India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகைகளை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு சேலம் வழியாக செல்லும் மதுரை- பெங்களூரு கண்டோன்மென்ட்- மதுரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் (20671/20672) கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்றும், புதிய நடைமுறை வரும் செப்.11- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 148 உதவியாளர் பணியிடங்களுக்கு 4,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் அக்.11- ஆம் தேதி 4 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடத்தப்படவுள்ளது. 200 கேள்விகளுடன் 170 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சிப் பெறுபவர்கள் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக இன்று செப்டம்பர் 5-ம் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் “கற்பது மட்டும் போதாது, கேட்பதும்,கேள்வி கேட்பதும் தான் முன்னேற்றம்” என கற்றுத் தந்த நம் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

சேலம் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <

2025ஆம் ஆண்டு தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு எனப்படும் தர அளவீட்டில் கலந்துகொண்ட, 4,045 தேசிய அளவிலான உயா்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில், சேலம் பெரியாா் பல்கலைக்கழகம், தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் 94ஆவது இடத்தையும், தமிழக அளவில் 8-வது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் தேசிய தர நிர்ணய குழுவில் ஏ++ தரத்தை பெற்று தொடர் சாதனை படைத்து வறுகிறது.

மிலாது நபி, ஓணம் தொடர் விடுமுறையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை! கருப்பூர், நத்தக்கரை, மேட்டுப்பட்டி, வைகுந்தம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆம்னி பஸ்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

சேலம் செப் 6 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் ▶️அஸ்தம்பட்டி தொங்கும் பூங்கா திருமண மண்டபம்▶️ சன்னியாசி குண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ▶️தாரமங்கலம் பொன்னுசாமி திருமண மண்டபம் தாரமங்கலம்
▶️ வனவாசி முருகேசன் முதலியார் திருமண மண்டபம் சந்தைப்பேட்டை ▶️கொங்கணாபுரம் திருக்குறள் திருமண மண்டபம் புதுப்பாளையம் ▶️பனமரத்துப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் ▶️சங்ககிரி பார்வதி பாய் திருமண மண்டபம்

சேலம் மக்களே, சொந்த வீடு என்பது உங்கள் கனவா? அந்தக் கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது; தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஈரோட்டில் 250 மேற்பட்ட வீடுகளைக் கட்டியுள்ளது. இந்த வீடுகளைப் பெற, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.சொந்தமாக வேறு எந்தச் சொத்தும் இருக்கக்கூடாது. <

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்கள் விருதுக்கான விண்ணப்பங்களை https://www.tntourismawards.com/ என்ற இணையதளத்தின் வாயிலாக செப்.15- க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலரை 89398-96397, 0427-2416449 ஆகிய தொலைபேசி எண்களை அழைக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப பணிகள் காரணமாக, வரும் செப்.06, 08, 09, 13 ஆகிய தேதிகளில் சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் (56108) மொரப்பூர் வரையிலும், மறுமார்க்கத்தில், ஜோலார்பேட்டை-ஈரோடு பயணிகள் ரயில் (56107) மொரப்பூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு செல்லும்; இந்த ரயில்கள் மொரப்பூர்- ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படாது என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.