Salem

News September 9, 2025

சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

image

அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சேலம் மாவட்டத்தில் இன்று (செப்.09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

News September 9, 2025

33 நாட்கள் 198 முகாம்கள் 1,84,777 மனுக்கள்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதி உங்கள் வீடு தேடி வரும் அரசு என்றும் திட்டத்தின் கீழ், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் குறைகள் மனுக்களை கேட்டறிந்து தீர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 33 நாட்களில் 1098 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இவற்றின் வாயிலாக மொத்தம் 1,84,777 மனுக்கள் பெரப்பட்டுள்ளது.

News September 9, 2025

111 மாணாக்கர்கள் உயர்கல்வியில் சேர்க்கை!

image

சேலம் மற்றும் ஆத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட “உயர்வுக்கு படி” நிகழ்ச்சியில் 216 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு 111 மாணாக்கர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள மாணாக்கர்களை உயர்கல்வியில் சேர்ப்பதற்கான தொடர் நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 9, 2025

சேலம்: B.E./B.Tech படித்திருந்தால் வேலை!

image

சேலம் மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 21.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க

News September 9, 2025

ஆதிதிராவிட மாணவர்களுக்கான இலவச பயிற்சி ஆட்சியர் அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தில் குரூப்-1 2025 முதல் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான இலவச பயிற்சி சென்னையில் நடைபெற உள்ளது சேர விருப்பமுள்ளவர்கள் https://www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News September 9, 2025

JUST IN: சேலத்தில் துணை கலெக்டர்கள் இடமாற்றம்!

image

சேலம் உள்பட தமிழகம் முழுவதும் 17 துணை கலெக்டர்களை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சேலத்தில் பயிற்சி துணை கலெக்டராக இருந்த மாருதிப்பிரியா, கோவை தெற்கு ஆர்டிஓவாகவும், திருச்சியில் பயிற்சி துணை கலெக்டராக இருந்த கேந்திரியா, சங்ககிரி ஆர்டிஓவாகவும், தர்மபுரி பயிற்சி துணை கலெக்டராக இருந்த சவுந்தர்யா, சேலம் நெடுஞ்சாலை அலுவலக தனித்துணை கலெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News September 9, 2025

சேலம் மத்திய சிறைக்குள் செல்போன், கஞ்சா!

image

சேலம் மத்திய சிறைக்குள் காகித பந்தில் வைத்து செல்போன், சார்ஜர் மற்றும் கஞ்சாவை வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கஞ்சா அடங்கிய காகித பந்தை வீசியது யார்? உள்ளே அடைக்கப்பட்டுள்ள எந்த கைதிக்காக வீசப்பட்டது? என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 9, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுரை

image

சேலம் மாவட்ட விவசாயிகள் ரசாயன மருந்து உபயோகத்தைக் குறைத்து இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார். உயிரி கட்டுப்பாட்டு காரணிகளையும் பயன்படுத்தி பூச்சி மற்றும் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தி சாகுபடி செலவு குறைந்து அதிக லாபம் பெற்று பயன்பெறலாம் எனவுமவர் தெரிவித்துள்ளார்.

News September 9, 2025

சேலம்: மகளிர் உரிமைத் தொகை கேட்டை 92 ஆயிரம் மனு

image

சேலம்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்பட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு 92.090 பேர் சேலம் மாவட்டத்தில் மனு வழங்கியுள்ளனர். அவர்களின் மனு மீது விரைவில் தீர்வு காணப்பட்டு அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி செய்தார்.

News September 9, 2025

சேலம்: 400 இடங்களில் சாக்கடை கால்வாய்!

image

சேலம் மாநகராட்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த ரூபாய் 100 கோடி திட்டத்தில் மழைநீர் தேங்கும் பகுதிகள் உள்ளிட்ட 400 இடங்களில் புதிதாக சாக்கடை கால்வாய் அழைக்கப்படுகிறது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிர்வாக ஒப்பதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி கிடைத்ததும் விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!