India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக்.23) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமுதி அடுத்த பசும்பொன்னில் அக்டோபர் 30 அன்றுமுத்துராமலிங்கத் தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 62வது குருபூஜை விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் தமிழக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று(அக்.,22) ராம்நாடு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் & எஸ்பி சந்தீஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மறைத்து என் மீதும் என் குடும்பத்தினர்கள் மீதும் தவறான தகவல்களை பத்திரிக்கைகள் மூலம் அவதூறு பரப்பி வருகிறவர்களை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று பால்வளத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்,எஸ், ராஜகண்ணப்பன் பதிவு செய்துள்ளார்
இராமநாதபுரத்தில் வருகிற (அக்.24) பாரதி நகர் பீமாஸ் மஹாலில் மாவட்ட அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் இராமநாதபுரம் மாவட்ட நான்கு சட்டமன்ற தொகுதி பார்வையாளர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். எனவே மாநில மாவட்ட அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் பேராவூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆண்டி மகன் பசுபதி (30). இவர் தனது நண்பர் கவியரசன் என்பவருடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். கேணிக்கரை அருகே சென்ற போது முன்னால் சென்ற தனியார் பஸ்சின் பக்கவாட்டில் இடித்து விபத்துக்குள்ளானதில் பசுபதி பலியானார். கவியரசன் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க, ராம்நாடு தாம்பரம் வாரம் மும்முறை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, வண்டி எண் 06103 (நவ,02) முதல் (நவ,30) வரை வியாழன், சனி, திங்கள் வாரம் மும்முறை ரயில் சேவையும், வண்டி எண் 06104 (நவ,30) (டிச,01) வரை ராம்நாடு தாம்பரம் வரை வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய தினங்களில் இருந்து புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பனில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாம்பன் இரயில் பாலத்திற்கு Dr. APJ Abdul Kalam Railway Bridge Pamban என்று பெயர் வைக்க இந்திய குடியரசுத் தலைவர் -க்கு பாம்பனை சேர்ந்த சமூக ஆர்வலர் சிக்கந்தர் கோரிக்கை மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்திய இரயில்வே துறைக்கு இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு பரிந்துரை செய்துள்ளார். எதிர்பார்ப்பில் தீவு மக்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
1959 ஆம் ஆண்டு (அக்,21) லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்று இருந்த இடத்தில் சீனா ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (அக்,21) இராமநாதபுரத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவரை நியமனம் செய்ய நீதிமன்றம் மூலம் பொதுநல வழக்கு தொடர்ந்தார் தொண்டியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது அதன்படி தமிழக அரசு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பரணிதரனை நியமித்து உத்தவிட்டதால் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தாம்பரம் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் வண்டி எண்: 06103 வாரத்தில் 3 நாட்கள் (திங்கள், வியாழன் & சனி) ஆகிய தினங்களில் மட்டும் தாம்பரத்திலிருந்து மாலை 5:00PM புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு மறுநாள் காலை 4:55AM மணிக்கு வந்தடையும். இந்த ரயில் கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக செல்லாது, அதற்கு மாற்றாக மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.