India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த கமலேஸ்வரி மற்றும் அவரது அண்ணன் கார்த்திக் ஆகியோர் நேற்றிரவு (நவ. 03) மத்திய பேருந்து நிலையத்திற்கு காரில் வந்த போது தடுத்த போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் எஸ்.எஸ்.ஐ சரவணன் வேலன் கார் டிரைவரை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த கமலேஸ்வரி காலனியால் எஸ்.எஸ்.ஐ.யை தாக்கியுள்ளார். பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
சேலம் புதிய பஸ் நிலையத்திலும், ஜங்ஷன் ரயில் நிலையத்திலும் நேற்று காலை முதல் இரவு வரையிலும் மக்கள் பல்வேறு ஊர்களுக்கு பயணம் புரிய வருகை புரிந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சேலத்திலிருந்து திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு சென்ற அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்-ஈஸ்வரி தம்பதியின் 4 மாத பெண் குழந்தை ஆதிரை. 32 நாடுகளின் தேசியக் கொடியை சரியாக கண்டுபிடித்து காட்டி, ‘நோபல்’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். இந்த சாதனையை வீடியோவாக பதிவு செய்து அனுப்பியதில், அக். 22ல் உலக சாதனைப் பட்டியலில் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆதிரைக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது.
கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர் அருகில் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்கள் 4 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் இரங்கலைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:சேலம் மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள சங்ககிரி கிளை சிறையில் காலியாக இருக்கும் சமையல் பணியிடத்தை நிரப்ப தகுதியான நபரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் வரும் 5ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வீரப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் சேலம் புறநகர் மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அ.தி.மு.க.வின் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். கூட்டத்தில் அ.தி.மு.க.வின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தீபாவளி பண்டிகை நிறைவாக விடுமுறையின் கடைசி நாளான இன்று அதிகாலை முதல் ஆத்தூர் பஸ் நிலையத்தில் தொலைதூர பயணத்திற்கான முன்பதிவு டிக்கெட்டிற்கு பொதுமக்கள் மற்றும் பயணிகள் நீண்ட வரிசையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து முன்பதிவுக்கான பயண சீட்டினை பெற்றனர். இதனால் பெண்கள், முதியவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தீபாவளி பண்டிகை முடிந்து வேலைக்கு மற்றும் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக சேலம் மாவட்டத்தில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதைத்தொடர்ந்து பயணிகள் வருகைக்கு ஏற்ப அந்தந்த மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சேலத்தில் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஓர் அரிய வேலைவாய்ப்பு.குறுகிய காலத்தில் அரசு சான்றிதழ், உதவித்தொகையுடன் அதிநவீன பயிற்சியுடன் முன்னணி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. குறைந்த இடங்களே உள்ளன. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 94898-77802, 95009-80430 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்.
சேலம் அருகே உள்ள செம்மண் திட்டு பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பட்டியல் சமூகத்தினர் மீது ஆதிக்க சமூக இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்தவர்கள் சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி தமிழரசி ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Sorry, no posts matched your criteria.