India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். ஜனவரி.20 இரவு அதிகாரிகள் விவரம்.
சேலம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் இன்று ஆய்வு செய்தார். மேலும், அங்கு தயாரிக்கப்படும் உணவுகளின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, மேயர் ராமச்சந்திரன், மருத்துவமனை முதல்வர் தேவி மீனால் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் இருந்தனர்.
சேலம் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வந்த மேனகா இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அந்த பொறுப்பு காலியாக இருந்தது. இந்த நிலையில் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக ரவிக்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய் துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பை இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் வருகின்ற 24ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார்.
சேலம்- உளுந்தூர்பேட்டை இடையே விபத்துகளை குறைக்க ரூபாய் 252 கோடி மதிப்பீட்டில் 13 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விபத்து நடைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கும் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க.வின் சேலம் மாநகர் மாவட்டத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வி.டி.சசிகுமார் இன்று (ஜன.20) சேலம் மாநகரத்தில் உள்ள அம்பேத்கர், மகாத்மா காந்தி, விஜயராகவச்சாரியார், ராஜாஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். இந்நிகழ்வில், பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் நடந்த வாகனத் தணிக்கைப் பணியின் போது, மெத்தனம் காட்டியதாக பெண் காவல் உதவி ஆய்வாளர், 3 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 10 பேரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து சேலம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. கௌதம் கோயல் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் மேட்டூர் ஆர்.எஸ்., மேச்சேரி, ஜலகண்டாபுரம், கருப்பூர், மேட்டுப்பட்டி, உடையாப்பட்டி, மல்லியக்கரை, வேம்படிதாளம், எட்டிக்குட்டைமேடு, நங்கவள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் நாளை (ஜன.21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி அருகே உள்ள சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் ஸ்டேடியத்தில் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது. வரும் ஜன.23- ஆம் தேதி காலை 09.30 மணிக்கு கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் தமிழ்நாடு-சண்டிகர் அணிகள் மோதுகின்றன. ஜன.23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் சேலத்தில் ரஞ்சிக்கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டி முதன் முறையாக ஜியோ சினிமாவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் சேலம் மாவட்டம், அரிசிபாளையத்தைச் சேர்ந்த விக்கி என்பவரின் காளை கலந்து கொண்ட நிலையில், காளையை மாடுபிடி வீரர்கள் தொட்டுக்கூடப் பார்க்க முடியாததால் அந்த காளை ரூபாய் 15 லட்சம் பரிசை வென்று அசத்தியது. சொந்த ஊர் திரும்பிய காளைக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.