India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம், வட்டார மருத்துவ அலுவலர்களின் எண்கள் கன்னங்குறிச்சி-9487427742, இளம்பிள்ளை-9842061813, காடையாம்பட்டி-9994540962, சரக்கபிள்ளையூர்-8903522927, தாரமங்கலம்-9486765761, கொளத்தூர்-9442921044, மேச்சேரி-9443828077, நங்கவள்ளி-9487478134, சித்தூர்-9788199591, மகுடஞ்சாவடி-9443499255 உங்கள் பகுதியில் உள்ள மருத்துவத்துறை சார்ந்த கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5,001 பிரசவங்களும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 9,774 பிரசவங்கள் என மொத்தம் 14,775 பிரசவங்கள் நடைபெற்று உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பான முறையில் பிரசவம் நடக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
திறன்மிக்க ஓட்டுநர்களை உருவாக்கும் நோக்கத்தில் சேலம் மாவட்டம், தேவண்ணகவுண்டனூர் கிராமத்தில் ரூபாய் 17.25 கோடி மதிப்பீட்டில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று (ஏப்.23) போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு
சேலம் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகள் அனைத்தும் சமூக நலத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மேலும் உரிமம் வேண்டி விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அறை எண்.126-ல் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் அணுகி பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் ஏப். 25 முதல் மே 15 வரை தடகளம், கால்பந்து, கைப்பந்து, கையுந்து பந்து, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு இலவச பயிற்ச்சி அளிக்கப்படவுள்ளது. விருப்பமுள்ளோர் ஏப். 25 ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆதார் அட்டையுடன் நேரில் வந்து பதிவு செய்யலாம் என சேலம் கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் அனைத்து மாநில போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறந்த மாநிலத்திற்கான விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. அதில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்திற்கு எரிபொருள் சேமிப்பு, பாதுகாப்பான இயக்கம், பஸ் பயன்பாடு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் முதல் பரிசு பெற்றுள்ளது. இதனால் சிறந்த போக்குவரத்து கழகம் என்ற பெயரை சேலம் கோட்டம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்தில் உள்ள அரசு டவுன் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் என மொத்தம் 1,900 பேருந்துகளிலும் கடந்த மாதம் முதல் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. வெகு தூரம் செல்லும் பேருந்துகளில் இந்த பரிவர்த்தனை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும் டவுன் பேருந்துகளில் வரவேற்பு கிடைக்கவில்லை.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்தில் உள்ள அரசு டவுன் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் என மொத்தம் 1,900 பேருந்துகளிலும் கடந்த மாதம் முதல் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. வெகு தூரம் செல்லும் பேருந்துகளில் இந்த பரிவர்த்தனை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும் டவுன் பேருந்துகளில் வரவேற்பு கிடைக்கவில்லை.
சேலத்தில் காலியாக உள்ள 417 அங்கன்வாடி பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படவுள்ளது. சம்பளமாக ரூ.4100 – 24200 வரை வழங்கப்படும். இதர தகவல்களை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், சேலம் மாநகராட்சி, ஆத்தூர் மற்றும் எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு <
ஆத்தூர் அருகே குப்பைக் கொட்டும் தகராறில் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் பாலமுருகன், அன்பரசி,பூபதி மற்றும் உறவினர் கதிரவன் ஆகியோர் மீது ஆத்தூர் ஊரக போலீசார் வழக்கு பதிந்தனர். உள்பட அன்பரசி, செல்வி ஆகிய பெண்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.