India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். நவ.01 முதல் சேலத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்தில் இருந்து சென்னை, ஓசூர், கோவை, பெங்களூரு, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் 15 லட்சம் பேர் வெளியூர் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளி முடிந்து சொந்த ஊர் திரும்புவதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சேலம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 துப்புரவு பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஆற்றுக்குள் விழுந்த ஒரு சடலத்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 2 இடங்களில் சேலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒலி மற்றும் காற்று மாசுவை அளவிடும் கருவிகளைப் பொருத்தியிருந்தனர். அதன்படி, தீபாவளி தினத்தன்று மட்டும் சேலத்தில் ஒலி மாசு 78.3 டெசிபல் ஆகவும், காற்றின் தரக்குறியீடு 174 ஆகவும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடியில் நாளை நடைபெற உள்ள ஊழியர் கூட்டத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கவுள்ளார். எடப்பாடி நகர நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் சார்பு பணி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி நகர செயலாளர் முருகன் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் கிளை மேலாளர் கருப்பூரைச் சேர்ந்த பச்சியப்பன் (37) ரூபாய் 26.37 லட்சம் கையாடல் செய்ததாக வந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பச்சியப்பனை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த கணக்காளர் சத்யா என்பவரை தேடி வருகின்றனர்.
பட்டாசுகளை வெடிக்க மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்தது. அதாவது, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், சேலம் மாவட்டத்தில் போலீசார் கண்காணித்து வந்தனர். அனுமதித்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் கோட்டத்தின் மூலம் 500 சிறப்பு பஸ்கள் வருகிற 4-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. இதன் மூலம் பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி வெளியூர் பயணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக கடந்த 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்களில் மட்டும் வழக்கமான நாட்களை விட கூடுதலாக சிறப்பு பஸ்கள் மூலம் சுமார் 15 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
சேலம் மாநகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த நந்தகுமார் மதுவிலக்கு தடுப்பு பிரிவுக்கும், கருப்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய கண்ணையன் அன்னதானப்பட்டிக்கும், இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் உள்பட 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பிறப்பித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நமது சேலம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் எதிர்வரும் 5/11/2024 செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது. மேலும் 19/11/2024 அன்று பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலர் தலைமையில் நடக்க உள்ளது.
Sorry, no posts matched your criteria.