India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர காவல் துறை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைக்கான (ஜனவரி 24) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகள் மற்றும் அனைத்து நகராட்சிகள் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகள் நாளை நடைபெற உள்ளது. ஜனவரி-25 தேவையான நாளை பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்தல் மற்றும் சேகரித்தல் நிகழ்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்
சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25 ஆம் ஆண்டில், சேலத்திலுள்ள மகளிர் சுய உதவி குழுவினருக்கு,ரூ.1602 கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், இதுவரை ரூ.1200 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள ரூ.402 கோடியை, தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் துவங்க ஆர்வத்துடன் விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கிட வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் இன்று (24.01.2025) அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் நேர்காணல் நடத்தி, சேலம் மத்திய மாவட்டச் செயலாளராக தமிழன் ஆ.பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். இணை செயலாளராக சுப்ரமணி, பொருளாளராக ராஜசேகரன், துணை செயலாளர்களாக தங்கராஜ், விழியரசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 10 செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாழப்பாடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் சண்டிகருக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே சித்தார்த் சதம் விளாசி அசத்தியுள்ளார். இவர் இந்திய U19 அணிக்காக, 6 போட்டிகளில் 4 அரை சதங்களை அடித்து அதிரடி காட்டியதாலும், தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடியதன் காரணத்தாலும், சிஎஸ்கே அணியால் 30 லட்சத்திற்கு வாங்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் வழியாக செல்லும் சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரயில்களை (06057/ 06058) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இன்று (ஜன.24) சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் வடக்கிற்கும், மறுமார்க்கத்தில், ஜன.26- ஆம் தேதி திருவனந்தபுரம் வடக்கில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அன்னை தெரசா அறக்கட்டளை என்ற பெயரில், முதலீடு செய்தால் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கும் என பொதுமக்களிடம் பணம் பெற்ற 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.அறக்கட்டளை இயங்கிய திருமண மண்டபத்தில் ரூ.12 கோடி பணம், 2.5 கிலோ தங்கம்,13 கிலோ வெள்ளி பறிமுதல். கைதான விஜயா பானு, ஜெயப்பிரதா மற்றும் பாஸ்கர் மூவரும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சேலத்தில் நடைபெறும் டி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு-சண்டீகர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சண்டீகர் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும், ஆண்ட்ரே சித்தார்த்தின் அபார சதத்தால் 301 ரன்கள் குவித்து ஆல்-அவுட்டானது. தற்போது சண்டீகர் அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் வீட்டுக்குள் புகுந்து நேற்று (ஜன.23) கடத்தப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டார். பென்னாகரத்தைச் சேர்ந்த ரோஷினி காதல் திருமணம் செய்தது பிடிக்காமல், பெற்றோர் கடத்தியதாக புகார்; கணவர் வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட ரோஷினியை மீட்ட எடப்பாடி போலீசார் அவரது பெற்றோர், அக்கா, மாமாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சேலம் மாநகரில்இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 9 மணி ராஜஸ்தானி சங்கம் சார்பில் சங்க கட்டடத்தில் அக்குபஞ்சர் பரிசோதனை சிகிச்சை முகாம்., 2) காலை 10 மணி கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளி புதிய வகுப்பறைகளை அமைச்சர் திறந்து வைப்பு, 3) காலை 10 மணி அரசு மகளிர் கல்லூரி என் எஸ் எஸ் மாணவிகள் துப்புரவு முகாம் 4) மாலை 6 மணிக்கு பழைய பேருந்து நிலையத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி.
Sorry, no posts matched your criteria.