India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️சேலம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0427-2420011▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)

சேலம் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.

மத்திய அரசின் தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.ஐ.டி.யு , எல்.பி.எஃப் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் நாளை(ஜன.12) ஆட்டோக்கள் ஓடாது எனத் தொழிற்சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு, வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கோரப்பட்டுள்ளது.

சேலம் மக்களே இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! ‘ECI

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <

கெங்கவல்லி அருகே தெடாவூர் அம்பேத்கர் நகரில் கடந்த 1-ம் தேதி இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே இது தொடர்பான வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த தமிழக வெற்றி கழக நிர்வாகி அருண்குமாரை கெங்கவல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (பிப்.10) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிப்ரவரி 14-ல் சேலம் வருவதாகவும், அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை என பாஜக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவர் கோபிநாத் தெரிவித்துள்ளார். அமித்ஷா வருகை குறித்து இன்னும் முடிவாகவில்லை என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். சேலம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0427-2420011, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)
Sorry, no posts matched your criteria.