India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாழப்பாடி அடுத்த பேளூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி மோகனாம்பாள். இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே இருவருக்கும் கடந்த 1 வாரத்திற்கு முன் தகராறு ஏற்பட்டு, இருவரும் அங்குள்ள வசிஷ்ட நதியில் குதித்தனர். இதில் ராமன் உயிருடன் மீட்கப்பட்டார். இந்நிலையில் 1 வாரத்திற்கு பின் இன்று மோகனாம்பாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஓமலூர், தாராப்புரத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது பெயர் ஓமலூர் தொகுதியில் மட்டுமின்றி பண்ருட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, ஆர்.கே.நகர், பர்கூர், ஸ்ரீ பெரும்புதூர், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதியில் இருப்பதாக தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. தொடர்ந்து, தாலுகா அலுவலகத்திற்கு சென்று தனது தொகுதியின் பெயரை இளைஞர் உறுதி செய்தார். ஓமலூர் தொகுதியில் 32,000 பேருக்கு கடிதம் அனுப்பியதாக தகவல்.
சேலம் கிழக்கு கோட்ட தலைமை தபால் அலுவலகத்தில் வரும் டிச.24ம் தேதி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்களின் குறைகளை நேரிலோ (அ) தபால் மூலமாகவோ முதுநிலை கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு கோட்டம், சேலம்-636001 என்ற முகவரிக்கு டிச.18க்குள் கிடைக்குமாறு அனுப்பி பயன்பெற்று கொள்ளலாம் என சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மோகனசுந்தரம். இவர் புற்களை நன்கு பதப்படுத்தி அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு எண்ணெய் எடுத்து வருகிறார். இதன்மூலம் நாளொன்றுக்கு ரூபாய் 1,500 முதல் ரூபாய் 3,000 வரை வருவாய் ஈட்டும் விவசாயி, ஏற்கனவே பல கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை சீசனை முன்னிட்டு, சேலம் வழியாக செல்லும் 4 ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. டிச.13-ல் ஹைதராபாத்தில் இருந்தும் கோட்டயத்திற்கும் (07137), டிச.14-ல் கோட்டயத்தில் இருந்து செகந்திராபாத்திற்கும் (07138), டிச.08,15,22,29-ல் கச்சிக்குடாவில் இருந்து கோட்டயத்திற்கும் (07131), டிச.09,16,23,30-ல் கோட்டயத்தில் இருந்து கச்சிக்குடாவிற்கும் (07132) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தமிழக அரசு போக்குவரத்து சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் டிஜிட்டல் போர்டு, ஏ.சி, டிக்கெட் மெஷின் என பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பேருந்து நிலையத்தில் நடத்துநர்கள் ஊர்ப்பெயரை கூறி பயணிகளை அழைக்கும் முறை மட்டும் மாறாமல் இருந்தது. இந்நிலையில், சேலத்தில் ஊர்ப்பெயரை அறிவிக்க ஏதுவாக, தானியங்கி ஒலிபெருக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் இன்று (7.12.24) முக்கிய நிகழ்வுகள். 1)காலை 8 மணி குறிஞ்சி மருத்துவமனை புதிய சிகிச்சை பிரிவு துவக்கம். 2) காலை 9:30 புதிய பேருந்து நிலையத்தில் புதிய வழித்தட பேருந்துகளை அமைச்சர் துவக்கி வைக்கிறார். 3)காலை 10 மணி தெய்வீக திருமண மண்டபத்தில் துப்புரவு பணியாளருக்கான மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. 4)காலை 11 மணி சோனா அறிவியல் கலை கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.
பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்கு, 2025ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழக அரசின் https//awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அல்லது மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் பிருந்தா தேவி இன்று தகவல் வெளியிட்டுள்ளார்.
சேலத்தில் உள்ள துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படுகிறத. அதன்படி, பேளுர் துணை மின்நிலையத்தில் குறிச்சி, சின்னமநாயக்கன்பாளையம், புழுதிக்குட்டை, பெலாப்பாடி, செக்கடிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, கனுக்கானூர், சின்னவேலாம்பட்டி (ம) கூடமலை துணை மின்நிலையமான கிருஷ்ணாபுரம், கடம்பூர், மண்மலை, விஜயபுரம், நரிப்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தூய்மை பணியாளர்களை தொழில் முனைவராக மாற்றும் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் இன்று துவக்கி வைத்தார் அதன் ஒரு பகுதியாக இன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை விருந்து பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இந்த நிகழ்வில் கலெக்டர் பிருந்தா தேவி, எம்எல்ஏ அருள் சதாசிவம், எம்பி செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Sorry, no posts matched your criteria.