India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலத்தில் நாளை(ஜன.23) மின் பராமரிப்பு பணி நடைபெறுகின்றது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை சிங்கிபுரம்,வாழப்பாடி, துக்கியாம்பாளையம்,அத்தனுார்பட்டி,பேளூர், தாரமங்கலம் ,தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திக்காட்டானுார்,வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையம்பாளையம்,பெத்தாம்பட்டி, ராஜாபாளையம், அரியானுார், சீரகாபாடி, சன்னியாசிப்பட்டி, ஜலகண்டாபுரம், ஆடையூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

சேலம் மாவட்டத்தில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் சாலையோரக் கடைகள் இயங்கி வருகிறது. இங்கு வழங்கப்படும் உணவின் தரம் அல்லது சுகாதாரத்தில் குறைபாடுகள் இருந்தால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலரை 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் புகாரளிக்கலாம். உங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த அர்ஷத் அலி(40), தனது மனைவி பல்கிஷை(28) வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதால், திருமணமான ஏழே மாதங்களில் பல்கிஷ் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அம்மாபேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, அர்ஷத் அலியை கைது செய்தனர். மேலும் சேலம் மகளிர் நீதிமன்றம், குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அர்ஷத் அலிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <

சேலம் மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

சேலம் சோனா கல்வி குழும வளாகத்தில் வரும் 24-ஆம் தேதி மெகா தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைக்கும் இம்முகாமில், 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன. 8-ஆம் வகுப்பு முதல் பொறியியல் வரை பயின்றவர்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் ஓமியோபதி படித்து வந்த நெல்லை மாணவி வர்ஷினியை, தந்தை வரதராஜன் கடந்த 6-ஆம் தேதி படுகொலை செய்தார். பின்னர் தலைமறைவான அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தற்போது சென்னையில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரைப் பற்றித் துப்பு கொடுத்தால் ரூ.25,000 சன்மானம் வழங்கப்படும் எனப் போலீசார் அறிவித்துள்ளனர். தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளலாம்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.21) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Sorry, no posts matched your criteria.