India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலத்தல் இன்றைய (11.12.24) முக்கிய நிகழ்வுகள். ➤ பாரதியார் பிறந்தநாள் விழா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. ➤காலை 10 மணி கோட்டை மைதானத்தில் வணிக கடைகள் மீதான ஜிஎஸ்டி வரியை அகற்ற கோரி வணிகர் சங்கம் ஆர்ப்பாட்டம். ➤காலை 10 மணிக்கு சீலநாயக்கன்பட்டி ஜாஸ்மின் ஹாலில் 108 ஆம்புலன்ஸ் தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு. ➤மாலை 3 மணி “போதை இல்லா தமிழ்நாடு” குறித்து விழிப்புணர்வு
சேலம் என்றால் மலைகள் சூழ்ந்த இடம் என பொருள். சேலை நெசவில் பெயர்பெற்று சேலையூர் என்ற பெயர் சேலம் என காலப்போக்கில் மருவியது என கூறுவர். சேரன் ஆண்டதால் சேர்வராயன் மழை ஆயிற்று என்பது போல சேரலம் என்பது “சேலம்” ஆயிற்று என்பர். சேலம் மக்களே உங்கள் ஊர் பெயர் எப்படி வந்தது என கமெண்ட் பண்ணுங்க.
மலேசியாவில் கடந்த மாதம் நடைபெற்ற, சர்வதேச அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான சிலம்பம் போட்டியில், சேலம் ஏற்காட்டைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி அனுஷ்கா தங்கப்பதக்கம் வென்று சேலம் திரும்பினார். இந்நிலையில் அவர் தனது பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சியர், வாழ்க்கையில் மென்மேலும் முன்னேற வாழ்த்து தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
➤ சேலம் புத்தகத் திருவிழாவில் 1.06 லட்சம் புத்தகங்கள் விற்பனை ➤ மாட்டு சந்தையில் ரூ.30 லட்சத்துக்கு வர்த்தகம் ➤ பூலாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை ➤ பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை ➤ வீடு புகுந்து நகை திருடிய இருவர் கைது ➤ மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு ➤ லத்துவாடி ஊராட்சியில் ஆட்சியர் ஆய்வு ➤ கெங்கவல்லி: கால்நடை ஆராய்ச்சி பூங்கா விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் தகவல்
சேலம் மாவட்டம், கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பகுதியில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2 -ஆவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தில், சட்டப்பேரவையின் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
சபரிமலை சீசனை முன்னிட்டு, வரும் ஜனவரியில் சேலம் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத்- கோட்டயம், கோட்டயம்- செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07065/07066) சேவைகளுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (டிச.10) மதியம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. https://www.irctc.co.in/nget/train-search என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று பயணிகள் முன்பதிவுச் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பகுதியில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2 -ஆவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தில், சட்டப்பேரவையின் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
கடைகளின் வாடகை மீதான 18% ஜிஎஸ்டி வரி உயர்வை எதிர்த்தும், சேலம் மாநகராட்சி வணிக நிறுவனங்கள் சொத்து வரி பலமடங்கு உயர்வை எதிர்த்தும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரமைப்பின் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நாளை (டிச.11) காலை 10 மணிமுதல் மதியம் 12 மணி வரை ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதனால் நாளை கடையடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் இன்று(10.12.24) முக்கிய நிகழ்வுகள். ▶ இன்று காலை 9 மணி முதல் ஒய்எம்சிஏ அரங்கில் தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கூட்டம். ▶ சிஐடியு சார்பில் காலை 11.30 மணிக்கு ஆர்ப்பாட்டம். ▶காலை 10:30 மணிக்கு கோட்டை மைதானத்தில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம். ▶ இன்று 12 மணிக்கு இந்திய தொழிற்சங்க மையம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
Sorry, no posts matched your criteria.