India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் வரும் நவ.29ம் தேதி புத்தகத் திருவிழா தொடங்கவுள்ளதாக சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் 9ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறவிருக்கிறது. நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். பல்வேறு முன்னணி பதிப்பகங்கள் பங்கேற்கவுள்ளன.
கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக சேலம் மாநகர காவல் துறை சார்பில் போலீஸ் அக்கா திட்டம் துவங்கப்பட்டது. சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி கலந்து கொண்டு உரையாற்றினார். மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உள்ளிட்ட காவல்துறையினர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாளை (அக்.29) காலை 9 மணிக்கும், வீரபாண்டி ஒன்றியத்திற்கு வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பகல் 2 மணிக்கும், சேலம் ஒன்றியத்திற்கு சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாலை 04.30 மணிக்கும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் ‘மக்கள் சந்திப்புத் திட்ட முகாம்’ நடைபெறவுள்ளது.
சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் ரூபாய் 30,000 லஞ்சம் பெற்ற பில் கலெக்டர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். ஷாஜி என்பவரின் புதிய வீட்டிற்கு வரி நிர்ணயிக்க லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாகப் பிடிபட்டார்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (அக்.28) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வின் போது மாவட்ட மாற்றுத்திறனாளிகளிடம் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை இன்று (அக்.28) சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன் மற்றும் அரசு அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் ஏற்றுக் கொண்டனர்.
சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வாட்ச், கடிகாரம் பழுது நீக்குதல் குறித்து 3 மாத குறுகிய கால இலவச பயிற்சிக்கு சேர்க்கை நடக்கவுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதற்கு நவ.20-க்குள் அசல் ஆவணங்களான மதிப்பெண் சான்றிதழ், ஆதார், 4 புகைப்படத்துடன் சேலம் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயன்பெறலாம். 75026-28826 என்ற எண்ணை கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், சேலம் மாநகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பட்டாசுக் கடைகளில் விதவிதமான பட்டாசுகளையும், கிப்ட் பாக்ஸ்களையும் பொதுமக்கள் தங்களது பிள்ளைகளுடன் வந்து ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதனால் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு வியாபாரம் சூடுபிடித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சேலம் சஹோதயா பள்ளிகள் இணைந்து நடத்திய தடகளப் போட்டியில் உடையாப்பட்டியில் அமைந்துள்ள கைலாஷ் மான்சரோவர் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பாகக் கலந்து கொண்டு 15 தங்கம், 14 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
மேச்சேரி உப்புபள்ளம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (60) வீட்டில் தனியாக இருந்த போது 2 பெண்கள் ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி பரிகாரம் செய்ய 1/2 பவுன் தோடு, ரூபாய் 4,000 பணம் பெற்றுக் கொண்டு மாயமாகினர். மேச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருச்சி தொட்டியத்தை சேர்ந்த ரேவதி (20) மற்றும் மற்றும் வைத்தீஸ்வரி (26) ஆகியோரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.