India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “கிறிஸ்துமஸ் நாளில், நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கும் நாம் செய்ய வேண்டும் என்ற இயேசுபிரானின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டு, அன்பு கிறிஸ்தவ சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும், எனது கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள் என்றார்.
சேலத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்து 6 மாதங்கள் ஆகியும் நாடாளுமன்றத் தேர்தல் செலவின தொகையைத் தேர்தல் ஆணையம் விடுவிக்காததால் வாக்கு எண்ணிக்கை மையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்ட பொதுப்பணித்துறையினர் சிரமம் அடைந்துள்ளனர். நாடாளுமன்றத் செலவினங்கள் செய்தது தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்பு; அவர்கள் முடிவு செய்து தொகையை விடுவிப்பார்கள் என சேலம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்.
ஃபெஞ்சல் புயல் 14 மாவட்டங்களில் பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி பிரபு நேற்று (டிச.24) சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
சேலம் மாநகரில், இரவு நேரங்களில், குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல்துறை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 24, இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்டத்தில், டிசம்பர் 2024 மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், வரும் 27ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற உள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, வேளாண்மை சம்பந்தமாக தங்களது குறைகளை, நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் வழங்கலாம் என, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களில் செயல்படும் கணினி முன்பதிவு மையங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நாளை (டிச.25) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. எனவே, ரயில் பயணிகள் இதனைக் கருத்தில் கொண்டு கணினி முன்பதிவு மையங்களுக்கு செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபாசன ஏரிகளை புனரமைப்பு செய்வது குறித்து சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (டிச.24) சேலத்தில் நடைபெற்றது.
பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சேலம் மத்திய மாவட்ட திமுக தலைவர் சுபாஷ் 31-வது திமுக வார்டு செயலாளர் இப்ராஹிம் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும், பெங்களூருவில் இருந்து குழுவாகச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.
சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதியான மணிகண்டனிடம் (34) இருந்து செல்போன், சிம் கார்டு, பேட்டரி உள்ளிட்டப் பொருட்களை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உதவி சிறை அலுவலர், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். செல்போனை பயன்படுத்திய கைதி மணிகண்டனை 3 மாதம் உறவினர்களிடம் பேசத் தடை விதித்து சிறைக் கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.