India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய பெண் குழந்தை தினத்தில் தமிழ்நாடு அரசின் விருது பெறுவதற்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கான விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 25ஆம் தேதிக்குள் https://awards.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் வழக்கறிஞர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் வழக்கறிஞர் கண்ணன் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் கொடூரமாக வெட்டப்பட்டதை கண்டித்து, இன்று மற்றும் மறுநாள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி புறக்கணிப்பில் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.
சேலத்தில் மாநில அளவிலான கூட்டுறவு சங்க வார விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், கூட்டுறவு சங்கத்தில் 3300 காலி பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கான நேர்காணல் நடைபெற்று டிசம்பர் மாத இறுதிக்குள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், இந்த துறைக்கு வந்துள்ள பல்வேறு கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
சேலம் நேரு கலையரங்கத்தில் இன்று (நவ.20) கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த 71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி, சேலம், கள்ளக்குறிச்சி எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில், தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இணைப்பு ரயில்களின் வருகை தாமதம் காரணமாக, கோவை- சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (12244) இன்று (நவ.20) ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 04.05 மணிக்கும், கோவை- சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (12676) ஒரு மணிநேரம் தாமதமாக மாலை 04.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இரண்டு ரயில்களும் சேலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்.
“தமிழகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் புதிதாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்பட உள்ளது. கூட்டுறவுத்துறை மூலம் கடந்த ஆண்டு ரூபாய் 86,000 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ரூபாய் 1 லட்சம் கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் வரவு, செலவுக் கணக்குகளைத் தொடங்க பொதுமக்கள் முன்வர வேண்டும்” என சேலத்தில் நடந்த விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்டம், மேட்டூர் நகர துணைத் தலைவராக உள்ள ஜீவானந்தம் ராஜா கட்சியில் இருந்து விலகுவதாக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் அறிவித்துள்ளார். அவருடன் சேர்ந்து மேலும் 40 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். நாதக-வில் இருந்து தொடர்ந்துஅடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் உள்ள தொட்டில்பட்டி அருகே 60 வீடுகள் கொண்ட குடியிருப்பில், கடந்த 7ஆம் தேதி 12 வீடுகளின் கதவுகள் உடைத்து 13 பவுன் நகை, 1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், இது “தார் கேங்கின்” வேலையாக இருக்கலாம் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். யார் இந்த “தார் கேங்” (படிக்க அடுத்த பக்கம் திருப்புங்க)
ம.பி. தார் மாவட்டத்தில் மலைக்கிராமத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலை “தார் கேங்” என்பார்கள். இவர்கள் தமிழ்நாட்டில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் வீட்டின் தாழ்ப்பாளை கட்டிங் பிளேடால் உடைத்து கொள்ளையடிப்பது இவர்களது நேர்த்தி. கொள்ளை அடிப்பதற்கு முன் தங்களது குலதெய்வத்தை வழிபட்டு செல்வார்கள். அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்களை நடப்பதற்கு முன் இந்த கேங்கை சுற்றி வளைக்குமாக போலீஸ்?
பேசின் பிரிட்ஜ்- வியாசர்பாடி ரயில் நிலையங்களில் பராமரிப்பு காரணமாக, சேலம் வழியாக செல்லும் சில ரயில்கள் இன்று (நவ.20) மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. பாலக்காடு- சென்னை சென்ட்ரல் ரயில் (22652) சென்னை கடற்கரை வரையிலும், ஈரோடு- சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் (22650) பெரம்பூர் வரையிலும், ஆழப்புலா-சென்னை சென்ட்ரல் ரயில் (22640) ஆவடி வரை இயக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.