India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல் விடுமுறை நிறைவடைந்ததையொட்டி, தென்மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் மற்றும் நெல்லையில் இருந்து சேலத்திற்கு ரூபாய் 3,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் ரூபாய் 800 வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது பயணிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சமலை சித்தர்கோவிலுக்கு வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அங்கு பக்தர்கள் குளிக்க 7 கிணறுகள் உள்ளன. அங்கு குளிக்கும் பெண்கள் உடை மாற்ற அறை இல்லை. காரில் வரும் பெண்கள், கிணற்றில் குளித்துவிட்டு காரில் சென்று உடை மாற்றுகின்றனர். மற்றவர்கள், உடை மாற்ற சிரமப்படுகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
அரக்கோணம்- சேலம் மெமு ரயிலின் பெட்டிகள் கும்பமேளாவுக்காக உ.பி.க்கு அனுப்பப்பட்டுள்ளதால் நாள்தோறும் இருமார்க்கத்திலும் இயக்கப்படும் அரக்கோணம்- சேலம் மெமு ரயில் சேவைகள் (16087/16088) நேற்று முதல் மறுஉத்தரவு வரும் வரை ரத்துச் செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் சோளிங்கர், வாலாஜா,காட்பாடி, குடியாத்தம்,ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் சென்றது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் ‘பூட்டர் பவுண்டேஷன்’ தொடர்பான வழக்கை விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து புகார் அளித்த பல்கலை தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல், நிர்வாகி கிருஷ்ணவேணி, சட்ட ஆலோசகர் இளங்கோவன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானவர்களிடம் நேற்று (ஜன.18) உதவி கமிஷனர் ரமலீ ராமலட்சுமி விசாரணை மேற்கொண்டார்.
மதினா பள்ளிவாசல் ஈத்கா வழித்தடம் பிரச்சனை சம்பந்தமாக, அதிகாரிகளிடம் பல முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அனைத்து கட்சி மற்றும் சமுதாய அமைப்புகளையும் ஓரணியில் திரட்டி தீவட்டிபட்டியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது வருகின்ற ஜன.23 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே சேலம் போலீசார் பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று சேலம் போலீசார் வெளியிட்டு விழிப்புணர்வு போஸ்டரில்,”சமூக ஊடகங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்,ஆன்லைனில் உலவும் போலிகளை நம்பி உங்களது தனிப்பட்ட அல்லது வங்கி சார்ந்த தகவல்களை பகிர்ந்து மோசடிக்கு ஆளாக வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
சென்னையைத் தொடர்ந்து தமிழகத்தில் மேலும் 8 நகரங்களில் ‘நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கோவை, மதுரை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், நெல்லை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ‘நம்ம ஊரு திருவிழா’ நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக, சேலம்- சென்னை விமான கட்டணத்தை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கு ரூ.5,000 வரையும், சேலத்திலிருந்து சென்னை செல்வதற்கு ரூ.10,000 வரையும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் விடுமுறை நாட்களான ஜன.13ஆம் தேதி முதல் ஜன.16ஆம் தேதி வரை நான்கு நாட்களில் ரூபாய் 725.56 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் திருச்சி மண்டலம் ரூபாய் 179 கோடியுடன் முதலிடமும், சேலம் மண்டலம் ரூபாய் 151.60 கோடியுடன் 2-வது இடமும் பிடித்துள்ளன.
தை, மாசி மாதங்களில் அடுத்தடுத்து 15 முகூர்த்தங்கள் வருகின்றன. இதன் காரணமாக, சேலம் சரகத்தில் பட்டுச்சேலைகளின் விற்பனை களைகட்டியுள்ளது. பட்டுச்சேலை, ஜரிகை சேலைகள் பல வகைகளில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. 2வது அக்ரஹாரம், இளம்பிள்ளை, சிந்தாமணியூர், ஜாரி கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.
Sorry, no posts matched your criteria.