India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்ட வள பயிற்றுனர் பணி இடத்துக்கு எழுத்து, நேர்முகத்தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. விண்ணப்பிப்போர் 25- 55 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் 3 ஆண்டு அனுபவம் தேவை. தமிழ், ஆங்கிலம் எழுத படிக்க, பேசுவதில் சிறப்புடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலக அறை எண் 207-ல் உள்ள திட்ட இயக்குநர் அறையில் வரும் டிச.31 மாலை 5க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அரசுப்பள்ளி, அதன் உதவிப்பெறும் பள்ளி, கட்டாய கல்வி உரிமைச்சட்டம் மூலம் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம் மூலம் 21,151 மாணவிகள், தமிழ் புதல்வன் திட்டத்தில் 14,808 மாணவர்கள் என மொத்தம் 35,959 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருவதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, கொச்சின், சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை இயக்கப்படுகிறது. நேற்று (டிச.25) அதிகாலை முதல், சேலத்தில் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் காலை 11:00 மணிக்கு பெங்களூரு செல்லும், ‘இண்டிகோ’ விமானத்தை, சேலத்தில் தரையிறக்க முடியாமல், தாரமங்கலம் வரை இரு முறை வட்டம் அடித்து காலை 11:25 மணிக்கு தரையிறங்கியது. மீண்டும் காலை 11.50 மணிக்கு புறப்பட்டு சென்றது.
சேலம் மாவட்டம் (டிச.26) இன்று முக்கிய நிகழ்வுகள். 1) காலை 10 மணி அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில் உண்டியல் என்னும் பணி சுகவணேஸ்வரர் திருக்கோவிலில். 2) காலை 10:30 மணி சேலம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்தியடிகள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை. 3) மாலை ஆறு மணி பழைய பேருந்து நிலையத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடக்கிறது.
சேலம், வாழப்பாடி உட்கோட்டம் ஏத்தாப்பூர் காவல் நிலைய எல்லை ஏத்தாப்பூர் பேரூராட்சி 4வது வார்டு அருகே உள்ள வசிஷ்ட நதி ஆற்றில் இன்று காலை 8.15 மணி அளவில் அரவிந்த் (29 )என்பவர் ஆற்றில் குளிக்கும் போது, நீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் பகுதிக்கு சென்று அரவிந்த் உடலை மீட்டு, விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்ட காவல்துறை, பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தற்போது பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பள்ளிகள் விடுமுறை காலங்களில், சிறார்களை, தனியே நீர் நிலைகளில் குளிக்க அனுப்பாதீர்கள். சாலை பாதுகாப்பு, போதைப் பொருள் ஒழிப்பு தடுப்பு, ஆன்லைன் நிதி மோசடி, நிதி நிறுவன மோசடி உட்பட விழிப்புணர்வுகளை காவல்துறை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் வரி வசூலில் சேலம் 12ஆவது இடம் பிடித்துள்ளது. சேலம் மாநகராட்சி நிலுவை, நடப்பாண்டு வரி சேர்த்து 116.34 கோடி ரூபாய் வசூல் செய்து 44 சதவீதத்துடன் 12ஆவது இடம் பிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் சென்னையை தவிர்த்து கோவை, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட 24 மாநகராட்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல்துறை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 25 இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
➤சேலம் மாவட்டத்தில் இன்று கலைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ➤சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் நாளை நடைபெறுகிறது. ➤மாவட்டம் முழுவதும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாட்டம் ➤சேலத்தில் 100 கிலோ குட்கா கடத்திய இருவர் கைது: காவல்துறை அதிரடி ➤சேலம் வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து
சேலம் வழியாக இயக்கப்படும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டிச.26, 30, ஜன.2, 6ல் திருவனந்தபுரம் நார்த்-கோர்பா, டிச.28 ஜன.01,04,08-ல்கோர்பா- திருவனந்தபுரம் நார்த்,டிச.26,ஜன.03,05-ல் கோரக்பூர்-திருவனந்தபுரம் நார்த்,டிச.31,ஜன.07,08-ல் திருவனந்தபுரம் நார்த்-கோரக்பூர்,டிச.28, ஜன.04-ல் திருவனந்தபுரம் நார்த்-இந்தூர், டிச.30, ஜன.06-ல் இந்தூர்-திருவனந்தபுரம் நார்த் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.