India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.27 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், ஏதேனும் விபத்துக்கள்,அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மார்ச் மாதம் 27 ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று (மார்ச் 27) 101.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நடப்பாண்டில் சேலத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும். இன்னும் அக்னி நட்சத்திரம் தொடங்காத நிலையில் இந்த அளவிற்கு வெப்பம் பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு சிறப்புமிக்க முருகன் கோயில்கள் உள்ளன. முத்துமலை முருகன் கோயில், காவடி பழனி ஆண்டவர் கோயில், காளிப்பட்டி முருகன் கோயில், கந்தாஸ்ரமம் திருக்கோயில், குமரகிரி தண்டாயுதபாணி கோயில் ஆகியவை சிறப்பு வாய்ந்த கோயில்களாகும். இதில், முத்துமலை முருகன் கோயிலில் உலகின் மிக உயரமான முருகன் சிலை உள்ளது. முருகன் 146 அடியில் பிரம்மாண்டமாக காட்சியளித்து அருள் புரிந்து வருகிறார். SHARE IT!
சேலம் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட பொருட்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். வாகன அபராதத் தொகையினை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள முன்வராத காரணத்தால் 25 வாகனங்கள் மார்ச் 29 காலை 10.30 மணிக்கு சர்கார் கொல்லப்பட்டியில் உள்ள சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் பொது ஏலம் நடைபெறுகிறது.
தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு நாளை (28.03.2025) தொடங்க உள்ளது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 522 பள்ளிகளை சேர்ந்த 21,008 மாணவர்கள், 20,448 மாணவிகள் என மொத்தம் 41,456 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு மாவட்ட முழுவதும் 183 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கைக்கடிகாரம் மற்றும் கடிகாரம் பழுதுபார்க்கும் 3 மாத கால இலவச பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. இப்பயிற்சிக்கு நேரடியாகவோ (அ) https://forms.gle/8Zf9r5Ne61x7CERW9 என்ற Google Form மூலமாகவோ வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
உத்தமசோழபுரத்தில் அமைந்துள்ள புது மாரியம்மன் திருக்கோயிலில் பங்குனி மாத திருவிழா பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதலுடன் வெகு சிறப்பாக தொடங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும்,சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேட்டூரை சேர்ந்த புருஷோத்தமன் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகவில்லை இவர் தனது வியாபாரத்திற்கு மேட்டூர் சேர்ந்த தங்கவேலு என்ற முதியவரிடம் 18 லட்சம் கடன் வாங்கினார் பணம் கொடுக்கல் வாங்கலின் போது இருவரும் ஓரினச்சேர்க்கை இருந்துள்ளனர் சில தினங்களுக்குப் பிறகு புருஷோத்தமன் முதியவரை பார்க்க வில்லை இதனால் முதியவர் கத்தியை எடுத்து புருஷோத்தமனின் குத்தினார் காவல்துறை விசாரணை
அமாவாசை, யுகாதி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்ட சார்பில் சென்னை, ஓசூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும், மார்ச் 28- ஆம் தேதி முதல் ஏப்ரல் 01- ஆம் தேதி வரை 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.