India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இன்று (ஆகஸ்ட் 18) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 163 கல்லூரிகள், 47 வங்கிகளும், 550 கிளைகளும் மாவட்டத்தில் உள்ளது. இவற்றின் வாயிலாக மாணாகர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது. 2025-26 ஆம் ஆண்டில் 6600 மாணவர்களுக்கு ரூ.128 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் வரை காலாண்டில் 1378 மாணவர்களுக்கு ரூ.21 கோடி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

குற்றத் தடுப்பு மற்றும் குற்றங்களை கண்டறிவதில் உதவியாக இருக்கும் சிசிடிவி கேமராக்களை நிறுவுமாறு சேலம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வீடுகள், கடைகள், போன்ற இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது பாதுகாப்பை அதிகரிப்பதோடு, சந்தேக நபர்களை அடையாளம் காணவும் உதவுகிறது. அனைவரும் ஒத்துழைத்து கேமரா பொருத்தி, சமூகத்தின் பாதுகாப்பில் பங்கு கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

சேலம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மேலும் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதற்கு வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <

சேலம் மாவட்டம், மேட்டுர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு, பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒலிபெருக்கியின் மூலம் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கரையோரம் இருக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக வெளியேறினர்.

சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு (ஆக.20) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
https://cmtrophy.sat.in, https://sdat.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர்.

சேலம் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக சேலத்தில் நடைபெற்றது. இதில் தேர்வு எழுத 6,592 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், தேர்வை 3,816 பேர் மட்டுமே எழுதினர். 2,776 பேர் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம் மக்களே.. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

கருமந்துறை அரசு பழங்குடியினா் ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் இரா. பிருந்தாதேவி வெளியிட்டார். கருமந்துறை அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 2025 ஆம் ஆண்டு பயிற்சிக்கு பழங்குடியின மாணவ, மாணவிகள் சோ்க்கை 100 சதவீதம் இலக்கை அடையும் வகையில் நேரடி சோ்க்கைக்கு வரும் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நிடிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.