India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம், காமலாபுரம் சேலம் விமான நிலையத்தில் இருந்து இன்று (டிச.23) இயக்கப்படும் அலையன்ஸ் ஏர் விமான சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சேலம் விமான நிலையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளின் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என விமான நிறுவனம் தகவல்.
மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டதன் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது பழுது சீரமைக்கப்பட்டது. அடுத்து நேற்று மாலை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. பழைய அனல்மின் நிலையத்தில் 1வது யூனிட் மற்றும் 4வது யூனிட் மட்டும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
டிச.23,30,ஜன.06 தேதிகளில் ப்ரௌனி- எர்ணாகுளம் ரயில், டிச.27,ஜன.03,10 தேதிகளில் எர்ணாகுளம்-ப்ரௌனி ரயில், மதுரை-கான்பூர் ரயில், டிச.25,ஜன.01, 08 தேதிகளில் கான்பூர்-மதுரை ரயில், டிச.25,ஜன.01 தேதிகளில் தன்பாத்- கோவை ரயில்,டிச.28-ஜன.04 தேதிகளில் கோவை-தன்பாத் ரயில் ஆகிய சேலம் வழியாக இயக்கப்படும் 6 ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சேலம் மாநகரில் இன்றைய (டிச.23) முக்கிய நிகழ்ச்சிகள். 1) காலை 8:30 மணி சூரமங்கலம் உழவர் சந்தை வெள்ளிவிழா. 2) காலை 8:30 மணி கருப்பூரில் திமுக தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம். 3) காலை 10 மணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்க கூட்டம். 4) காலை 11 மணி விசிக சார்பில் ரயில் மறியல் போராட்டம் சூரமங்கலத்தில் நடைபெறவுள்ளது.
வங்ககடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சேலத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இம்மழை விடாமல் தொடர்ந்து பெய்து வருவதால், இப்பகுதியில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் மக்களே உங்க ஏரியாவில் மழை பெய்தால், கமெண்ட் பண்ணுங்க.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, நாளை (டிச.23) பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நார்த்துக்கும், மறுமார்க்கத்தில், டிச.24- ஆம் தேதி திருவனந்தபுரம் நார்த்தில் இருந்து, பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில்கள் (06507/ 06508) இயக்கப்படுகிறது. சேலம் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்கள் நின்றுச் செல்லும்; முன்பதிவு தொடங்கியுள்ளது.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய (டிச 22) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், சேலம் ஊரகம் , ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி ,மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில், இரவு நேரங்களில் குற்றச்செயல்களை தவிர்த்திடவும், விபத்து மற்றும் இயற்கை இடர்பாடுகளில் மக்கள் சிக்கிக் கொண்டால் அவர்களை காத்திடவும், அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைக்கான டிச.22 அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் சரகத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஹெல்மெட் அணியாமல் சென்ற 49 பேர், அதிவேகமாக வாகனத்தை ஓட்டிய 233 பேர், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 183 பேர் என போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 1,392 பேருக்கு சுமார் ரூபாய் 61 லட்சத்து 50 ஆயிரத்து 760 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 136 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகன சோதனை தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1.காலை 10:30 மணி சேலம் கோட்டை மைதானத்தில் புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம். 2. காலை 10 மணி செவ்வாய்பேட்டை ஜெயின் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம். 3.காலை 10 மணி சேலம் தமிழ் சங்கத்தில் இந்திய குடியரசு கட்சியின் பொதுக்குழு கூட்டம். 4.மாலை 6 மணி கோட்டை மைதானத்தில் இஸ்லாமியர்கள் பொதுக்கூட்டம். 5.மாலை 6:30 மணி எஸ்சி சர்ச்சில் கிறிஸ்துவ கொண்டாட்டம்.
Sorry, no posts matched your criteria.