India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதிய டெண்டரில் காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாதகமான விதிமுறைகள் உள்ளன. புதிய விதிமுறைகளை கண்டித்து காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று (27ம் தேதி) முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். வேலைநிறுத்தத்தை முன்னிட்டு சேலம் கருப்பூரில் உள்ள காஸ் நிரப்பும் (பாட்டிலிங் பிளாண்ட்) அருகே நேற்று மாலை முதல் நூற்றுக்கணக்கான எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டன.
அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே, சேலத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. சேலத்தில் நேற்று முன்தினம் 98.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகி இருந்த நிலையில், நேற்று 99.3 டிகிரியாக உயர்ந்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மதிய நேரத்தில் வெப்பம் தகிக்கிறது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் வெப்ப நிலை காரணமாக பகல் பொழுதுகளில் கடைவீதிகளில் மக்கள் கூட்டமும் குறைவாகவே காணப்படுகிறது.
சேலம் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்தேர்வுக்கான பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8,10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு,நாமக்கல், மாவட்டங்களை சேர்ந்தவர்கள் <
சேலம் மார்ச் 27 இன்றைய முக்கிய நிகழ்வுகள்▶️காலை 8 மணி அருள்மிகு எல்லை பிடாரி அம்மன் திருக்கல்யாணம் குமரசாமிப்பட்டி ▶️காலை11 மணி சேலம் மாநகராட்சி மன்ற இயல்பு கூட்டம் ▶️மாலை 4 மணி ஆரம்ப சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மாவட்ட சுகாதார அலுவலகம் ▶️மாலை 6 மணி எல்லைப்பிடாரியம்மன் திருக்கோவில் பங்குனி மாத குண்டம் மிதி திருவிழா
பட்ஜெட் அறிவிப்பின்படி, சென்னை- செங்கல்பட்டு- திண்டிவனம் – விழுப்புரம் மற்றும் சென்னை – காஞ்சிபுரம் வேலூர் மற்றும் கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம் ஆகிய 3 வழித்தடங்களில், பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து (RRTS) சேவையை உருவாக்குவதற்கு, விரிவான சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்வதற்கு டெண்டர் வெளியிட்டது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.
கோடை காலம் முன்னரே சேலத்தில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.
கருவுற்ற தாய்மார்கள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று முன்கூட்டியே அறிவதற்கு முயற்சி செய்வதும் அல்லது மருத்துவரால் தெரிவிக்கப்படுவதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது குண்ட சட்டம் பாயும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது பற்றி புகார்களை தெரிவிக்க 7358122042 அறிவிப்பு.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.26 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
தமிழகத்தில் சிமெண்ட் நகரான அரியலூரில் இருந்து தஞ்சாவூருக்கும், பெரம்பலுார் வழியாக சேலம் வரை புதிய ரயில் பாதை அமைக்க, மத்திய அரசிடம் எம்.பி.,க்கள் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனால் பலர் பயனடைவார்கள் என்பதால் தஞ்சாவூர், பெரம்பலூர், சிதம்பரம், திருச்சி, சேலம் எம்.பி. க்கள் இணைந்து மத்திய ரயில்வே அமைச்சரை வலியுறுத்தி,வேண்டும் என கோரிக்கை.
சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் Watch and Clock Repair 3 மாத கால இலவச பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது.
இப்பயிற்சிக்கு நேரடியாகவோ அல்லது https://forms.gle/8Zf9r5Ne61x7CERW9 என்ற Google Form மூலமாகவோ ஏப்.18- க்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.