India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் இன்று (22.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துக்கள், திருட்டு, சந்தேக நபர்கள் குறித்து சேலம் அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம்.
சேலம் மஞ்சவாடி காப்புக்காடு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடும் வகையில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த சேலத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 39), சுகில் குமார் (வயது 30) ஆகிய இருவரை கைது செய்த வனத்துறையினர் இருவருக்கும் தலா ரூபாய் 1.50 லட்சம் அபராதம் விதித்தனர். வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்தனர்.
கோடை விடுமுறை காலம் தொடங்கியுள்ளதையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர் நிலைகளில், குழந்தைகள் இறங்காமல் கவனமுடனும், எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருப்பதை பெற்றோர் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டுமென தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இதை, உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
சேலம் மாவட்டத்தில் ஏப்ரல் 2025 மாதாந்தர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25-ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண் 215-ல் நடைபெற உள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, வேளாண்மை சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, சேலம் ஏற்காடு பிரதான சாலை கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 29.04.2025 அன்று காலை 10.00 மணி அளவில் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி தொடர்பான விவரங்களை 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.(ஷேர் செய்யுங்கள்)
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். இந்த முகாமானது ஏப்.25- ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கோரிமேடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
சேலம் மாவட்டத்தில் ஏப்ரல் 2025 மாதத்திய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25.04.2025, வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண் 215-ல் நடைபெற உள்ளது.
விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும் விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவிப்பு!
சேலம் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.04.2025 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், ஏதேனும் விபத்துக்கள், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஏப்ரல் 21ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்.21) மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் வெயில் கடுமையாக சுட்டெரித்தது. இதனால் வாகன ஓட்டிகள், உணவு டெலிவரி ஊழியர்கள், கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடும் அவதியடைந்தனர். இதுவரை இல்லாத அளவாக நடப்பாண்டில் இன்று சேலத்தில் அதிகபட்ச அளவாக 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.