Salem

News September 3, 2025

சேலம்: முன் அனுமதி பெற வேண்டும் காவல் ஆணையாளர்!

image

சேலம் மாநகர எல்லைக்குள் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தவோ, பேரணி மேற்கொள்ளவோ, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ, குறிப்பிட்ட நாட்களுக்கு ஐந்து தினங்களுக்கு முன்னதாகவே சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார். மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

News September 3, 2025

சேலம் : இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாநகராட்சியில் 3.09.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

News September 3, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.03) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News September 3, 2025

சேலம்: பொதுமக்கள் மனுக்கள் மீது விரைவு விசாரணை!

image

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் கலந்து கொண்டு, பொதுமக்கள் அளித்த மனு மீதான விசாரணை நடத்தினார். இந்த முகாமில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News September 3, 2025

கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன் வழங்க ஏற்பாடு

image

நாளை சுப முகூர்த்த தினம் என்பதால் பத்திரபதிவு அதிகளவில் தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நாளை கூடுதலாக டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 150 டோக்கன் வழங்கப்பட்ட வந்து நிலையில், 200 ஆக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு டோக்கன் வழங்கப்படுகிறது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவிப்பு.

News September 3, 2025

சேல: 15 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது!

image

சேலம் மாவட்டத்தில் கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மதிவாணன், இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கமலக்கண்ணன், மல்லியக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாபு, காமராஜர் நகர் காலனி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷீலாதேவி உள்பட 15 ஆசிரியர்களுக்கு அரசின் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.செப்.05- ல் சென்னையில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

News September 3, 2025

சேலம்: ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு!

image

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (16845) செப்.09, 16, 23, 30 தேதிகள் தவிர வரும் செப்.30 வரை திண்டுக்கல் வரையும், மறுமார்க்கத்தில், செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (16846) செப்.03, 10, 17, 24 தேதிகள் தவிர செப்.30 வரை திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு ஈரோடு செல்லும். செங்கோட்டை-திண்டுக்கல் இடையே இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News September 3, 2025

சேலம்: அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

image

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் 2025-2026ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என சேலம் ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 109-ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் செப்.12 மாலை 3 மணிக்குள் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 3, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக, ஒரு மெயில் வந்தது. இதனை அடுத்து சேலம் மாநகர கமிஷனர் அறிவுறுத்தலின் பேரில், காவல்துறையினர் தற்பொழுது ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை செய்து வருகின்றனர். மூன்றாவது முறையாக தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பரபரப்பு நிலவு வருகிறது.

News September 3, 2025

சேலம்: B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் வேலை!

image

சேலம் மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Deputy Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 18-09-2025 ஆகும். SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!