India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை- 2024′ மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.18வது நாளான நேற்று (அக்.23) முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான பதக்கப் பட்டியலில் சேலம் மாவட்டம் 18 தங்கம், 11 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு 2வது இடத்திலும், கோவை 3வது இடத்திலும் உள்ளன.
சேலம் பெரியார் பல்கலை. எதிரே பத்மவாணி கல்லூரியில், நாளை மறுநாள் (அக்.26) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணிமுதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் விருப்பமுள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம். மேலும் தகவலுக்கு, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 0427 – 2401750, 9788880929 எண்கள் மூலமோ தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் கருப்பூர் டோல்கேட் அருகில் உள்ள பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் அக்.26-ம் தேதி காலை 08.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதால் வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
டாணா புயல் எதிரொலியாக, சேலம் வழியாக இயக்கப்படும் கன்னியாகுமரி- திப்ரூகர் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் இருமார்க்கத்தில் இன்றும் (அக்.23), பாட்னா- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் நாளையும் (அக்.24), சந்திரகாசி- மங்களூரு விவேக் எக்ஸ்பிரஸ் நாளையும், மங்களூரு- சந்திரகாசி விவேக் எக்ஸ்பிரஸ் அக்.26- ல் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வரும் அக்.31-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூபாய் 2.50 லட்சமாக இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு https://scholarships.gov.in/, https://socialjustice.gov.in ஆகிய இணையதளங்களை அணுகி மாணவர்கள் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க தேசிய கட்சி கேட்டது; வலிமையான கட்சியான அ.தி.மு.க. பூத்துக் குலுங்கும் மலர் போன்றது; மலராக அ.தி.மு.க. பூத்துக் குலுங்க கூட்டணிக் கட்சிகள் தேனீக்களாய் வரும்” என்று சேலம் வனவாசியில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
சேலம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வனவாசியில் நங்கவள்ளி வடக்கு, தெற்கு ஒன்றியம், வனவாசி பேரூராட்சி சார்பில் அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுக-வின் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்.
ஆத்தூர் அருகே கல்பகனூர் மொரப்பங்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற இளைஞரை அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வெட்டிக்கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இறந்தவர் உடலை மீட்டு ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று (அக்.23) காலை 6 மணி வரை 231.1 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, சேலம் மாநகரில் 40.7 மி.மீ. மழையும், வாழப்பாடியில் 40 மி.மீ. மழையும், ஏற்காட்டில் 31.4 மி.மீ. மழையும், ஏத்தாப்பூரில் 23 மி.மீ. மழையும், கரியக்கோவிலில் 20 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழைப் பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவ.04- ம் தேதி கொச்சுவேலியில் இருந்து பெங்களூருவுக்கும், நவ.05- ம் தேதி பெங்களூருவில் இருந்து கொச்சுவேலிக்கும் அந்தியோதயா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்று செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் ரயில் நின்றுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.