India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபான கடைகள், பார்கள், மன மகிழ் மன்றங்கள் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி மே தினத்தை முன்னிட்டு கண்டிப்பாக மூடவேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி உத்தரவு விடுத்துள்ளார். மீறி திறந்தால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக பத்ரகாளியம்மன் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், குடும்ப பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

சேலம் மாவட்டத்தில் 15 இடங்களில் தற்போது தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அயோத்தியாபட்டினம், பெத்தநாயக்கன்பாளையம், மற்றும் தலைவாசல் ஆகிய மூன்று இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதை அரசு பரிசீலித்து அறிவிப்பை வெளியிடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 1 ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கண்டிப்பாக கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் தூய்மை பாரத திட்டம் உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளின் மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, வரும் மே 01-ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் உள்ளிட்ட அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இக்கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அழைப்பு!

பல்கலைக்கழக விதிமுறைகளை மீறி தனியார் அமைப்பு தொடங்கி அதன் மூலமாக முறைகேடு நடந்ததாக பதிவுச் செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் இன்று (ஏப்.25) சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

சித்திரை அமாவாசையை முன்னிட்டு, சேலம், தருமபுரி, மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு வரும் ஏப்.27- ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறைக்கும், சித்தர்கோயிலுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் 200 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 3 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை நடக்கின்றது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கமான விற்பனையில் இருந்து 60% பீர் வகைகள் விற்பனை கூடியுள்ளதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில், ” இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் காலிப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 12- ஆம் தேதி முதல் மே 11- ஆம் தேதி வரை <

சேலம் மாநகரில் பொதுவிநியோகத் திட்ட அரிசிக் கடத்தி தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த பரிமளா என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது காவல்துறை. இதையடுத்து அவர் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.