India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாடு முழுவதும் வருகின்ற 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. மேலும் மூன்றாவது நாளில் விநாயகர் சிலை கரைக்கப்படும். சேலம் மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. விநாயகர் சிலையை அனுமதிக்கப்பட்ட நீர் நிலையங்களில் மட்டும் தான் கரைக்க வேண்டும் ரசாயனம் இல்லாத களிமண் சிலையை மட்டும் தயாரிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவு.

சேலம் ஆகஸ்ட்19 நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ நடைபெறும் முகாம் இடங்கள்:
▶️நவபட்டி மாதவி மஹால் நவபட்டி.
▶️ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை ஆத்தூர்.
▶️கருப்பூர் சந்தைப்பேட்டை சமுதாயக்கூடம் சந்தைப்பேட்டை. ▶️பெத்தநாயக்கன்பாளையம் ஐஸ்வர்யா மஹால் மேற்கு ராஜபாளையம்.
▶️வீரபாண்டி விக்னேஷ்வரா திருமண மண்டபம் அரியானூர்.
▶️ எடப்பாடி ஸ்ரீ சென்ராய பெருமாள் கோவில் அருகில் சமுதாயக்கூடம் பக்க நாடு கஸ்பா.

சேலம் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தா தேவி தெரிவித்துள்ளாா். மேலும், விவரங்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அறை எண் 11-இல் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடா்புகொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

சேலம் மக்களே நாளை மின் பராமரிப்பு காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. அதன்படி அஸ்தம்பட்டி, அழகாபுரம், சாரதா கல்லூரி சாலை, மணக்காடு, ஏற்காடு, முத்துநாயக்கன்பட்டி, கே.ஆர்.தோப்பூர், இரும்பாலை, மாரமங்கலத்துப்பட்டி, பாகல்பட்டி, பேளூர், புழுதிக்குட்டை, வெள்ளாளப்பட்டி, குறிச்சி, பெரியகுட்டி மடுவு, சின்னமநாயக்கன்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. SHARE பண்ணுங்க மக்களே!

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., “தி.மு.க. கூட்டணி கட்சிகள் யாரும் கூட்டணி ஆட்சி கோரிக்கை விடுக்கவில்லை. ஆட்சியில் பங்கு பற்றியும் தலைவர்கள் பேசவில்லை. சில இரண்டாம் கட்ட தலைவர்கள் ஆசையை வெளியிடுகிறார்கள். ஆனால், அது கூட்டணி தலைவர்கள் கருத்தாகவே இல்லையென” தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து விளக்குகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவப்பு விளக்கு எரிந்தால் நின்று கொள்ள வேண்டும், மஞ்சள் விளக்கு எரிந்தால் காத்திருக்க வேண்டும், பச்சை விளக்கு எரிந்தால் செல்லலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஒழுங்கை கடைபிடிப்பதன் மூலம் உயிரையும், பிறர் உயிரையும் பாதுகாக்கலாம் எனவும் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

சேலம் மக்களே புலனாய்வு துறையில் 4,987 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <

சேலம் அம்மாப்பேட்டையில் 16 வயது மாணவியுடன் டியூசன் டீச்சர் மாயமானார். இது குறித்து மாணவியின் பெற்றோரும், டியூசன் டீச்சரின் பெற்றோரும் அளித்த புகாரின் பேரில், அம்மாப்பேட்டை காவல் ஆய்வாளர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். எங்கே போனார்கள்? சென்னை சென்றார்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

“6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு தபால் தலை சேகரிப்பு வினாடி-வினா போட்டி நடக்கவுள்ளது. வெற்றி பெறும் மாணவர்கள் ரூ.6,000 பரிசு பெறலாம். விண்ணப்பப் படிவத்தை https://tamilnadupost.cept.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விவரங்களுக்கு 0427-2253050, 2266370 எண்களை அழைக்கலாம். இப்போட்டி செப்.20-ல் நடக்க உள்ளது” என சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் தகவல்!

சேலம் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
Sorry, no posts matched your criteria.