Salem

News November 20, 2024

சேலத்தில் நாளை இங்கு மின்தடை 

image

சேலம் மாவட்டத்தில் நாளை(21.11.24) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் அஸ்தம்பட்டி, சங்ககிரி, உடையாப்பட்டி, தும்பல் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(21.11.24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே, இத்துணை மின் நிலையத்தின் கீழ் உள்ள ஊர்களில் மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளது.

News November 20, 2024

சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் இன்றைய (நவ.20) நிகழ்ச்சிகள்: 1)காலை 9 மணி – அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி. 2) புனித பால் மேல்நிலைப்பள்ளிகாலை 9 மணிக்கு உலக உணவு தினத்தை ஒட்டி விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நவதானிய உணவு கண்காட்சி நடைபெறுகிறது. 3) காலை 10 மணிக்கு அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன், அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்கின்றனர்.

News November 20, 2024

சேலம்: கிராம சபைக் கூட்டம் தேதி அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.23ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கிராம கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது.

News November 20, 2024

ரேஷன் அரிசியை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தல்

image

ரேஷன் அரிசி கடத்துபவர்களை, தமிழக அரசு இரும்புகரம் கொண்டு அடக்கி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் பொதுமக்களும், தாங்கள் நியாய விலை கடையில் வாங்கும் அரிசியை விற்பனை செய்யாமல், தங்கள் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

News November 19, 2024

சேலம்: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤சேலம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ➤ரேஷன் கடை வேலைக்கு நேர்முகத் தேர்வு ➤அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு: சாலை மறியல் ➤வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் ➤மேலும் ஒரு மாவட்ட செயலாளர் பதவி விலகல் ➤ உடற்பயிற்சியின் போது ஜிம்மிலேயே உயிரிழந்த நபர் ➤சேலத்திற்கு வருகை தரும் அமைச்சர் ➤தொழில் முனைவோருக்கு அரிய வாய்ப்பு ➤சேலம் எனப் பெயர் வந்தது எப்படி?.

News November 19, 2024

சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

image

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை வழியாக கோவையில் இருந்து பீகார் மாநிலம் ப்ரௌனிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (03358), இன்று (நவ.20) நள்ளிரவு 12.50 மணிக்கு பதிலாக சுமார் 5 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக, அதிகாலை 06.00 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

News November 19, 2024

ரேஷன் கடை வேலைக்கு நேர்முக தேர்வு

image

சேலம் கூட்டுறவுச் சங்கங்களில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் நவ.28 முதல் டிச.7 வரையும், கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நவ.7 முதல் நவ.9 வரையும் நடக்கிறது. இந்த நேர்முகத் தேர்வானது, சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது.

News November 19, 2024

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம்

image

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், எடப்பாடி, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, வீரபாண்டி, கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய 11 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 23,639 பேர் விண்ணப்பித்துள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வாக்காளர் பெயரை நீக்க 4,935 பேரும், திருத்தம் செய்ய 13,534 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

News November 19, 2024

ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

கோவை – பரவுனி சிறப்பு ரயில் (03358) கோவையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12.50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு வழியாக நாளை (புதன்கிழமை) அதிகாலை 3.28 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கு இருந்து 3.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு பரவுனி சென்றடையும் என்று சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 19, 2024

மேலும் ஒரு மாவட்டச் செயலாளர் பதவி விலகல்

image

நாம் தமிழர் கட்சியின் “வீரத்தமிழர் முன்னணியின் ” சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆகிய நான் இன்று (நவ.19) முதல் கட்சியின் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகிக் கொள்கிறேன் என்றும், தலைவரின் வழியில் தமிழ்தேசிய பாதையில் தொடர்வேன் என வைரம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்துள்ளார். நா.த.க.வின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து பதவி விலகி வருகின்றனர்.

error: Content is protected !!