Salem

News December 28, 2024

இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் (டிச.28) இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 9 மணி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மாநாட்டை பேரணி கோட்டை மைதானத்தில் நடைபெறுகிறது. 2) 10 மணி தமிழ்நாடு கல்வி பயிற்சி மாற்றுத்திறன் பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டம். 3) 12 மணி அழகாபுரம் சமுதாயக்கூடத்தில் கைத்தறி கண்காட்சியை அமைச்சர்கள் பார்வையிடுகிறார். 4) மாலை 6 மணி அத்வைத ஆசிரமத்தில் புத்தக வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. 

News December 28, 2024

சேலத்தில் மழை

image

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை காணப்பட்டது. எனவே, சேலம் மக்களே உங்க ஏரியாவில் எங்கு மழை என்பதை கமெண்ட் பண்ணுங்க.

News December 28, 2024

‘தகவல்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம்’

image

வங்கியிலிருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் சைபர் குற்றவாளிகள் உங்கள் கிரெடிட் கார்டின் கடன் வரம்பை (Limit) அதிகரிக்க உதவுவதாகவும், அதற்கு உங்கள் கிரெடிட் கார்டு விவரங்கள், OTP உள்ளிட்ட வங்கி சார்ந்த மற்றும் தனிப்பட்ட தகவல்களை பகிருமாறு கேட்டால் எந்த தகவலையும் எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம். நிதிசார் ஆன்லைன் குற்றம் பற்றிய புகாருக்கு 1930 எண்ணை அழைக்கவும்”- சேலம் மாவட்ட காவல்துறை!

News December 28, 2024

சேலம்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் 

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (27-ம் தேதி) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News December 28, 2024

சேலம் மாநகர இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (டிச 27) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.

News December 27, 2024

மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்!

image

சேலம் மாவட்டத்தில் தனித் தேர்வர்களால் பெறப்படாத 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை, சேலம் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வரும் (28.03.25) தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மார்ச் 2003 முதல் ஆகஸ்ட் 2019 வரையில் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் அஞ்சல் மூலம் பெறாதவர்கள், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

News December 27, 2024

சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி- கரூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இருமார்க்கத்திலும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும். திருச்சியில் இருந்து அதிகாலை 05.25 மணிக்கு புறப்பட்டு காலை 07.20 மணிக்கு கரூர் வந்து சேரும். இரவு 08.05 மணிக்கு கரூரில் இருந்து புறப்படும் ரயில் இரவு 10.50 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

News December 27, 2024

சேலம் மாவட்டமும் மன்மோகன் சிங்கும்

image

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சேலத்தில் தொடங்கி வைத்த திட்ட பணிகள். கடந்த 2006ஆம் ஆண்டு பிப்.4ஆம் தேதி சேலத்தில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட மன்மோகன் சிங், சேலம் – செங்கப்பள்ளி 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு செப்.05ல் சேலத்திற்கு மீண்டும் வருகை தந்த மன்மோகன் சிங், சேலம் உருக்காலை நவீனமயமாக்கல், விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

News December 27, 2024

சேலத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் இன்று (டிச.27) நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், தோட்டக்கலை துணை இயக்குநர் மஞ்சுளா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News December 27, 2024

உரங்கள் தங்கு தடை இன்றி அளவு வழங்க வேண்டும்

image

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பெரும்பாலோர் தங்களுக்கு உரிய உரங்கள் போதிய அளவு கிடைப்பதில்லை என்றும். பயிர்களுக்கு உரிய மருந்து பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் விவசாய நிலங்கள் பல பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்றும் குறைகளை தெரிவித்தனர். 

error: Content is protected !!