India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
➤ சேலம் புத்தகத் திருவிழாவில் 1.06 லட்சம் புத்தகங்கள் விற்பனை ➤ மாட்டு சந்தையில் ரூ.30 லட்சத்துக்கு வர்த்தகம் ➤ பூலாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை ➤ பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை ➤ வீடு புகுந்து நகை திருடிய இருவர் கைது ➤ மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு ➤ லத்துவாடி ஊராட்சியில் ஆட்சியர் ஆய்வு ➤ கெங்கவல்லி: கால்நடை ஆராய்ச்சி பூங்கா விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் தகவல்
சேலம் மாவட்டம், கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பகுதியில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2 -ஆவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தில், சட்டப்பேரவையின் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
சபரிமலை சீசனை முன்னிட்டு, வரும் ஜனவரியில் சேலம் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத்- கோட்டயம், கோட்டயம்- செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07065/07066) சேவைகளுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (டிச.10) மதியம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. https://www.irctc.co.in/nget/train-search என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று பயணிகள் முன்பதிவுச் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பகுதியில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2 -ஆவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தில், சட்டப்பேரவையின் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
கடைகளின் வாடகை மீதான 18% ஜிஎஸ்டி வரி உயர்வை எதிர்த்தும், சேலம் மாநகராட்சி வணிக நிறுவனங்கள் சொத்து வரி பலமடங்கு உயர்வை எதிர்த்தும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரமைப்பின் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நாளை (டிச.11) காலை 10 மணிமுதல் மதியம் 12 மணி வரை ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதனால் நாளை கடையடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் இன்று(10.12.24) முக்கிய நிகழ்வுகள். ▶ இன்று காலை 9 மணி முதல் ஒய்எம்சிஏ அரங்கில் தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கூட்டம். ▶ சிஐடியு சார்பில் காலை 11.30 மணிக்கு ஆர்ப்பாட்டம். ▶காலை 10:30 மணிக்கு கோட்டை மைதானத்தில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம். ▶ இன்று 12 மணிக்கு இந்திய தொழிற்சங்க மையம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
சேலத்தில் இன்று(10.12.24) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. அதன்படி, கருப்பூர், மல்லியக்கரை, உடையார்ப்பட்டி, மேட்டுப்பட்டி, நங்கவள்ளி, தெடாவூர், எட்டிக்குட்டைமேடு, ஜலகண்டாபுரம் ஆகிய துணை மின்நிலையத்தின் கீழ் உள்ள ஊர்களில் மின்தடை ஏற்படுகிறது. சேலம் மக்களே உங்க துணை மின்நிலையம் எது என பார்த்து கொள்ளவும். ஷேர் பண்ணுங்க
(29/11/2024) அன்று தொடங்கி இன்று (09/12/2024) வரை 11 நாள்கள் நடைபெற்ற சேலம் புத்தகத் திருவிழாவில், மொத்தம் ரூ.120 கோடிக்கு 1,06,046 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. அதேபோன்று பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 1,30,282 நபர்கள் வருகைபுரிந்து பார்வையிட்டு பயன்பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.