத்துடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கோவை 2.58 லட்சத்துடனும், சேலம் 1.77 லட்சத்துடனும் மூன்றாமிடத்தில் உள்ளது. பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மக்களே அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என சேலம் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இரவு நேரங்களில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றாலோ, விபத்து என்றாலோ உடனடியாக சம்பந்தப்பட்ட மொபைல் நம்பரை அழைத்தால், காவலர்கள் உடனே உதவிக்கு வருவார்கள் என அதிகாரிகள் அறிவுறுத்தி அந்த எண்களையும் அறிவித்துள்ளனர்.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வரும் ஏப்.25, மே 02, 09, 16, 23, 30 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னாவிற்கும், மறுமார்க்கத்தில், ஏப்.28, மே 05, 12, 19, 26, ஜூன் 02 ஆகிய தேதிகளில் பாட்னாவில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்; டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரில் கஞ்சாவை வீட்டுக்கே சென்று விற்பனை செய்ததாக தாய், மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூங்கொடி, அவரது மகன் சந்தோஷ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, ஓமலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய், மகன் கஞ்சா விற்ற சம்பவம் ஓமலூர் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வரும் ஏப்.26, மே 03, 10, 17, 24 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து ப்ரௌனிக்கும், மறுமார்க்கத்தில், ஏப்.29, மே 06, 13, 20, 27 ஆகிய தேதிகளில் ப்ரௌனியில் இருந்து போத்தனூருக்கும் வாராந்திர கோடைக்கால சிறப்பு ரயில்கள் (06055/06056) இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம், திருப்பூர், ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது. சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
Sorry, no posts matched your criteria.