India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் வழியாக ஈரோடு- ஒடிஷா மாநிலம், சாம்பல்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. மார்ச் 12 முதல் ஏப்ரல் 30 வரை சாம்பல்பூரில் இருந்து ஈரோட்டிற்கும், மார்ச் 14 முதல் மே 02 வரை ஈரோட்டில் இருந்து சாம்பல்பூருக்கும் ரயில்கள் (08311/08312) இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, மார்ச் 12, 19 தேதிகளில் ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் (56108) ஈரோட்டில் இருந்து திருப்பத்தூர் வரையிலும், ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (56107) திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு ஈரோட்டிற்கு செல்லும். இந்த ரயில்கள் ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சேலம் மாநகரில் இன்று (11.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (மார்ச் 11) திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி. ஆத்தூர், நரசிங்கபுரம், கெங்கவல்லி, ஏத்தாப்பூர், பைத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் ராமநாதசுவாமி கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன..இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த லிங்கை <
சேலம் வழியே இயக்கப்படும் ஈரோடு-சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, சாம்பல்பூர்-ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் (08311), நாளை 12-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை புதன்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை – ராமேஸ்வரம் விரைவு ரயில், இன்று முதல் எல்.எச்.பி. தொழில்நுட்ப வசதிகளுடன்கூடிய ரயிலாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது.”இந்த ரயிலில் அதிக இருக்கைகள் இருப்பதால், கூடுதல் பயணிகள் பயணிக்கலாம். அதிவேகத்தில் ரயிலை இயக்கினாலும் அதிர்வுகள் இருக்காது. நவீன கழிவறை, டிஸ்க் பிரேக் வசதி, தீத்தடுப்புக் கருவிகள், சிறந்த முறையிலான குளிர்சாதன வசதி உள்ளிட்ட அதிநவீன சாதனங்கள் இந்தப் பெட்டிகளில் பொருத்தப்பட்டது.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் தங்கள் வருமானத்தை தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறாமல் அரசின் பாதுகாப்பான, உத்தரவாதமான சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெற வேண்டும். மாநில அளவில் சேலம் மாவட்டம் அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் ரூ.9,101.99 கோடி வசூலித்து தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடம் பெற்று சாதனை” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலத்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் eKYC பதிவினை மேற்கொள்ளாமல் உள்ளார்கள். அவர்களுக்கு தங்கள் e-KYCயை முடிப்பதற்கான கடைசி தேதி மார்ச்.25 ஆகும். இந்த செயல்முறை ஆன்லைனிலோ அல்லது ரேஷன் கடைகளிலோ மேற்கொள்ளலாம். இதற்கு ஆதார் அட்டை, மொபைல் எண் கட்டாயம் தேவை”. இதை ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில், இரவு நேரங்களில் சட்டவிரோத சம்பவங்களைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று இரவு சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.