India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார். அப்பள்ளியில் பயிலும் கபடி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை பாராட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 9,929 கன அடியிலிருந்து 11,063 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 106.810 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 73.949 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
காவல்துறை இயக்குநரின் உத்தரவுப்படி சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நேற்று நடந்தது. அதில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், கலந்து கொண்டு பொதுமக்கள் மனுக்கள் மீதான விசாரணை நடத்தினார். மேலும் தீர்வு காணாத மனுக்கள் மீது விசாரணையை ஒத்தி வைத்தார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் இணைந்து வழங்கும் இலவச அழகுக்கலைப் பயிற்சி வழங்குகிறது. இதில் மேற்படிப்பு படிக்க இயலாத மாணவர்களுக்கு வேலை திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு சான்றிதழுடன் மாத ஊதியம் 16,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். சேலம் ஏற்காட்டில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு 80728-28762, 90258-08570 அழைக்கலாம்.
பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (நவ.6) நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் கலந்து கொண்ட தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அனைத்து துறைகள் மூலம் 73 பயனாளிகளுக்கு ரூ.59.64 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
கோவை- திண்டுக்கல் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (06106/ 06107) இருமார்க்கத்திலும் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த ரயில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையைத் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
➤சேலத்தில் ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் ஆகும். ➤ரயிலில் ஓசியில் பயணம் செய்த 16,000 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ➤சேலத்தில் எம்ஐஎஸ் அனலிஸ்ட் பணிக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ➤ஆத்தூரில் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் படுகாயம். ➤எடப்பாடியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட முன்றய பாமகவினர், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் 162 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு நாளையே கடைசி நாள் ஆகும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
சேலத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி நவ.08-ம் தேதி அன்று முற்பகல் காடையாம்பட்டி ஒன்றியத்திற்கு காடையாம்பட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும், பிற்பகல் ஓமலூர் ஒன்றியத்திற்கு ஓமலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும், தாரமங்கலம் நகராட்சிக்கு தாரமங்கலம் நகராட்சி அலுவலகத்திலும் மக்கள் சந்திப்புத் திட்ட முகாம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (வியாழக்கிழமை) சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள கலைஞர் மாளிகையில் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட, வீரபாண்டி ஒன்றியம், இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி பேரூர் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் காலை 11 மணிக்கு நடக்கிறது. இங்கு மதியம் 12 மணிக்கு சேலம் தெற்கு ஒன்றியத்திற்கும், மதியம் 12.30 மணிக்கு பனமரத்துப்பட்டி ஒன்றியம் மற்றும் பனமரத்துப்பட்டி, மல்லூர் பேரூர் நிர்வாகிகளுக்கும் நடக்கிறது.
Sorry, no posts matched your criteria.