India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக நாளை (ஜன.15) திருவனந்தபுரம் வடக்கில் இருந்து பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக ரேணிகுண்டாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா இன்று சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) லலித்ஆதித்ய நீலம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.
சேலம் மாவட்டம், ஏற்காடு அடிவாரப் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி (50), சின்ன சீரகாபாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்ததாக கடந்த ஜன.10இல் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகை இன்று (ஜன 14) கொண்டாடப்படுகிறது. மேலும், நாளை (புதன்கிழமை) மாட்டு பொங்கலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலத்தில் வசிக்கும் வெளியூர் மக்கள் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். ஆகையால் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் 900 போலீசார் குவிந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் கடைவீதி அருகே உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட்டில் கடந்த 2 நாட்களாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.2,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது மேலும் இன்று ரூ. 600 உயர்ந்து குண்டுமல்லி ஒரு கிலோ ரூ. 3,000-க்கு விற்கப்பட்டது. இதேபோல் முல்லை பூவும் கிலோ ரூ.3,000-க்கு விற்பனையாகிறது. பூக்கள் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1) 8 மணி கன்னங்குறிச்சி பகுதியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பொங்கல் விழா 2) காலை 9 மணி வீரபாண்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் விழா விழா 3) 10 மணி வள்ளுவர் சிலையருகே தமிழரன் மாணவர்கள் அமைப்பின் பொங்கல் விழா 4) காலை 10 மணி 9வது வட்டத்தில் திமுக சார்பில் பொங்கல் விழா
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். ஜனவரி 13 இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆத்தூர் கூலமேட்டில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வரும் ஜன.17- ம் கூலமேட்டில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கூலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, வரும் ஜன.15- ஆம் தேதி திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி)- விஜயவாடா இடையே சிறப்பு ரயில் (06152) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்லம், செங்கனூர், கோட்டயம், திருச்சூர், போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடிகர் அஜித்-க்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், துபாயில் நடைபெற்ற 24HSeries கார் பந்தயத்தில் 3வது இடத்தைப் பிடித்துள்ள நடிகர், அன்புச் சகோதரர் அஜித்குமார் தலைமையிலான #AjithkumarRacing அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்.
Sorry, no posts matched your criteria.