Salem

News December 9, 2024

சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள். 1)காலை மணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாராந்திர குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. 2) காலை கோட்டை மைதானத்தில் ஏஐடியுசி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3) காலை 12 மணி இந்திய கம்யூனிஸ்ட் லெனிலிஸ்ட் கட்சியின் சார்பில், ஏழைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

News December 9, 2024

புத்தக திருவிழா இன்றோடு நிறைவு

image

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள, மாநகராட்சி திடலில், புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்புத்தக திருவிழா இன்றோடு (9.12.24) நிறைவு பெறுகிறது. கடந்த 10 நாட்களாக நடைபெற்ற புத்தக திருவிழாவில், ஏராளமான, பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 8, 2024

சேலம் வழியாக பீகாருக்கு செல்லும் ரயில் சேவை நீட்டிப்பு

image

சேலம் வழியாக போத்தனூர் மற்றும் பீகார் மாநிலம், ப்ரௌனி இடையே இயக்கப்படும் வாராந்தர சிறப்பு ரயில் சேவை (06055/ 06056) நீட்டிக்கப்பட்டுள்ளது. போத்தனூர்- ப்ரௌனி சிறப்பு ரயில் டிச.21 முதல் ஜன.25 வரையிலும், ப்ரௌனி- போத்தனூர் சிறப்பு ரயில் டிச.24 முதல் ஜன.28 வரையிலும் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில், சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்; பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

News December 8, 2024

சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் இன்றைய (8.12.24) முக்கிய நிகழ்வுகள். 1)காலை 10 மணி கொங்குநாடு மக்கள் தேசிய காட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம். 2) காலை 10 மணி நாய் கண்காட்சி LFHSஅமைச்சர் துவக்கி வைக்கிறார். 3)காலை 11 மணி ஆதி தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் அதியமான் செய்தியாளர் சந்திக்கவுள்ளார்.

News December 8, 2024

சேலம் வழியாக செல்லும் சபரி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு!

image

சபரிமலை சீசனை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு சேலம் வழியாக இயக்கப்படும் நந்தட்- கொல்லம் இடையேயான சபரி சிறப்பு ரயில்கள் (07159/07160) நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜன.03,10-ல் நந்தட்டில் இருந்து கொல்லத்திற்கும், ஜன.05,12-ல் கொல்லத்தில் இருந்து நந்தட்டிற்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும், இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

News December 8, 2024

இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 

image

பெத்தநாயக்கன்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் பகுதியில் நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த, ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர், முன்னாள் சென்ற டிராக்டர் வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் ரவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

News December 8, 2024

சேலம் வழியாக தெலுங்கானாவுக்கு சிறப்பு ரயில்கள்

image

சபரிமலை சீசனை முன்னிட்டு, சேலம் வழியாக வரும் ஜன.17,24 ஆகிய தேதிகளில் தெலுங்கானா மாநிலம், காகஸ்நகரில் (Kagaznagar) இருந்து கொல்லத்திற்கும், மறுமார்க்கத்தில், ஜனவரி 19,26 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து காகஸ்நகருக்கும் சிறப்பு ரயில்கள் (07161/07162) இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும். டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

News December 7, 2024

சேலம்: இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 

News December 7, 2024

சேலம்: இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

News December 7, 2024

சேலத்தில் “இது புதுசு கண்ணா”

image

தமிழக அரசு போக்குவரத்து சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் டிஜிட்டல் போர்டு, ஏ.சி, டிக்கெட் மெஷின் என பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பேருந்து நிலையத்தில் நடத்துநர்கள் ஊர்ப்பெயரை கூறி பயணிகளை அழைக்கும் முறை மட்டும் மாறாமல் இருந்தது. இந்நிலையில், சேலத்தில் ஊர்ப்பெயரை அறிவிக்க ஏதுவாக, தானியங்கி ஒலிபெருக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!